தரமற்ற பின்னூட்டத்தை ஒதுக்கிவிடலாமே!இணைய காசுவைக் குறைப்
பது போன்ற தண்டனை தேவையில்லை என்பது என் கருத்து.
தரமற்ற பின்னூட்டத்தை ஒதுக்கிவிடலாமே!இணைய காசுவைக் குறைப்
பது போன்ற தண்டனை தேவையில்லை என்பது என் கருத்து.
தவறுகள் மறைக்கபடகூடாது அந்த தவறினை செய்தவர்களும் அதனை காண்பவர்கள் அதே தவறினை செய்யாதிருக்க இது போன்ற இணையகாசு குறைப்பு என்பது தான் சரியாக இருக்கும் மற்றொன்று நண்பர் கூறுவது போல் தவறான பதிவுகளை நீக்கினால் அந்த பதிவினை பதிவிட்டவரின் மனநிலையை பாதிக்கும் மேலும் அவர் தம்தவறினை உணராமல் வீண் வாதம் செய்யவும் வாய்ப்புண்டு...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
பின்னூட்டங்களைப் பெருக்க சொல்லிய யோசனையை வரவேற்கிறேன்.
அதே நேரத்தில் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதில் தற்போதிருக்கும் நடைமுறையான 'தவறான பதிவுகளை பொறுப்பாளர்கள் திருத்தியமைப்பது அல்லது நீக்குவதே' தொடரட்டும்.
இ-காசு குறைப்பு எதுவும் தேவையில்லை
என்பன எனது கருத்தாகும்.
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
மன்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட பதிவுகளை நீக்குதல் தமிழ்மன்றத்துக்கு அழகல்ல... அழகாக பின்னூட்டம் இடுபவர்களை வரவேற்க போட்டிகள் வைக்கலாமே அன்றி மற்றவர்களை ஒதுக்க அல்ல. (இது என் கருத்து)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
நண்பர்களே..
எடுத்த வீச்சில் பதிவுகளை நீக்குவதில்லை. மன்ற ஒழுங்கைக் கருத்தில் இருத்தித் திருத்த முடியுமா என்றே பார்க்கிறோம். திருத்த இயலாது என்று ஒருமித்த கருத்துக்கு நிர்வாகம் வரும் போது நீக்குகிறோம்.
பதிவுகளைத் திருத்தும் போதோ நீக்கும் போதோ பதிவருக்கு தனிமடலில் தகவல் தெரிவிக்கிறோம். அந்த மடல் பதிவிலிருந்த தவறையும் நீக்கப்பட்ட/திருத்தப்பட்ட காரணத்தையும் நிச்சயம் உணர்த்தும். (இன்னும் மடல் வரலையேன்னு யாரும் கேட்டுடாதீங்க. வரும்..)
அதனால் பதிவுகளைத் தரப்படுத்துவதில் தற்போதுள்ள நடைமுறையைத் தொடர்வோம்.
சிறந்த பின்னூட்டவாதியை தெரிவு செய்து ஊக்குவிப்பது பின்னூட்டங்களைப் பெருக்குவதுடன் தரமானதாகவும் ஆக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கனவே கேட்டிருக்கிறேன். சிறந்த பின்னுட்டவாதியை எப்படித் தெரிவு செய்யப் போகிறோம். கவிதைப்பகுதியிலிருந்தா? கதைப்பகுதியிலிருந்தா? கட்டுரைப்பகுதியிலிருந்தா? விளையாட்டுப்பகுதியிலிருந்தா? விவாதப்பகுதியிலிருந்தா? அரசியல்பகுதியிலிருந்தா? எல்லாப் பகுதியிலும் இருந்தா...?
இப்படி ஒழுங்குகளை வரையறுத்தால் அடுத்த கட்டத்துக்குப் போகலாம். விரைந்து வரையறுப்போம்.
Last edited by அமரன்; 01-03-2011 at 10:16 PM.
எல்லா பகுதியிலும் இருக்கட்டுமே - ஒரு பகுதிக்கு கொடுத்து மற்ற பகுதி என்ன பாவம் பண்ணுச்சி துணை நிர்வாகி அவர்களே (நாட்டுல துணைக்கு தான்யா மவுசு)
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
பின்னூட்டங்கள் பற்றி அலசப்படும் போது, 'பின்னூட்டத் திலகம்' தாமரை அவர்கள் வந்துவிட்டது நம் பாக்கியம் தான்...! களை கட்டிவிடும்...
எல்லா பகுதிகளிலும் அவர்களின் பின்னூட்டம் எப்படி இருக்கிறது என்று அலசிப்பார்த்துதான் முடிவெடுக்கவேண்டும். ஒரு பகுதியை மட்டும் பார்த்து தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுத்தப்படாதே.
கிரிக்கெட் விளையாட்டுக்காரர் என்றால், அவருக்கு பேட்டிங், ஃபீல்டிங், பெளலிங் இதெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் தானே....? அதுபோல் இங்கேயும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
நன்றி
அன்புடன் உதயா
ஆல்ரவுண்டர்களைத்தான் பின்னூட்டத் திலகங்களாகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
பதிவுகளை கட்டுபடுத்துவதில் நண்பர் செல்வா கூறுவது போல் தற்போதைய நடைமுறையே தொடரட்டும் ..நான் இறுதியாக பதிவிட்ட பின்னோடோட்டத்தில் தவறான தரமற்ற பின்னோட்டத்திற்கு இணையகாசினை குறைக்கலாம் என்பதற்கு பதில் பதிவிற்கு என்று குறிப்பிட்டுவிட்டேன் ...ஏனெனில் தற்போது சில பதிவுகளில் நகைசுவையாக எழுதுகிறோம் என்று ஒரு சிலர் மற்றவர்கள் மனதினை நோகடிக்கும் வகையில் பின்னோட்டம் இடுகிறார்கள் ..அதுமட்டுமின்றி ஒருவரை நேரடியாக பின்னோட்டம் மூலம் சாடுவதும் நிகழ்கிறது ..இது போன்று நிகழாதிருக்க தவறான பின்னோட்டத்திற்கு இணையகாசு குறைப்பு என்பது சரியாக இருக்கும் .....
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக பின்னோட்டம் இடுபவர்களில் சிறந்த பின்னோட்டம் இடும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் எடுத்துகாட்டாக முல்லையில் சிறந்த பின்னோட்டம் இடுபவருக்கு முல்லை அன்பர் அதுபோல் மற்ற பிரிவிற்கும் ஒவ்வொருவரை தேந்தெடுத்து இதுபோல் அந்ததந்த பிரிவின் பேரை முன்னாலிட்டு ஏதேனும் அன்பர் என்பது போல் ஏதேனும் பெயரிட்டு அழைக்கலாம் ..முடிவில் அனைத்து பிரிவிலும் சிறந்த பின்னோட்டம் இடும் ஒருவரை தேந்தெடுத்து அவருக்கு இம்மாத சிறந்த பின்னோட்ட பதிவர் எனும் பட்டம் கொடுக்கலாம்...இவ்வாறு செய்வதன் மூலம் நண்பர்கள் பலர் அப்பட்டம் பெறுவர்..இது மற்றவர்களை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்....
Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 03-03-2011 at 07:11 AM.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks