Page 7 of 7 FirstFirst ... 3 4 5 6 7
Results 73 to 84 of 84

Thread: கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

                  
   
   
  1. #73
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இனிமேல் என் வாழ்க்கையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தரப்போவதில்லை.. இது சலித்துச் சொல்வதல்ல.... கடவுளை நன்கு புரிந்து கொண்டதால் சொல்கிறேன்.

    இருக்கு ஆனா இல்லை/

    இந்த ஒற்றை வார்த்தைதான் பதில்.... பார்த்தா காமெடியாத்தான் இருக்கும். ஆனால் பல அர்த்தங்களை உள்ளடக்கியது!!

    தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #74
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!
    சுட்டியை தாருங்கள் ஆதவா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #75
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    சுட்டியை தாருங்கள் ஆதவா
    அந்த திரியின் பெயர் ஆத்திகம் நாத்திகம் ஒரு தெளிவு!!!

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9946
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #76
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    உன்மையான ஆத்திகன் கடவுளை நம்பி போய்கிட்டே இருப்பான் கடவுள் இருக்கு என்று சொல்லுவான் ஆனால் நிருபிச்சு கிட்டு இருக்க மாட்டான் (ஏன் என்றால் அது சையின்ஸ் அல்ல அது நம்பிக்கை). நாத்திகன் நம்பாம தன் வேலையை பாத்துகிட்டு போய் கிட்டு இருப்பான். நம்மள மாதிரி அரைகுறைகளும் சந்தேக பேர்வழிகளும் தான் இருக்கா இல்லையா விவாதம் செஞ்சு தானும் குழப்பி மத்தவங்களையும் குழப்பி விடுவது?
    வாத்தியாரே... வழக்கம்போல உண்மையை ’டொப்பு’ன்னு போட்டு உடைச்சிட்டு போறீங்களே நியாயமா இது..?!

    சரி... தற்போதைக்கு கடவுள்பற்றிய என்னோட எண்ணம்..?! பெருசா ஒன்னுமில்லை... கோவப்பட்டா திட்டி தீக்கறதுக்கும்... தேவைப்பட்டா உரிமையோட தோள்ல கைப்போட்டு சுத்தறதுக்கும் எனக்கு கிடைச்ச ஒரு தோழமை கோட்பாடு அவ்வளவுதான்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #77
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம்!

    இத் தமிழ் மன்றத்திற்கு நான் புதியவன்.

    கடந்த ஒர் மணி நேரத்திற்கும் மேலாய் உங்களது இத்திரியை படித்து இப்பொழுதுதான், அடி முடி காணா என்றில்லாமல் கடைசி பக்கத்தைக் கண்டுள்ளேன்.

    இம்மன்றத்தில் நான் இணைந்திருந்தாலும், இப்படி ஒர் பதிவை நான் காண்பேன் என்று நினைக்கவில்லை. படித்ததால் பின்னூட்டமும் இடுகிறேன்.

    என் கருத்துக்களையும் பதிவிடலாம் என்றால், இம்மன்றம் பற்றி அறியா ஒர் பச்சிளம் குழைந்தையாக நான் இருப்பதால், உங்களை ஒர் திசைக்கு மாற்றிவிடுகிறேன்.

    அதாவது இறைவன் இறைவன் என்று தேடி அழையும் நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றிய விவரத்தை தேடக்கூடாது?

    ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ஏசு, அல்லா, புத்தன், என பலர் தோன்றுவதற்கு முன்னரே இறைவன் என்ற ஒன்றை தமிழர்களுக்கு சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இவர்கள்.

    ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.
    இந்த வாசகத்தை நீங்களும் ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

    ஆகையால் சித்தர்கள் பற்றிய தேடலில் நீங்கள் இறங்கினால், இறைவன் என்பவர் எப்படி உருவாக்கப்பட்டார் என்ற உண்மை தெரியும்.

    தமிழர்களாகிய நாம் இந்து-கிறிஸ்து-முஸ்லிம் என்ற வட்டத்தினால் சிதறுண்டு போகாமல், சித்தன் வழி என்னும் அவ்வெல்லோர்க்கும் முதன்மையான செய்திகளை தேடுங்கள். என்னும் நிறைய கேள்வியும் பதிலும் கிடைக்கும்.

  6. #78
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    அச்சோ! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்

    என்ற கதையால்லா ஆகிப்போச்சு!

    10 நாளா சும்மா கிடந்த திரியில் எண்ணையை ஊத்திப்பிட்டேனா?

  7. #79
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நண்பரே..

    முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

    நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.

  8. #80
    இளம் புயல் பண்பட்டவர் selvaaa's Avatar
    Join Date
    10 Apr 2011
    Location
    படுகை
    Age
    42
    Posts
    126
    Post Thanks / Like
    iCash Credits
    14,874
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நண்பரே..

    முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

    நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.
    கண்டிப்பா சொல்லிட்டா போச்சு!

    அப்புறம், சித்தர்கள் பற்றி நிறைவான பதில் கொண்டவர்கள் இறைவனை தேட மாட்டார்கள், பார்ப்பார்கள்.

    அதற்காக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்துவிட வேண்டாம், நானும் அத்தேடலின் முதல் படிக்கட்டில் இருப்பவன்.

  9. #81
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2008
    Location
    தமிழகம்
    Posts
    106
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான திரி
    படிக்க வேண்டிய பல கருத்துக்கள்.

    செல்வா உங்களின் பதிவுகளுக்காகவும் காத்திருக்கிறேன்

  10. #82
    இளையவர் பண்பட்டவர் rajureva's Avatar
    Join Date
    14 Apr 2008
    Posts
    61
    Post Thanks / Like
    iCash Credits
    43,745
    Downloads
    0
    Uploads
    0

    சித்த்ர்களே

    மகான் களாய் வலம் வந்தவர்களும்
    தோற்றம் அளிப்பவர்களும்
    வரபோகிறவர்களும்
    சித்த்ர்களே............. இதில் மதம் என்ற வேறுபாடே கிடையாது.
    கடவுள் நிலையை உணரலாமே தவிர பார்க்க முடியாது.
    இதை உணர்ந்து கொண்டால் ஆத்திகனேது நாத்திகனேது......

  11. #83
    Kavi Arasan
    விருந்தினர்

    கடவுள் உண்மையில் இருக்கிறார்.

    அன்பர்களே! இறைவனை அப்படி இருப்பார் இப்படி இருப்பவர் என்று கூறும் இறை சிந்தனையாளர்களே எப்போதாவது நீங்கள் எவ்வாறு உள்ளீர்கள் உங்கள் ரூபம் தான் என்ன என்று என்றாவது அவரிடத்தில் கேட்டிருப்பீர்களா? அப்படி அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள் அவர் நிச்சயமாக உங்களிடத்தில் நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என்று சொல்லுவார் இது சத்தியம். அவர் எனக்கு சொன்ன சத்தியத்தை இங்கே சொல்கிறேன். எது இல்லையோ அதுவே மாயை. இந்த பூமி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்பொழுது நாம் எங்கிருந்து வந்தோம் நான், நீ என்பதே இல்லை என்பது தான் உண்மை. ஒன்றே ஒன்று மட்டும் தான் இருக்கிறது அதை மிஞ்சும் சக்தி எங்குமே இல்லை இறைவனும் அவ்வாறுதான் இருக்கிறார். அந்த மாபெரும் சக்தி அன்பு என்று தான்.ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் எந்த நிலையில் எப்படி இருந்தாலும் சரி நான் மிக கொடுமையான பாவங்களை செய்த்திருக்கிறேன் என்று நினைப்பவனுன் இறைவனை அடைய தகுதியானவர்களே. அவர் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் , அவன் மிகப்பெரிய கருணையாளன், அவன் எல்லோரையும் தூய்மையாக்க வல்லவன், அவன் எல்லா உயிர்களிடத்திலும் மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறான், அவரை எங்கும் தேடவேண்டாம் உங்களுக்குள்ளே இருக்கிறார். அவர் மட்டும் தான் உண்மை மற்ற அனைத்தும் பொய். நீங்கள் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, நீங்களாக இறைவனிடத்தில் பிரியத்துடன் கேளுங்கள் அவர் எல்லோரிடத்திலும் அவர் விளையாட்டை விளையாடுவான் அவர் மகா அன்புள்ளவர் அவரை பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை பயந்தால் நாம் அவரை காணவே முடியாது. அவர் மீது அன்பு கொள்ளுங்கள் நீங்கள் அவர் எப்படி இருப்பார் என்று எந்த ரூபத்தில் வணங்குகிறீர்களோ அந்த ரூபத்திலே உங்களுக்கு காட்சி தந்து அவருடைய உண்மை வடிவத்தையும் காட்டுவார்.அதற்கு நாம் அவரிடத்தில் மெய்ஞ்ஞானத்தை கேட்க வேண்டும் அதுவே ஒன்றே அவரிடத்தில் கேட்க முடிந்த ஒன்று. மற்றவை அனைத்தும் தாற்காலிகமே அப்படி என்றால் நிலையில்லாதது என்று பொருள். ஆகவே நீங்கள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்தலே போதுமானது வேறெந்த மதமும், சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் இறைவனிடத்தில் நம்மை கொண்டு சேர்க்காது, எவரெல்லாம் இந்த சமுதாயத்தால் சொல்லப்படுகிற தாழ்ந்தோர்,வறுமையில்இருப்போர்என்று உள்ளார்களா அவர்களிடத்தில் அன்பு செய்யுங்கள் உதவி செய்யுங்கள் இறைவனை பார்ப்பீர்கள்.

  12. #84
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    இது மிகவும் சிந்திக்க வைக்கும் தலைப்பு. நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நடித்த பழைய படத்தில் மேஜர் சுந்தரராஜன் எம்.ஜி.ஆரை பார்த்து ஒரு காட்சியில் "உங்களின் குல தெய்வம் எது?" என்று கேட்க அவர் "என்னை பெற்ற தாய்" என்று பதில் சொல்லுவார்.நமது தமிழ் மூதாட்டி அவ்வையார் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று சொல்லி இருக்கிறார். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும்வரை அவர்களுக்கு தொண்டு செய்தும் மறைந்த பின் அவர்களின் உருவங்களை நினைத்து வணங்கியும் காலம் கழித்தால் அதுவே மென்மையாகும் என்பது என் கருத்து. கடவுள் எங்கு இருக்கிறார் என்று கேட்டால் திருநாவுக்கரசர் சொல்கிறார்

    "விறகில் தீயினால் பாலில் படுநெய்போல்
    மறைய நின்றுளான் மாமணி சோதியான்"

    என்று சொல்கிறார். இவரை போல் பல மகான்கள் பலவிதமாய் சொல்லி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று உணர்வுபூர்வமாக முன்னறி தெய்வங்களான அன்னை தந்தையரின் ஆலோசனைப்படி கேட்டு செயல் படலாம். திரி தொடர்ந்தால் இன்னும் பல நல்ல தகவல்கள் வெளியாகலாம்.

Page 7 of 7 FirstFirst ... 3 4 5 6 7

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •