நம்ம முத்தண்ணா இருக்காரே ... அவர் சரியான ஞாபக மறதி பேர்வழி!!!
அவர் ஒரு நாள் தனக்குக் தெரிந்தவரைப் பார்க்க போனார்...
இரட்டையர்களைப் பார்க்க போனார்...
உள்ளே போனவுடன் தான் ஞாபகம் வந்தது !!
அவர் போன வீட்ட்டுக்காரரருக்கு இரட்டை மகன்கள்!!!
ரெண்டு பேருமே படு சுட்டி!!
அவங்க பேர் இந்திரன், சந்திரன் என்பது மட்டும் முத்தண்ணாவுக்குத் தெரியும்...
ஆனால், யார் இந்திரன், யார் சந்திரன் என்று மறந்து விட்டார்..
அவங்ககிட்டயே கேட்க வேண்டிய நிலைமை!!
ஆனா, அங்க தான் பிரச்சனையே..
இரண்டு பேர்ல, இந்திரன் உண்மைய மட்டும் தான் பேசுவான்..
ஆனா, சந்திரன் அப்படியே எதிர்.. வாயில் இருந்து பொய்யைத் தவிர எதுவும் வராது!!
(அதுக்காக ஒண்ணூம் ஒண்ணும் எத்தனை என்று கேட்டால் 3 னு சொல்வான் என்று நினைச்சுக்காதீங்க!!)
நம்ம முத்தண்ணா தன்னோட மூளையைப் பயன்படுத்தி ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். அதுவும், அவங்கள்ள ஒருத்தர் கிட்ட தான் கேட்டார்....
யார் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்!!!
அவர் அப்படி என்ன தான் கேட்டு இருப்பார்?
கொஞ்சம் அவர்கிட்டே கேட்டாவது சொல்லுங்களேன்!!
Bookmarks