Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 84

Thread: கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

    வணக்கம் உறவுகளே...

    தலைப்பை பார்த்தவுடன் பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்து இருப்பீர்கள்.. நீங்கள் எந்த பதட்டத்துடன் இந்த திரிக்கு வந்தீர்களோ, அதைவிட அதிகமான பதட்டத்துடன் தான் இந்த திரியை நான் தொடங்கியுள்ளேன். இந்த பதட்டத்திற்கு காரணம் பயம் அல்ல, மற்றவர்களின் இறை நம்பிக்கையை நோகடித்து விடுவோமோ என்ற பதட்டமும், உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்ற பதட்டமும் தான். நாம் விஷயத்திற்கு போகும் முன்பு.. சில வேண்டுகோள்...

    முன்குறிப்பு : இந்த திரியை கண்ணியமான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் தொடங்கியுள்ளேன். இதை படிப்பவர்கள் கொஞ்சம் மெச்சூரிட்டியுடன் இந்த விஷயங்களை பார்க்கவும், அணுகவும் வேண்டிக் கொள்கிறேன். நான் இந்த திரியில் யார் மதத்தையும் குற்றம் சொல்லவோ, கிண்டல் செய்யவோ போவதில்லை... நம்மை ஆட்டிப் படைக்கு அந்த சக்தி இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது... சோ, இந்த திரியை அணுகும் நீங்கள்... உங்களுக்குள் இருக்கும் அனைத்து விதமான முகமூடியையும், மத உணர்வையும், மூடநம்பிக்கைகளையும் கழட்டி விட்டு வந்தால், நாம் விவாதித்து உங்களின் உண்மைகளை நானும், என்னுடைய உண்மைகளை நீங்களும் புரிந்துக் கொள்ளவும் தெரிந்துக் கொள்ளவும் உபயோகமாக இருக்கும். இந்த திரி யாருக்கு முக்கியமோ இல்லையோ, எனக்கு மிக முக்கியம் காரணம் நான் பல ஆண்டுகளாக தேடும் கேள்வி இது... சோ அனைத்து உறவுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... தேவைப்பட்டால் இந்த திரியை பண்பட்டவர் பகுதிக்கும் மாற்றலாம்.


    இந்த திரியை நான் தொடங்கியவுடன், நான் எதோ நாத்திகவாதி என்று எண்ணி விடவேண்டாம். பைக்கில் போகும் போது எதிரிலோ, பக்கவாட்டிலோ கோவிலைப் பார்த்தால் என்னை அறியாமல் கையை விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்ளம் அளவிற்கு நான் சுத்தமான ஆத்திகவாதி,.......... ஆனால் யோக்கியமான ஆத்திகவாதியா, நம்பிக்கையான ஆத்திகவாதியா என்றால் இல்லை...... இந்த இல்லை என்ற பதிலை சொல்லும் அந்த இடைவெளியில் தான் என்னுள் சில நாத்திக சிந்தனைகள் ஒலிந்து இருக்கிறது... இவை எங்கிருந்து என்னுள் வந்தது, புத்தக வாசிக்கும் பழக்கத்தில் இருந்தா, கண் எதிரே அம்மா விபத்தில் பலியானாலே அதிலிருந்தா, என்னை பார்த்து எழுதிய பையன் தேர்வில் தேர்ச்சி பெற்று, நான் தோல்வியை தழுவினேனே அதிலிருந்தா, ஒவ்வொரு முறை கோவிலுக்கு போகும் போதும் ஒரு 90 வயது கிழவி பசியில் துடித்தபடி பிச்சை கேட்பாளே அதிலிருந்தா........ தெரியவில்லை...

    இந்த குழப்பத்தின் விளைவு தான் இந்த திரி. கடவுள் உண்மையா? கட்டுக்கதையா?... எவ்வளவு பெரிய கேள்வியை இப்படி சாதாரண கேட்டு இருக்கேனே என்று என்னை பார்த்தால் உங்களுக்கு சிரிப்புக் கூட வரலாம். ஆண்டு ஆண்டுகாலமாக பல ஞானிகளும், பல அறிஞர்களும், பல பெரியவர்களும் தேடி அலைந்த கேள்வி இது.... இப்படி சாதாரணமா இணையதளத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழ் தளங்களில் ஒன்றான இந்த மன்றத்தில் இதற்கான விடை கிடைக்கும் என்று எந்த நம்பிக்கையில் நான் இதை தொடங்கினேன் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

    விடை கிடைக்காவிட்டாலும், தெளிவு கிடைக்கும் இல்லையா... இந்து, கிறித்துவன், இஸ்லாமியன், புத்த மதம், ஜென், சீக்கிய மதம், இப்படி உலகத்தில் எத்தனையோ மதங்கள்... அதற்குள் பல உட்பிரிவுகள், அதிலும் பல கடவுள்கள்... ஒரு சாமிக்கு நெய் பருப்பு சாதம் படையல் என்றால் இன்னோரு சாமிக்கு சாராயம் பச்சை ரத்தம் படையல், ஒரு சாமிக்கு அப்பமும் திராட்சை ரசமும் என்றால், இன்னோரு சாமிக்கு படையலே கிடையாது. என்னுடைய முதல் சந்தேகம் எந்த சாமி இப்படி உலக மக்களை குழுகுழுவாக பிரித்தது. இரண்டாவது சந்தேகம் ஏன் பிரித்தது. கடவுள் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தானே, இதில் எங்கிருந்து வந்தது இந்த பாகுபாடுகளும், வரைமுறைகளும்.

    இயற்கையாக அமைந்த தட்பவெட்பத்திற்கு தகுந்த மாதிரி குளிர்பிரதேச மனிதர்கள் வெள்ளையாகவும், அதுக்கு தகுந்த தடிமனான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர், வெட்பம் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் கருப்பு நிறத்திலும் மெலிதான ஆடைகளை அணிந்தும் இருக்கின்றனர். இப்படி மக்களின் உருவ அமைப்பு, உடல் அமைப்பு, வாழ்க்கை முறை இவை அனைத்தும் இயற்கை அளித்த தட்பவெட்பத்தின் வழியாக இயற்கையாக அமைந்தது என்பது ஏற்றுக் கொள்ள முடிகிறது... ஆனால் கடவுள் எப்படி தனிதனியாக பிரிக்கப்பட்டு இந்த குழுவினர் இந்த மதத்தை கும்பிடுங்கள், இந்த தேசத்து மக்கள் இதனை கும்பிடுங்கள்... என்று தனிதனியாக பிரித்தது யார்....

    கர்த்தர் பிறந்த காலத்திலோ, கிருஷ்ணர் பிறந்த காலத்திலோ, அல்லா தோன்றிய காலத்திலோ கண்டிப்பாக உலகத்தில் மற்ற மனிதர்கள் இருந்து இருப்பார்களே அவர்கள் எந்த மதத்தை பின்பற்றி இருப்பார்கள்... சரி அப்படி அவர்கள் பின் பற்றி இருந்தால், அப்புறம் ஏன் அதன் பின் இந்த மதங்கள் தோன்றின..... சரி தோன்றி விட்டது பரவாயில்லை, பிற்காலத்தில் இந்த மதங்கள் அழிந்து வேறு மதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கா..... அப்போ, இதுக்கு முன்பு இருந்த மதத்தின் நம்பிக்கை பொய்ப்பிக்கப்பட்டு தானே, நாம் அடுத்த மதத்திற்கு போகிறோம்.....

    சில நாட்களுக்கு முன்பு ஆதனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அமெரிக்காவின் சீக்ரெட் மிஷின் பற்றி பேச ஆரம்பித்து டாப்பிக் எங்கெங்கோ சென்று கடைசியில் மதத்தில் முடிந்தது. அப்போது நான் ஆரம்பித்தில் கிறித்துவர்கள் தங்கள் மதத்தை பரப்புவதை கொள்கையாகவே எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று, மதத்தை பரப்புவதே தங்களின் வாழ்நாள் சேவையாக செய்தார்கள், இப்படி மற்றவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கி, சில பல சலுகைகள் மூலமாக மக்களை இவ்வாறு மதம் மாறச்சொல்வது தப்பில்லையா என்று கேட்டேன்... கேட்டு சில நிமிடங்களுக்கு அப்புறம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது... ஆதன் ஒரு கிறித்துவன் என்று, எனக்கு மிகவும் சங்டமாப் போச்சு... இதுவரை அவன் பலமுறை அவனுடைய உண்மையான பெயர் சொல்லி எனக்கு அது நினைவில் இல்லை... இப்போ கூட எனக்கு அவன் பெயர் தெரியாது.... ஏன் மன்றத்தில் இருக்கும், மதி, அமரன், விகடன், நாரதர் இப்படி நிறைய பேரின் உண்மையான பெயர் எனக்கு தெரியாது... காரணம் நாம் தமிழால் இணைந்தோம், மன்றத்தால் நட்புக் கொண்டோம், அந்த அடையாளமே போதும் என்று இருந்து விட்டேன். இப்பக் கூட சில போன் செய்து எனக்கு அவர்களின் உண்மையான பெயரை சொல்லி ஹலோ சொன்னால் சில நிமிடம் நான் தெனறி விடுவேன்.

    அப்படி ஆதனிடம் அந்த கேள்வியை தெரியாமல் கேட்டுவிட்டேன்... அவன் கோபப்படுவான் என்று நான் நினைத்தேன், அவன் கோபப்படவில்லை, மாறாக... கிறித்துவத்தின் தோற்றம் முதற்கொண்டு வரலாறையே எனக்கு பொறுமையாக சொன்னான். அதில் என்னை கவர்ந்தது ஒரு விஷயம் அவன் சொன்னான்.

    "மதமாற்றுவது ஏன் கொஞ்சம் யோசித்து பார்த்தால், அதில் இருக்கும் அர்த்தம் புரியும்,... நம் இந்து மதத்தில் (இந்து மதத்தை கூட அவன் நம் இந்து மதத்தில் என்று கூறினான்.. நடுநிலையானவன்) ஆரம்பித்தில் இருந்து ஒரு பிரச்சனை இருந்தது, அதாவது மக்கள் பல பிரிவுகளாக ஆதி காலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன, இவன் கோவிலுக்கு போலாம், அவன் போகக்கூடாது, இவன் எதிரே வரலாம், அவன் வரக்கூடாது, இவன் தொடலாம், அவன் தொடக்கூடாது இப்படி நிறைய கட்டுப்பாடுகள்....மீறினால் அடி உதை, கொலை, இப்படி இருக்கும் போது, புதிதாக கிறித்துவம் என்று ஒரு மதத்தை சிலர் கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வரும் போது அவர்கள் சொன்னது, எல்லாரும் வாங்க, கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார்கள், உங்களுக்காக தான் கடவுள் பிறந்து இருக்கிறான் என்றார்கள்........ நீ கடவுளைப் பார்க்க கூட அருகதையில்லாதவன், கீழ் ஜாதி என்று துரத்தப்பட்ட அவனுடம், உனக்காக தான் கடவுள் பிறக்கிறான் என்று சொன்னால் அவன் என்ன செய்வான்.......... சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான்" என்று கூறினான். அதன்பின்னர் அவன் கூறிய சில நியாயமான நடுநிலையான விஷயங்களை இங்கு நான் இப்போ கூறமுடியாது காரணம், அது ஒரு கிறித்துவனாகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ அவன் பேசவில்லை... அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனாக அவன் பேசினான்.... அப்படி அவன் பேசுவதை கேட்க நானும் நம்முடைய முகமூடிகளை கழட்டி எறிந்து விட்டு ஆராயத்துடிக்கும் மனிதனாக வந்தால் அதைப் பற்றி பின் வரும் தொடர்களில் பேசுவோம்...

    அவன் சொன்னதில் தப்பில்லை, யாராக இருந்தாலும், தன்னை மதிப்பவர்களை தான் நாம் திரும்ப மதிப்போம், அது கானா இருந்தாலும் சரி, கந்தசாமியாக இருந்தாலும் சரி, கர்த்தராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி...... மனிதனின் ரத்தத்தில் எழுதப்படாத சட்டம் அது, மதிப்பவர்களையும், முக்கியத்துவம் கொடுப்பவர்களையும் திரும்பவும் மதிக்க வேண்டும் என்பது. சோ, மனிதனை மேம்படுத்த மனிதனால் தான் முடிகிறது, கடவுளை நம்பவைக்கவும், மறுக்கவைக்கவும் மனிதனால் தான் முடிகிறது... தானாக உருவான கோவிலும், சர்ச்சும், மசூதியும் இதுவரை இல்லையே, அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது தானே.... கடவுளின் உருவத்தையும், புகைப்படத்தையும் அவன் தானே உருவாக்குகிறான்.

    ஆக்ரோஷமாக கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு கவலைப்படாதே உனக்கு ஒன்று என்றால் நான் வருவேன், தற்காப்போடு என்பது போல புகைப்படங்கள், சிலைகள். அல்லது சாந்த சொரூபமாக, வாழ்க்கையில் அனைத்தையும் பொறுமையாக தான் டீல் பண்ணவேண்டும் என்று ஒரு பக்கம். இன்னோரு பக்கம் எனக்கு உருவமே இல்லை, ஜோதி வடிவம் தான் கடவுள் என்றார்கள்... இவை அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனநிலைக்கும், மனக்கட்டுப்பாடுக்கும் படைக்கப்பட்டன, கொஞ்சம் அனைத்து மதத்தில் உள்ள தெய்வங்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஹார்ஷாக சொன்னால் போட்டி போட்டுக் கொண்டு, என்னிடம் இது இருக்கிறது உன்னிடம் அது இல்லை என்பது போல தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.... இவை தெய்வத்தின் மீது நான் சாடுவதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். தெய்வங்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப, விருப்பத்திற்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப சித்தரித்தார்களே அவர்களை தான் நான் சாடுகிறேன்..

    நம்முடைய தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, பாட்டிக்கு பாட்டி எப்படி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது, சில நூற்றாண்டு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு தெரியாது, அதற்கு முன்பு வாழ்ந்த ராஜராஜசோழன் எப்படி இருப்பார்னு தெரியாது, இப்படி வரலாறு இருப்பவர்களையே நாம் திரித்து சொல்லிக் கொண்டு இருக்கும் நேரத்தில், வரலாறும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் எப்படி கடவுள் மட்டும் இப்படி தான் இருப்பார், இப்படித்தான், அவர் அசுரர்களை கொன்றார், இப்படி தான் சிலுவையில் அரையப்பட்டார் என்று நாம் கூறுகிறோம்..... கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா, இல்லை... அப்படி பார்த்தால் அவர் பார்த்ததுக்கு என்ன அத்தாட்சி, மற்றொருவரும் நானும் பார்த்தேன் என்று கூறினால், அவர் பொய் சொல்லவில்லை என்பதற்கு அத்தாட்சி என்ன???? இப்படி கேள்விகள் சங்கிலிப் போல சென்றுக் கொண்டே தான் இருக்கும் இதற்கு காரணம் நம்பிக்கையின்மை....

    இந்த நம்பிக்கை நமக்கு எதி்ல் இருந்து வருகிறது ஒன்று ஆன்மீகத்தின் மூலமாக, அல்லது விஞ்ஞானத்தின் மூலமாக... உலகம் இத்தனை மாற்றங்களை கண்டுக் கொண்டு இருப்பதற்கு சாட்சி யார், நீயும் கிடையாது நானும் கிடையாது உன் பரம்பரையும் கிடையாது என் பரம்பரையும் கிடையாது... நமக்கு இருக்கும் ஒரே சாட்சி அந்த சூரியன் மட்டும் தான்... (தேர்தல் நேரம் என்பதால் தப்பான அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம்)நான் சொல்வது தி சன், அது மட்டும் தான் நம்முடைய பூமி வரலாற்றின் சாட்சி, நிலாக்கூட தேய்ந்து தேய்நது லீவு எடுத்து வருகிறது. ஆனால் சூரியன் எதோ ஒரு பக்கத்தில் மறைந்தாலும், மற்றொரு பக்கத்தில் பூமியை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது... நம் பூமியின் அனைத்து உயிர்களும் தோன்றியதற்கு காரணம் அது மட்டும் தானே, அதனால் தானே, மாயன் கலாச்சாரத்தில் இருந்து, ஹரப்பா, மொஹன்ஜிதாரோ போன்ற கலாச்சாரங்கள் வரை அனைத்து மக்களும் சூரியனையே கடவுளாக வழிபட்டனர். அப்போ நம்முடைய சாமிகள் எல்லாரும் எங்கே சென்றனர், இன்று நம் சூரியன் இருக்கிறானே, ஆனால் எத்தனை கடவுள்கள் தோன்றி மறைந்துள்ளனர்.

    நம் அண்டசராசரத்தில் சூரியனைப் போல பல கோடி மடங்கு பெரிய தான நட்சத்திரம் ஒன்று இருக்கிறதாம், அப்போ சூரியனை நாம் இத்தனை நாளாய் கடவுளாக வழிபட்டோமே, அதுவும் பொய்யா,.... சரி விஞ்ஞானமும், அறிவியிலும் தான் உண்மை என்று அதை நம்பினால், அறிவியல் கண்டுபிடிப்பிலே மிக முக்கியமான கண்டுபிடிப்பு, புவியீர்ப்பு விசை தான். ஆனால் அதையும் பொய்யாக்கி, அண்டசராசரத்தில் மிதக்கும் செயற்கைகோளையே கண்டுபிடித்து இருக்கோமே, காரணம் கேட்டால் அங்கு புவியீர்ப்பு விசை வேலை செய்யாது என்று சொல்கிறோமே, அப்போ பூமி தன்னுடைய ஆதர்சன வாட்டில் இருந்து கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பினால் என்ன ஆகும், நிலம் எல்லாம் கடலாகும், கடல் எல்லாம் நிலமாகும்.. புவியீர்ப்பு விசை அதிகரிக்கலாம், குறையலாம், அல்லது முற்றிலும் அனைத்தும் மறைந்து அனைத்தும் வெடித்து சிதறலாம்...

    அதற்கும் விஞ்ஞானம் விடை சொல்லும், இது இப்படி இருந்ததால, அது அப்படி வந்ததால, இப்படி ஆச்சி இதன் பெயர் தான் இந்த தியரி, இதை இந்த ஆண்டில் இவன் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டான்... என்று. அவன் பொய் சொல்லி இருந்தால், கூட இருந்தவனும் பொய் சொல்லி இருந்தால், ஆன்மீகத்தில் மட்டும் அத்தனை கேள்வி கேட்கிறோமே, விஞ்ஞானத்தில் மட்டும் ஏன் கேட்பதில்லை... ஜூரோ என்ற எண்ணுக்கு முன், வேறு ஒரு நெகட்டிவ் இல்லா எண் இருக்கிறது என்று யாராவது இப்போ கண்டுபிடித்தால் என்ன ஆவது, நம்முடைய நூற்றாண்டுகால கணக்கு எல்லாம் இப்போ, தப்பாகிப் போகுமே... அண்டசராசரமே தப்பாகி போகுமே...

    இல்லை ஆகாது,

    ஏன் ஆகாது..

    கண்டிப்பாக ஆகாது..

    ஏன்னு விளக்கமா சொல்லு

    விளக்க தெரியாது, ஆனால் ஆகாது

    எதை வச்சிட்டு அப்படி சொல்ற

    தொணுது சொல்றேன்...

    அப்போ இந்த நம்பிக்கை தான் கடவுளும், விஞ்ஞானமுமா??????

    (உறுப்பினர்கள் அனுமதி அளித்தால் இன்னும் பேசலாம்...)
    Last edited by ரங்கராஜன்; 25-02-2011 at 12:52 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    யப்பா என்னது இது
    புறியாத விஷயத்த இங்க
    கேட்டுட்டே ??????????,

    இதுக்கு விடை யாரு சொல்ரது
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    உங்களது அசத்தலான திரிகளில் இதுவும் ஒன்று. விசயத்துக்கு வருவோம்.
    எனது தாய் மிகவும் கடவுள் பக்தி உடையவர். நான் எட்டாம் வகுப்பு
    படிக்கும் பொழுதே எனக்கு கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி என
    பல தெய்விக பாடல்களை கற்று தந்தவர். நான் தினமும் இதை சொன்ன
    பிறகுதான் எனக்கு காலை உணவு. எங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு
    பிள்ளையார் சிலை ஒன்று இருக்கும். வெள்ளி, செவ்வாய் போன்ற தினங்களில்
    அந்த கடவுள் சிலைக்கு அனைத்து அபிசேகங்களும் நடக்கும். இவையெல்லாம்
    முடிந்தபின் உணவருந்தி பிறகு தாயும், நானும் பள்ளிக்கு செல்வோம். என் தாய்
    அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியை. தாயோடும்,தந்தையோடும்
    நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது எங்கள் வாழ்க்கை.

    ஒரு நாள் கேன்சர் எனும் எமன் என் தாய்க்கு இருப்பது தெரியவந்த்து
    அதர்க்காக எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு
    மேலாக படாதபாடுபட்டாள் அந்த நோயால் என் தாய். அந்த சமயத்திலும் என்
    தாய் ஸ்வாமி பூஜைகளை கைவிடவில்லை.

    பத்து நாட்கள் படுத்த படுக்கையாய் இருந்து துடியாய் துடித்து இறந்து
    போனாள் என் தாய். என் தாய் இறந்த மறு நிமிடமே நான் அணிந்திருந்த பூணூலை
    தூக்கி எறிந்தேன். நீங்கள் கேட்கலாம் இறப்பு என்பது பொதுவானதுதானெ
    இதற்க்கு கடவுள் மீது கோபம் எதற்க்கு என்று. என் கேள்வி அதுவல்ல இவ்வளவு
    பக்தியோடு இருந்த என்தாயை அந்த கடவுள் இப்படியா துடிதுடிக்க வைத்து
    சாகடிக்க வேண்டும் என்பதுதான்.
    நானும் நாத்திகன் இல்லை,என் குடும்பத்தில் யாரேனும் கோயிலுக்கு
    செல்ல வேண்டும் என்றால் அவர்களை அழைத்து கொண்டு சென்று
    வருவேன். என் இல்லத்திலும் ஸ்வாமிக்கென தனி அறை உள்ளது
    அதில் என் தாயின் உருவபடம் உட்பட அனைத்து ஸ்வாமி படங்களும்
    உள்ளன. அங்கு இருகை கூப்பி வணங்கும் பொழுதும், நமஸ்க்காரம்
    செய்யும் பொழுதும் என் தாய் மட்டுமே எனக்கு கடவுளாய் தெரிகிறாள்

  4. Likes Thamizh sivagami liked this post
  5. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    சில விடயங்களை உணர்வுரீதியாக அணுக வேண்டும், சிலவற்றை அறிவுரீதியாக அணுக வேண்டும், இந்த விடயத்தை அறிவுரீதியாக அணுக முயற்சிப்போம்..

    பூராணங்களை படித்தவர்களுக்கு புரியும், அரக்கர் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் கூட கடவுள்களின் பெரும்விசுவாசிகளாக இருந்திருக்கிறார்கள், தம் கடுந்தவத்தால் இறைவனை குளிர்வித்து வரம் பெற்றிருக்கிறார்கள்..

    மாமரமான நின்ற பத்மாசூரனை, தம் வேலால் இரண்டாக பிளந்த முருகக்கடவுள், அவன் வேண்டுதலுக்கு இணங்க ஒரு பகுதியை சேவலாகவும், மற்றொரு பகுதி மயிலாகவும் மாற்றி, அதன் பிறகு சேவல் தன்ன் கொடியாகவும், மயில் தன் வாகனமாகவும் வைத்துக்கொண்டார்..

    நன்றாக சிந்தித்து பார்த்தோம் ஆனால், யாரை கொல்வதற்காக முருக கடவுள் பிறந்தாரோ அவனையே அவரின் கொடியாகவும், வாகனமாகவும் மாற்றிக் கொண்டார்..

    கொல்லிமலையில் இருந்து திரும்பி வருகையில், தாமரையண்ணாவிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்..

    அக்கர்களை கூட நம்பின கடவுள் ஏங்கண்ணா ஒரு மனுசன கூட தன் வாகனமாகவோ, வேறெதுவாகவோ வச்சுக்கள ?

    தாமரையண்ணா சொன்னார், கடவுளை, அரக்கர்கள் புரிஞ்சுக்கிட்ட அளவு கூட மனுஷன் புரிஞ்சுக்கள டா.

    சரியா சொல்லனும் னா சூரபத்மன் அவன் வேலைய சரியா செஞ்சான், மனுஷன் கடவுள வச்சுக்கிட்டு எல்லா வேலையும் செய்றான்..

    இது கடவுள் உண்மையா ? கட்டுக்கதையா ? எனும் விவாதம் தான், நான் இங்க புராணம் பற்றி பேசுனதுக்கு காரணமிருக்கு, அடுத்தவனை நாம் புண்படுத்தாத வரை கடவுள் இருக்கார், அடுத்தவன் மனதை கடவுள் பெயராலும் காயப்படுத்தினாலும் கடவுள் இல்லை என்பதையாவது நம்புவோம். இது வெறும் குறைந்தபட்ச வேண்டுகோள் தான், இதை குறைந்தது இந்த திரி முழுக்க கடைப்பிடிக்க முயற்சிப்போம்..
    அன்புடன் ஆதி



  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    என் இல்லத்திலும் ஸ்வாமிக்கென தனி அறை உள்ளது
    அதில் என் தாயின் உருவபடம் உட்பட அனைத்து ஸ்வாமி படங்களும்
    உள்ளன. அங்கு இருகை கூப்பி வணங்கும் பொழுதும், நமஸ்க்காரம்
    செய்யும் பொழுதும் என் தாய் மட்டுமே எனக்கு கடவுளாய் தெரிகிறாள்
    சூப்பர் முரளிராஜா, உங்களின் கஷ்டம் எனக்கு புரியும் நானும் தினமும் பூஜை அறையில் கும்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன், உங்களைப் போல என் தாயையும்....

    மிகச்சிறந்த மனிதன் தான் கடவுள்....

    மிக மோசமான கடவுள் தான் மனிதன்...

    பகிர்வுக்கு நன்றி...
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by Mano.G. View Post
    யப்பா என்னது இது
    புறியாத விஷயத்த இங்க
    கேட்டுட்டே ??????????,

    இதுக்கு விடை யாரு சொல்ரது
    என்ன அண்ணா வாழ்க்கையை பிரித்து மெய்ந்து பின்னி பெடல் எடுத்தவரான நீங்கள் இப்படி ஜகாவாங்கினால் என்ன அர்த்தம், உங்கள் கருத்துகளை சொன்னால் தானே எங்களைப் போல தம்பிகளுக்கு உபயோகமாக இருக்கும்...
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதன் View Post
    அடுத்தவனை நாம் புண்படுத்தாத வரை கடவுள் இருக்கார், அடுத்தவன் மனதை கடவுள் பெயராலும் காயப்படுத்தினாலும் கடவுள் இல்லை என்பதையாவது நம்புவோம். இது வெறும் குறைந்தபட்ச வேண்டுகோள் தான், இதை குறைந்தது இந்த திரி முழுக்க கடைப்பிடிக்க முயற்சிப்போம்..
    கடவுள் இருக்காரோ இல்லையோ, நாம் அனைவரும் உங்க தான் இருக்கோம், அதனால் சந்தேகத்திற்கு உள்ளவருக்காக, சந்தேகம் இல்லாமல் கண்முன்னே இருக்கும் நாம் யாரும் நோகடித்துக் கொள்ள வேண்டாம்... உறுப்பினர்களே..

    பொறுப்பாளர் ஆதன் அவர்களே நீங்க கவலைப்படாதீர்கள்... அப்படி இந்த திரியில் எதாவது இறைநம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போல நானோ, அல்லது உறுப்பினர்களோ வார்த்தைகள் இட்டால்.... விளக்கத்தை அளித்து விட்டு இந்த திரியை உடனடியாக பூட்டும் படி நான் கேட்டுக் கொள்கிறேன்...

    நன்றி...
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  9. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //பொறுப்பாளர் ஆதன் அவர்களே நீங்க கவலைப்படாதீர்கள்... //

    இதுக்கு நீ என்ன கெட்ட வார்த்தையலயே திட்டிருக்கலாம் டா..

    கோவத்தின் உச்சுல இருக்கியா இன்னும்
    அன்புடன் ஆதி



  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ஆதன் View Post
    இதுக்கு நீ என்ன கெட்ட வார்த்தையலயே திட்டிருக்கலாம் டா..

    ((% (%) %&^*$(# #%*%)^)) %))^U$Y$&#(#)@
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by ரங்கராஜன் View Post
    ((% (%) %&^*$(# #%*%)^)) %))^U$Y$&#(#)@
    ஹாஹ்ஹா
    அன்புடன் ஆதி



  12. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    ஒரு பெண்மணியும் ( என் உறவினர் ) அவரது கணவரும் கோவிலுக்கு சென்றனர் அவர்களது வேண்டுதலை நிறைவேற்ற .

    அவர்களது வேண்டுதல் என்ன தெரியுமா ?

    கணவருக்கு நோயின் காரணமாக உடல்நிலை மோசமானது .

    நோயிலிருந்து மீண்டு உடல்நிலை தேறினால் கோவிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டார் அந்த பெண்மணி

    கணவரின் உடல்நிலை தேறியது . எனவே இருவரும் கோவிலுக்கு சென்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர் .

    கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார்

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைவரும் விதி வலியது என்றனர் .


    அவ்வாறு எனில் கடவுளைவிட விதிதான் பெரியதா ?


    மனிதன் , பல பிறவிகளில் தான் செய்த பாவ , புண்ணியங்களுக்கு தகுந்தபடியான வாழ்க்கையை அடைகிறான் . தான் செய்த பாவ , புண்ணியங்களுக்கு உண்டான பலனை கிரஹங்களின் வாயிலாக இறைவன் மனிதனுக்கு அளிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் இன்ப , துன்பங்களைப் பார்த்து ரசிக்கிறான் இறைவன் .

    நவகிரங்களின் கையில் சாட்டை மற்றும் மலர்மாலை ஆகியவற்றை கொடுத்து எந்த மனிதனுக்கு எதை தரவேண்டும் ?
    ( சாட்டையால் அடி கொடுப்பதா ? அல்லது அவனுக்கு மலர் மாலை அணிவிக்க வேண்டுமா ? ) என்பதை அவைகளிடத்தில் சொல்லிவிட்டு , நிம்மதியாக , வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு , கிரஹங்கள் மனிதனுக்கு சாட்டை அடி கொடுப்பதையும் , மலர் மாலை அணிவிப்பதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான் இறைவன் .

    ஆக இறைவன் ஒரு பார்வையாளன் மாத்திரமே
    யாவரும் வாழ்க வளமுடன்

  13. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    மிக அருமையான பதிவின் துவக்கம் ....நண்பரே அன்றைய புராண இதிகாசகங்கள் இன்றைய மனிதனை செதுக்கும் சிற்பிகளாகத்தான் இருந்திருக்கின்றன ,,,இன்று அந்த புராணங்களையே ஆராயும் அளவிற்கு இன்றைய மனிதன் பெற்றுள்ள அறிவிற்கு அந்த புராணங்களே காரணம் ...இது எவ்வாறெனில் முதலில் சக்கரங்களும் நெருப்பும் கண்டறிந்து ஒரு நாகாரீக வாழ்விற்கு முன்னோடியாக இருந்த மனிதன் எவ்வாறு என்று பேச ஆரம்பித்தான் ..முதலில் தன்னுடைய சைகைகள் மற்றும் மற்றவர்களுக்கு புரியும் வகையில் அவன் சுயமாக சிந்தித்து எழுதிய சித்திர எழுத்துகள் என்றுதான் ஆரம்பித்தான் இதனை எவ்வாறு தமது சந்ததியினருக்கு இது இன்னது என்று வரையறுத்து கூறுவது அதுபோல் ஒவ்வொரு மனிதனும் இப்படி பட்டவர் என்று கூறுவது என்று தன அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகளை கூறுவது அதுபோல் இந்நோய் வந்தால் இந்த மருத்துவம் என்று தன அனுபவங்களை தமது சந்ததியினருக்கு கூற விளைந்ததன் விளைவே புராணங்கள் ...ஒருகுழந்தையிடம் அதை செய்யாதே இதை செய்யாதே என்று கூறும் போது அந்த குழந்தைக்கு அதனை செய்யத்தான் தோன்றும் அதனை ஒரு கதையின் மூலம் உண்மையினை கூறும் போது அந்த குழந்தை அதனை உணர்ந்து அதன்படி செய்யும் ..இவ்வாறு வாய்மொழியாக வந்த புராணங்கள் தவறு செய்யும் மனிதனை எவ்வாறு திருத்தும் ..இந்த நிலையினில் தோன்றியவர் தான் கடவுள் ..தவறுகள் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்ற எண்ணம் அன்றைய மனிதருக்கு இருந்ததால் தான் தவறுகள் குறைவாக இருந்தது வாழ்வும் நிறைவாக இருந்தது .. மனமும் அமைதியான வாழ்வினை நாடி இருந்தது ..அன்றைய மனிதரில் இருந்த சிலர் நாகரீகம் முன்னேற முன்னேற அவர்கள் தொழில் செய்தனர் முதலில் செய்த தொழில் விவசாயம் தமக்கென விளைவித்தான் முதலில் பின்னர் பிறருக்கென விளைவித்து அதற்க்கு பதில் அவனுக்கு தேவையானவற்றை பண்டைமாற்று முறையில் மாற்றி கொண்டான் ..அவ்வாறு செய்யும் போது இன்னாரிடம் சென்று இதனை வாங்கி வா என் கூறும் போது அவன் இன்று பிரிவுபட்டிருக்கும் அவன் செய்யும் தொழிலின் பெயரால் தான் கூறி இருப்பான் ...இவ்வாறு வந்ததுதான் சாதி ..என்று தனக்கு பெயர் சூடி மற்றவர்கள் தன்னை இவ்வாறுதான் அழைக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்தானோ அதுவரை அவர்கள் செய்யும் தொழிலின் பெயரில்தான் அவன் அழைத்திருப்பான்...பின்னர் மனிதரில் சில மிருகங்கள் என்று ஒருவருக்கொருவர் அடக்கி ஆள ஆரம்பித்தார்களோ அன்றுதான் தோன்றியது நீ தாழ்த்தபட்டவன் நான் உயர்ந்தவன் என்று ....முதலில் இயற்கையை கண்டு பயந்த மனிதன் அந்த இயற்கையை வணங்கினான்...பின்னர் அந்த இயற்கையை ஆளும் தெய்வம் என்று அதற்கு ஒரு உருவம் வரைந்தான் ...நீ வணங்கும் உருவம் உன் கடவுள் நான் வரைந்த உருவம் என் கடவுள் என்று பிரித்திருப்பான் இது அன்றைய அடக்கி ஆளும் தன்மையில் தோன்றியதுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் ....
    ஆனால் ஒன்று இன்றும் இறைவன் உள்ளான் அதில் ஐயமேதும் இல்லை அவனை வணங்கும் முறைதான் வேறே தவிர சேரும் இடம் ஒன்றே ..அந்த இறைவன் விதி எனும் பெயரில் இன்றும் அழைக்க படுகிறான் ...இந்த விதிவசத்தால் தான் இன்ற விஞ்ஞானமும் கண்டு பிடிப்புகளும் ...இங்கு விதி என்பது ஒரு காரியம் செய்யும் போது தவறுதலாக ஏற்படும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு நன்மை அல்லது தீமை ...உதாரணத்திற்கு மருத்துவவுலகில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்த பென்சிலீன் கண்டுபிடிப்பு ...அதுபோல் இரண்டாயிரத்து நான்கில் ஏற்பட்ட பூகம்பம் அதனால் விளைந்த சுனாமி ..இங்கு இறைவன் என்பவன் தம்மை அறியாமல் தான் செய்யும் செயல்களுக்கு மூலம் இதனை நம்மில் ஒருவரும் மறுக்க இயலாது ...
    இந்த பதிவின் மூலம் நமது நண்பர்களின் மனம் புண்படும்படி கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை தகுந்த விளக்கத்தின் பேரில் நிர்வாகிகள் நீக்கலாம்...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •