Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 84

Thread: கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

                  
   
   
  1. #49
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //சம்பவம் 6//

    இதில் மட்டும் ஒரு கேள்வி, அந்த கணவன் மாசற்ற மாணிக்கமாகவே இருந்தாரா ?

    //இவள் செய்த துரோகத்திற்கு கடவுள் ஏன் தண்டனை அளிக்கவில்லை ?//

    அவளுக்கு துரோகம் செய்தது யார் கணவனா ? இவளா ?
    அன்புடன் ஆதி



  2. #50
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    இப்படி பல சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .

    நான் மேற்கூறிய சம்பவங்களில் உள்ள ,
    வஞ்சிக்கப்பட்ட அனைவருமே ஆன்மீகவாதிகள்தான் .

    கடவுளிடத்தில் அளவிலா பக்தியை உண்மையாக ,
    மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வைத்தவர்கள்தான் .

    ஆனாலும் அவர்கள் அடைந்த பயன் என்ன ?

    ஆக மொத்தத்தில் ,
    கடவுள் உண்மையா ? அல்லது கட்டுகதையா ?
    என்ற கேள்விக்கு எனது பதில்

    கடவுள் என்ற ஒருவன் இல்லை .

    ஒருவேளை கடவுள் என்பவன் இருந்தாலும் ,
    அவன் விதியின் பெயரால் கையை கட்டிக்கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான் .
    மற்றபடி அவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை

    எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை .

    கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் , மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள், வாழ்கையில் வருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு .

    கடவுள் இருக்கிறான் என்று கூறுபவர்கள் , அவன் தனக்கு எந்த வகையிலாவது உதவி செய்து தன்னை காப்பாற்றுவான் என்று அவனிடத்தில் நம்பிக்கை வைத்து , ஏமாந்து நிற்கிறார்கள் , தனது நம்பிக்கை தன் கண்முன்னே தவிடுபொடியாவதை கண்டு
    கண் கலங்கி
    யாவரும் வாழ்க வளமுடன்

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    By Aathan
    அவளுக்கு துரோகம் செய்தது யார் கணவனா ? இவளா ?
    இருவருமேதான் .

    ஆனாலும் நான் பெண்ணைமட்டும் குறைகூற காரணம் இருக்கிறது
    நண்பர் ஆதன் அவர்களே .

    ஒரு ஆண் பெண்ணிற்கு துரோகம் செய்கிறான் ,
    அது மன்னிக்கமுடியாத தவறுதான் .
    பெண்ணின் மனதை ஆண் புரிந்துகொள்வதில்லை .
    இவ்வளவு ஏன் ? தன் மனதை அடக்கவே அவனுக்கு திராணி இல்லை .
    எனவே எடுப்பார் கைபிள்ளையாக அவன் இருக்கிறான் . மலருக்கு மலர் தாவவே அவனுக்கு தெரியும் மற்றபடி தன் மனைவியின் அன்பையும் , அவளது பரிதவிப்பையும் புரிந்துகொள்ளதெரியாது .

    ஆனால் ஒரு பெண் , மற்றொரு பெண்ணின் மனதை நன்கு அறிவாள் . கணவனை தான் பறித்துக் கொண்டால் , அந்த மனைவியானவள் எவ்வாறெல்லாம் துடிப்பாள் , கதறுவாள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும் . அப்படி தெரிந்து இருந்தும் துரோகம் செய்கிறாள் என்றால் அவள்தானே முதல் குற்றவாளி .

    அந்த கணவன் இரண்டாம் குற்றவாளி
    யாவரும் வாழ்க வளமுடன்

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இதுக்கு பெயர் தான் ஆணாதிக்கமா ஆத்மா ?

    தலைவி கற்புநெறி தவராதவள், பரத்தை கற்புநெறி தவரியவள் என்று சொன்னவர்கள், கற்புநெறி தவறினாலும், தவறாமல் இருந்தாலும் ஆணை தலைவன் என்றுமட்டுமே அழைத்தது..

    கண்ணகி, மாதவியின் கற்பை பற்றி பேசும் நாம் கோவலனை கண்டு கொள்வதே இல்லை, கற்பிழந்தவன் கோவலன் தான் என்று சொல்ல தைரியம் இல்லை, காரணம் அவன் ஆம்பள இல்லயா ?
    அன்புடன் ஆதி



  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by aathma View Post

    எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை .
    ஆத்மா சார்

    இந்த திரியில் உங்களின் பங்களிப்பு பாராட்டதக்கது... கடவுள் இருக்கிறானா இல்லையா, இல்லையா என்பது ஆராய்வது இந்த திரியின் நோக்கம் அல்ல, ...... அது முடியவும் முடியாது..... தலைப்பு அப்படி இருந்தும், இதில் நாம் பேசப் போவது அதை சார்ந்த மற்ற பல விஷயங்களை தான் .......இந்த விஷயத்தை சென்டிமென்டாக பார்க்காமல், கடவுள் என்ற சக்தியை விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப்பூர்வமாக பார்க்க விரும்பப்படுகிறேன்..

    நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தையை இந்த திரியை நீங்கள் படித்து விட்டு, உங்கள் முதல் பதிலாக போட்டு இருந்தால் நான் ஏற்றுக் கொண்டு இருப்பேன்... காரணம் அது உங்களின் கருத்து......

    ஆனால் பல சம்பவங்களையும் கருத்துகளையும் சொல்லி விட்ட இந்த வாக்கியத்தை நீங்கள் எழுதியது உங்களின் கருத்தில் நீங்கள், நிலையாக இல்லை என்பதைப் போல இருக்கிறது... நீங்கள் மேலே சொல்லியுள்ள வார்த்தையை சொல்வதற்கு இத்தனை பின்னூட்டங்கள் இட்டு உங்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டாமே..... இந்த இரண்டே வாக்கியத்தில் முடித்து இருக்கலாமே....

    நீங்கள் ஏன் அப்படி செய்யவில்லை, இதை ஏன் முதலிலே போடவில்லை, உங்களை வழிநடத்துவது எது, எதோ ஒரு

    சக்தியா
    விதியா
    மெய்ஞானமா
    விஞ்ஞானமா
    அல்லது
    கடவுளா...

    ஏன் ஆத்மா சாரின் கண்க்கு எதிரே மட்டும் இத்தனை சம்பவம் நடைபெறவேண்டும், அல்லது மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏன் ஆத்மா சாருக்கு மட்டும் அந்த பாதிக்கப்பட்டவர்கள் மீது வர வேண்டும்........ அது இன்னும் மறக்காமல் ஏன் உங்கள் மூளையில் இருக்க வேண்டும்.... ஆத்மா சாருக்கும் கடவுள் அம்சம் இருக்கலாம் இல்லையா...

    யோசியுங்கள்.... ஆராய்ச்சி தேவை... பங்குக் கொள்வது கொள்ளாததும் உங்கள் சவுகரியம்... சார்...

    இருந்தாலும் இந்த திரியில் இதுவரை உங்களின் பங்கு பாராட்டதக்கது...
    Last edited by ரங்கராஜன்; 25-02-2011 at 10:58 AM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  6. #54
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    திரு .ஆதன் எழுதிய கருத்து

    கண்ணகி, மாதவியின் கற்பை பற்றி பேசும் நாம் கோவலனை கண்டு கொள்வதே இல்லை, கற்பிழந்தவன் கோவலன் தான் என்று சொல்ல தைரியம் இல்லை, காரணம் அவன் ஆம்பள இல்லயா ?
    ஆம் நண்பரே , இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . ஏனெனில் நாம் வாழ்வது ஆணாதிக்க சமுதாயத்தில்தான் .

    ஆண் எத்தனை பெண்களை வைத்துக் கொண்டாலும் அவன் ஆண்தான் .
    ஆனால்
    பெண் தன் கணவனைத் தவிர்த்து வேறு ஒரு ஆணை ஏறுஎடுத்து பார்த்தாலும் அவள் பெயர் -----

    ஆனாலும் நண்பரே , நான் அந்த ஆணிற்கு சாதகமாக பேசவில்லை . அவரையும் குற்றவாளி என்றுதான் கூறியிருக்கிறேன் .

    பெண்ணை முதல் குற்றவாளி என்று நான் கூறியிருப்பதற்கு காரணத்தையும் நான் முன்பே சொல்லியிருக்கிறேனே ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  7. #55
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஆத்மா, அடுக்கிச் செல்லும் சம்பவங்கள் மனதை உலுக்கும் விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

    இதனை விடவும் மோசமான விளைவுகளை சுனாமி, பூகம்பங்கள், வெள்ளம், காட்டுத்தீ, எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன...
    இவற்றின் தாக்கத்தால், கடவுளை மறுதலிக்கலாம் என்றால்...

    உலகம் தோன்றிய காலம் முதலாக இன்றுவரையான காலம்வரையில்,
    இதுபோன்ற கொடும்நிகழ்வுகளை எண்ணிச்சொல்லிடலாம்.
    ஆக, இந்நிகழ்வுகளைத் தவிர்த்துப் பார்த்தால்,
    எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
    கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...

    வெள்ளைச் சுவரில் கறுப்பாய் இருக்கும் புள்ளியைச் சொல்வதுதானே மனித இயல்பு...
    நிறம்மாறி இருந்தாலும் நிலை மாறாது...

    இதுபோலத்தான்,
    கடவுள் இல்லை என்று மறுதலிக்க காரணங்களைத் தேடும் மனங்கள்,
    கடவுளினை ஏற்றுக்கொள்ள நிறைந்திருக்கும் காரணங்களைக் கண்டு கொள்வதில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #56
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    நண்பர் திரு .ரங்கராஜன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்

    உங்கள் ஆக்கம்

    கடவுள் இருக்கிறானா இல்லையா, இல்லையா என்பது ஆராய்வது இந்த திரியின் நோக்கம் அல்ல, ...... அது முடியவும் முடியாது..... தலைப்பு அப்படி இருந்தும், இதில் நாம் பேசப் போவது அதை சார்ந்த மற்ற பல விஷயங்களை தான் .......இந்த விஷயத்தை சென்டிமென்டாக பார்க்காமல், கடவுள் என்ற சக்தியை விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப்பூர்வமாக பார்க்க விரும்பப்படுகிறேன்..
    நண்பரே , நீங்கள் கடவுள் சார்ந்த விசயத்தைப் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்ய விழைந்திருக்கிறீர்கள் .

    ஆனால் நான் , கடவுள் என்ற ஒரு கருத்தை , நம்பிக்கையின் ஆதாரத்தை ஆராய்ச்சி செய்ய எண்ணுகிறேன் .

    எனது இந்த எண்ணம் முட்டாள்தனமானது என்றுகூட நீங்கள் நினைக்கலாம் . கடவுளை ஆராய்வது என்பது எந்த மனிதனாலும் இயலாத காரியம் என்றும் நீங்கள் நினைக்கலாம் .

    ஆனால் நண்பரே , மனிதன் தொடர்ந்து முயற்சி செய்து செய்தேதான் ஒவ்வொன்றாய் இந்த உலகில் கண்டு பிடித்தான் . தன்னால் முடியாது என்று அவன் நினைத்து இருந்தால் இந்த உலகில் நாம் இன்று நிதர்சனமாய் காணும் உண்மைகள் நம் அறிவுக்கு எட்டாமலே போயிருக்கும் .

    எனவே எவ்வளவு பெரிய காரியமானாலும் , அதை முயன்றுதான் பார்ப்போமே என்றுதான் நான் நினைத்து என் ஆக்கங்களை படைத்து இருக்கிறேன்


    ஒரு பொருளோ அல்லது ஒரு கோட்பாடோ , ஒரு கொள்கையோ , எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிருபிக்கப் பட்டால்தானே பின் தொடர்ந்து அதனை சார்ந்த விசயங்களை ஆராயமுடியும் .

    இங்கு கொள்கையே , கோட்பாடே நிரூபணம் ஆகாமல் கேள்விக்குறியுடன் நின்றால் பின் எப்படி , எதன் அடிப்படையில் அந்த கோட்பாடை சார்ந்த விசயங்களை ஆராய்வது ?

    கடவுள் இங்குதான் இருக்கிறார் , அவர் இப்படிதான் இருக்கிறார் , இன்ன வேலைதான் அவர் செய்துகொண்டு இருக்கிறார் என்று யார் ஒருவராலும் மற்றொருவருக்கு நிருபித்து காட்ட முடியாது . நான் இதை ஒத்துக் கொள்கிறேன் .

    ஆனால் " இந்த ஒரு நிகழ்வின் காரணமாக நான் ஆணித்தரமாக சொல்கிறேன் , இந்த உலகில் கடவுள்தன்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது " என்று எவரேனும் ஏதாவது ஒரு நிகழ்வை உதாரணத்திற்கு கூறி கடவுள் மீது அசைக்க முடியாத , மறுக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் நமக்கு என்பதே என் எண்ணம் . இவ்வாறு மறுக்க இயலாத நம்பிக்கை கடவுள் மீது வந்தால்தானே பின் அவர் சார்ந்த விசயங்களை ஆராயமுடியும்

    உங்கள் கருத்து

    பல சம்பவங்களையும் கருத்துகளையும் சொல்லி விட்ட இந்த வாக்கியத்தை நீங்கள் எழுதியது உங்களின் கருத்தில் நீங்கள், நிலையாக இல்லை என்பதைப் போல இருக்கிறது..
    ஆம் நண்பரே , நான் என் கருத்தில் நான் நிலையாக இல்லை .
    நான் , கடவுளே இல்லை என்று கூறி எனது இந்த கருத்துதான் மிகச் சரியானது என்று வாதாடித விரும்பவில்லை .
    அதே சமயம் என் தரப்பு வாதத்தை வெறுமனே மேம்போக்காக எவ்வித நிரூபணமும் இல்லாமல் கூறாமல் , தக்க ஆதரங்களுடன் , சம்பவங்களின் அடிப்படையில் கூற விரும்பினேன் .
    எனவே தான் பல சம்பவங்களை இங்கு கூறியிருக்கிறேன்

    கடவுள் நம்பிக்கை பொய்யாய் போய்விட்ட சம்பவங்களை நான் இங்கு எடுத்து கூறியிருக்கிறேன் . இதேபோல் கடவுள் இருக்கிறார் , அவர் தன்னை நம்பியவரை காப்பாற்றத்தான் செய்கிறார் என்பதை எவரேனும் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுத்து கூறுவாரேயானால் நான் நிச்சயம் கடவுள் மீது நம்பிக்கை கொள்வேன் .

    எனது இந்த முயற்சி , கடவுளைப் பற்றி நான் தெளிவான விசயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே

    எனது கருத்து

    எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை
    நண்பரே , நான் இவ்வாறு கூறியதால்
    உங்கள் மனம் வருந்தியிருந்தால் , இந்த சிறியவனை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .

    தங்களது இந்த திரியே தேவை அற்றது என்ற அர்த்தத்தில் நான் இதை கூறவில்லை . தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம் .

    நான் கூறிய அந்த வார்த்தைகள் , கடவுள் மீதான எனது ஆதங்கத்தினால் எழுதப்பட்ட வார்த்தைகளே .

    நல்லவர்கள் துன்பத்தினால் வருந்தி வாடுவதும் , பொல்லாதோர் சீருடனும் , சிறப்புடனும் வாழ்வதும் இன்றைய உலகில் மிக யதார்த்தமாக நாம் காண்கின்ற ஒன்றாக இருக்கிறது .

    ஏன் இந்த நிலைமை ? ஏன் கடவுள் நல்லவர்களை காத்து இரட்சிக்காமல் , பொல்லோருக்கு துணையாக நிற்கிறான் ?
    என்று மனம் வெதும்பி , நல்லவர்களுக்கு உதவாத கடவுள் இருந்தால் என்ன ? இல்லாமல் போனால் என்ன ? என்ற விரக்தியின் காரணமாக எழுதப்பட்ட வார்த்தைகள்

    "இந்த பூவுலகில் ஒருவேளை சோற்றுக்கு மனிதனை தவிக்கவிட்டுவிட்டு அவன் பட்டினியால் இறந்தபின்பு அவனுக்கு சொர்கலோகத்தில் இடமளிப்பேன் என்று சொல்லும் கடவுளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் "

    இதை கூறியது சுவாமி விவேகனந்தர்

    உங்கள் கருத்து

    உங்களை வழிநடத்துவது எது, எதோ ஒரு

    சக்தியா
    விதியா
    மெய்ஞானமா
    விஞ்ஞானமா
    அல்லது
    கடவுளா...
    நண்பரே , நானும் அதையேதான் கேட்கிறேன் விடை தெரிந்துகொள்ளும் ஆவலுடன் .

    உங்களுக்கு விடை தெரிந்தால் கூறுங்கள் , நான் அதை மறுக்க இயலாதபடியான நிகழ்வுகளின் அடிப்படையில் .

    உங்களது விளக்கமான பதில் மனத்தெளிவை ஏற்படுத்துமானால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே .

    நானே இப்படி ஒரு திரியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து நம் மன்றத்திற்கு வந்தேன் . எனக்கு முன் நீங்கள் இந்த திரியை உருவாக்கி , எனக்கு உதவி இருக்கிறீர்கள் .

    தங்களுக்கு நன்றிகள் பல .
    Last edited by aathma; 25-02-2011 at 12:27 PM.
    யாவரும் வாழ்க வளமுடன்

  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    நிவாஸ்

    பார்த்தீங்களா ? விவாதம் வேறும் மார்க்கம் போகுது..

    நான் எப்போ மதத்தை பற்றி பேசினேன்..

    திருக்குறள் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கீதை, வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மற்றுமே சொந்தமானது என்று சொல்வது..

    குர்-ஆன், விவிலியம், தனாக், தாவ் தீ சிங், தி செண்ட் அவஸ்தா, தம்மனபட, ஸ்ரீ குரு கரந் சாஹிப், அபுதுல் பாஹா போன்ற நூல்களும் இது போலவே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்த மானவை அன்று, அப்படி சொந்தமாய் நினைத்தால், ஆன்மிக, எங்கும் வியாபித்து இருந்தல் என்று சொல்வது எல்லாம் பொய் இல்லையா ?

    நீங்க கீதை பற்றி பேசினாலும், குர்-ஆனை பற்றி பேசினாலும், விவிலியம் பற்றி பேசினாலும் குறுகிய வட்டத்துக்கு வெளியில் வந்து பேசுங்கள் பேசுவோம்..

    மறைகளை பற்றி பேசும் போது மதப்பெயர் பற்றி பேசுவாதானால் விவாதத்தை தொடர்தல் தேவையற்றது..

    குறிப்பு:-

    மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்
    ஆதன்,

    சிறு தடங்களில் தொடர் முடியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம் நான் இதை மதத்தின் பெயரால் திசை மற்ற விரும்ப வில்லை. ஆனால் எந்த மதமாக இருந்தாலும் உட்கருத்து என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.

    உங்கள் அனைத்து வாதங்களும் நான் நன்கு உணர்கிறேன். இங்கு ஒரு குழப்பம் என்வென்றால் நான் நிற்கும் புள்ளி வேரூ நீங்கள் நிற்கும் புள்ளி வேராக உள்ளதுதான் பிரச்சனை. நான் இப்பொழுதும் சொல்வது அதுதான்.

    நீங்கள் கடவுளை தேடுவது என்பது இந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது கூடவும் கூடாது. நீங்கள் சொல்லும் இந்த வலி, கொலை, கணவன், மனைவி, நாகரீகம், காசு, பணம், குழந்தை, பெரியவர், சிறியவர், ஆண், பெண், விலங்கு, உயிருள்ளது, உயிரற்றது, ஆசை, கோபம், பாவம், துக்கம், கடமை, புனிதம், அசிங்கம், ஆடை, அவமானம், இழிதல், பழித்தல், கண்ணியம், நேர்மை, பச்சாதபம் இவரோடு ஒப்பிடக் கூடாது கடவுளை.

    விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை காணலாம். மனிதத் தன்மை ஒப்பிட்டு கடவுளைத் தேடாதிர்கள்.

    மூன்று வேலை உணவு கொண்டவனுக்கு மலர் அழகு.

    மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவை பார்ப்பவனுக்கு பழையசாதம் அழகு

    இதற்க்கு ஏன் கடவுள் வரவேண்டும்.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by அக்னி View Post
    ஆத்மா, அடுக்கிச் செல்லும் சம்பவங்கள் மனதை உலுக்கும் விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

    இதனை விடவும் மோசமான விளைவுகளை சுனாமி, பூகம்பங்கள், வெள்ளம், காட்டுத்தீ, எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன...
    இவற்றின் தாக்கத்தால், கடவுளை மறுதலிக்கலாம் என்றால்...

    உலகம் தோன்றிய காலம் முதலாக இன்றுவரையான காலம்வரையில்,
    இதுபோன்ற கொடும்நிகழ்வுகளை எண்ணிச்சொல்லிடலாம்.
    ஆக, இந்நிகழ்வுகளைத் தவிர்த்துப் பார்த்தால்,
    எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
    கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...

    வெள்ளைச் சுவரில் கறுப்பாய் இருக்கும் புள்ளியைச் சொல்வதுதானே மனித இயல்பு...
    நிறம்மாறி இருந்தாலும் நிலை மாறாது...

    இதுபோலத்தான்,
    கடவுள் இல்லை என்று மறுதலிக்க காரணங்களைத் தேடும் மனங்கள்,
    கடவுளினை ஏற்றுக்கொள்ள நிறைந்திருக்கும் காரணங்களைக் கண்டு கொள்வதில்லை...
    இதை நான் வழிமொழிகிறேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  11. #59
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    திரு .அக்னி அவர்களின் கருத்து

    எண்ணமுடியாத நல்நிகழ்வுகளினை நிகழ்த்தியவர்
    கடவுள் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது...

    திரு .நிவாஸ் அவர்களின் கருத்து

    இதை நான் வழிமொழிகிறேன்
    நண்பர்களே , கடவுளால் செய்யப்பட பல நல்ல நிகழ்வுகளை , தக்க நிரூபணங்களுடன் இங்கே எடுத்து சொல்லி என் சந்தேகத்தை தீர்த்து வைத்து மனத்தெளிவை ஏற்படுத்தினால் நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வேன்
    யாவரும் வாழ்க வளமுடன்

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்
    தெரியும் ஆதன்

    நீங்கள் எழுத்தும் கவிதைகளில் இருந்து
    நீங்கள் தரும் பின்னூட்டகளில் இருந்து
    கருத்தாடுவதிலிருந்தும் நன்கு உணர முடியும்

    நான் இவையத்து படிக்கவில்லை, ஆனால் கொஞ்சம் கொஞ்சம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •