Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 84

Thread: கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    இதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிடலாம், அதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிலாம் என்று சொல்லும் அளவுதான் கடவுளா, நிவாஸ் ?
    இயலாது என்பதைத்தான் அப்படி சொல்கிறேன் ஆதன் நீங்கள் நேரடியாக பொருள் கொண்டீர்கள்

    Quote Originally Posted by ஆதன் View Post
    இந்த பேரண்டத்தில் அண்டங்கள் ஒரு துளி, அந்த அண்டங்களில் சூரியகுடும்பங்கள் ஒரு துளி, அதிலொரு சூரியகுடும்பத்தில் பூமி ஒரு துளி, அந்த பூமியில் மனிதன் ஒரு துளி..

    ஆனானப்பட்ட கடவுள், எல்லாத்தையும் விட்டுவிட்டு, துளியின் துளியின் துளியின் துளியையா கவனிச்சிட்டு இருக்க போகிறான்.. நம் கவலைக்கு பதில் சொல்வதுதான் அவன் வேலையா ? நிச்சயமாயில்லை..

    கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை....
    இதில் ஒரு சிறு கருத்து வேறுபாடு உள்ளது ஆதன்

    கடவுள் இவற்றிலிருந்து விலகி நிற்கவில்லை

    இவையனைத்துமாகவே இருக்கிறார் என்பது மறுக்க இயலாதது.

    வானாகி மண்ணாகி ஒளியாகி வெளியாகி ஊனாகி உயிராகி உமையுமாய் யம்மையுமாய் எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  2. #38
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ///இந்த இயற்கையின் வடிவமைப்பு செயல்பாடுகள், விண்வெளியின் நீளம் என்ன? அதன் எல்லை அடைந்துவிட்டால் அதற்கடுத்து என்ன? இது போன்ற விடையில்லாக் கேள்விகளுக்கு பதில் கொண்டால் கடவுளுக்கான பதிலும் //ஒருவேளை கிடைக்கலாம்// அதுவும் உறுதியில்லை.
    //

    ஒரு வேளை எனும் வார்த்தைதான் என்னை நேரடியாக பொருள்கொள்ள வைத்தது...

    எங்கும் வியாப்பித்திருக்கும் இறைவனை ஏன் தினம் தினம் கொள்கிறோம்..

    ஆடாய், மாடாய், கோழியா,ஞமலியாய், செடியாய், நீராய், நெருப்பாய், காற்றாய், மண்ணாய், கல்லாய் நிவாஸ் ?

    ஏன்னா இது வெறும் பேச்சளவே! நாம் இதை மதிப்பது கூட இல்லை....
    அன்புடன் ஆதி



  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post
    எங்கும் வியாப்பித்திருக்கும் இறைவனை ஏன் தினம் தினம் கொள்கிறோம்..

    ஆடாய், மாடாய், கோழியா,ஞமலியாய், செடியாய், நீராய், நெருப்பாய், காற்றாய், மண்ணாய், கல்லாய் நிவாஸ் ?

    ஏன்னா இது வெறும் பேச்சளவே! நாம் இதை மதிப்பது கூட இல்லை....
    ஏனெனில் கொல்வதும் இறைவனாய் இருப்பதனால்..
    எதுவே தான் ஆத்மாவுக்கும் பதிலாய் கூறினேன் மேலே உள்ள பதிப்பில்.
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  4. #40
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வாசித்தேன், இறைவனாய் இருபதால் கொல்லலாமோ ?

    இல்லையென்றாலும் கொல்லலாம் இல்லையா ?

    இல்லைக்கும் இருப்புக்கும் பிறகு வேறென்ன வேறுபாடு ?

    //எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
    எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
    எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
    எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
    எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
    எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.
    //

    இந்த வரிகள் கீதையில் எங்குமே கிடையாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. சிலபல பிழைகளை மறைக்க பலசிலரால் கூறப்பட்ட ஒன்று அவ்வளவே..

    கொல்லப்படுவது கிரிஷ்ணனாலும், கிறிஸ்துவானாலும் கொல்தல் பாவம். கொல்லப்படுவது இறைவன் என்றால், ஒரு அட்டூழியம் நடக்கும் போது அமைதி காக்கலாமே ஏன் குமுற வேண்டும் ??

    துன்பம் செய்வது இறைவன் துன்பப்படுவதும் இறைவன் என்றால், அரக்கம் தேவம் என்பது ஏன் ? அரக்கனும் நானே தேவனும் நானே மனிதனும் நானே, நீ எங்கே துன்பப்பட்டாய் நான் தானே துன்பபடுகிறேன் என்று சொல்லி இருக்கலாமே, வதங்கள் தேவை இருந்திருக்காதே, அவதாரங்கள் தேவைப்பட்டிருக்காதே ? பிறந்தது இறைவன் இறந்ததும் இறைவன் என்றால் கர்மப்பலன் என்பதே இல்லை தானே ?

    கர்மபலனே இல்லை என்றால் பாவமென்ன புன்னியமென்ன எல்லாம் ஒன்றே ? கர்மாவே கடவுள் இல்லையா ?
    Last edited by ஆதி; 25-02-2011 at 07:31 AM.
    அன்புடன் ஆதி



  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதன் View Post

    //எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
    எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
    எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
    எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
    எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
    எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.
    //

    இந்த வரிகள் கீதையில் எங்குமே கிடையாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. சிலபல பிழைகளை மறைக்க பலசிலரால் கூறப்பட்ட ஒன்று அவ்வளவே..
    இல்லை ஆதன் இவையனைத்தும் கீதசாரமே. வெறும் வரிகளாக இல்லை ஒவ்வொரு பகுதியும் ஓவ்வொரு விளக்கமும் பொருள் தருவது இந்த வரிகளை தான்.

    இவை யாரோ சொல்லி வைத்தவை என்றால், இவ்வுலகில் உள்ள அனைத்து இதிகாசங்களும், மதக்கோட்பாடுகளும் இவ்வாறுதான். நான் இந்துவம் தான் கடவுள் என்பதை கூறவில்லை. இதில் கூறப்பட்டுள்ளது மக்களுக்கான விளக்கங்கள் தெளிவாகப் பொருந்தும்.

    Quote Originally Posted by ஆதன் View Post

    கொல்லப்படுவது கிரிஷ்ணனாலும், கிறிஸ்துவானாலும் கொல்தல் பாவம். கொல்லப்படுவது இறைவன் என்றால், ஒரு அட்டூழியம் நடக்கும் போது அமைதி காக்கலாமே ஏன் குமுற வேண்டும் ??

    உங்களில் பாவம் செய்யாதவன் இவள் மீது கல் எறியுங்கள்

    நான் கடவுளின் பிள்ளை, நீயும் தான்

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு

    மன்னித்து விடுங்கள் அவன் அறியாமல் செய்துவிட்டான்

    மன்னிக்கக் கற்றுக்கொள் கவுளாவாய்

    அனைவரும் கடவுளின் பிள்ளைகள்

    (இதில் யார் கொலைகாரன்? யார் நல்லவன்? யார் தொழு நோயாளி? யார் விபச்சாரி?

    ஆனால் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்?

    இங்கு பிள்ளைகள் எனக்கூறப்படுவது அன்கு கடுவுளாகவே கூறப்படுகிறது அவ்வளவுதான் வித்தியாசம்.

    கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
    விதியின் வலிமையையும் கடவுளுக்கே
    அதன் பலனும் கடவுளுக்கே
    கர்மாவின் வினையும் கடவுளுக்கே

    போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கடவுளுக்கே
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #42
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    மிகப் பொறுமையுடன் பதில்களை அளித்துக்கொண்டு இருக்கும் அன்பு நண்பர் திரு . நிவாஸ் அவர்களுக்கும் ,

    நான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டு ,
    என் பணியினை குறைத்து , எனக்கு உதவிய
    திரு .ஆதன் அவர்களுக்கும்

    எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    திரு . நிவாஸ் அவர்களே தங்களிடமிருந்து நான் இன்னும் நிறைய விளக்கங்களை எதிர்பார்கிறேன் . உங்கள் பதில்களின் முடிவில் உங்கள் தரப்பு நியாயமே சரியானது என என் மனதிற்கு தோன்றினால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் .

    எனவே நான் மீண்டும் சம்பவங்களின் அணிவகுப்பை தொடரப் போகிறேன் . இதில் தங்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்
    யாவரும் வாழ்க வளமுடன்

  7. #43
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நிவாஸ்

    பார்த்தீங்களா ? விவாதம் வேறும் மார்க்கம் போகுது..

    நான் எப்போ மதத்தை பற்றி பேசினேன்..

    திருக்குறள் தமிழருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் கீதை, வேதங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மற்றுமே சொந்தமானது என்று சொல்வது..

    குர்-ஆன், விவிலியம், தனாக், தாவ் தீ சிங், தி செண்ட் அவஸ்தா, தம்மனபட, ஸ்ரீ குரு கரந் சாஹிப், அபுதுல் பாஹா போன்ற நூல்களும் இது போலவே ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் சொந்த மானவை அன்று, அப்படி சொந்தமாய் நினைத்தால், ஆன்மிக, எங்கும் வியாபித்து இருந்தல் என்று சொல்வது எல்லாம் பொய் இல்லையா ?

    நீங்க கீதை பற்றி பேசினாலும், குர்-ஆனை பற்றி பேசினாலும், விவிலியம் பற்றி பேசினாலும் குறுகிய வட்டத்துக்கு வெளியில் வந்து பேசுங்கள் பேசுவோம்..

    மறைகளை பற்றி பேசும் போது மதப்பெயர் பற்றி பேசுவாதானால் விவாதத்தை தொடர்தல் தேவையற்றது..

    குறிப்பு:-

    மேலே குறிப்பிட்டிருக்கும் நூல்களில் பலவற்றை கல்லூரி காலத்திலேயே ஆர்ந்து படித்து எல்லா மறைகளையும், அவற்றை ஒப்புமை படித்து 38 பக்க அளவில் ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறேன், இதை இங்கு குறிப்பிடுவது தற்புகழ்ச்சி பாடவல்ல, தெரியாமல் எதுவும் பேசவில்லை என்பதை சொல்லவே, எந்த நூல் பற்றியும் பேசுவோம் மதத்தை தவிர்த்து பேசுவோம்
    அன்புடன் ஆதி



  8. #44
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    சம்பவம் 3

    பள்ளியில் தீ பிடித்தது . மழலை மொழி பேசும் பிஞ்சு உயிர்கள் அந்த கொடுந்தீக்கு இரையாகின .

    சாலையில் செல்லும் குழந்தை கால் தடுக்கி கீழே விழுந்து அம்மா என்று கதறி அழுகிறது . அந்த அம்மா என்ற வார்த்தையை கேட்ட மாத்திரத்தில் , அந்த குழந்தை அழுவதைக் கண்டு மனம் தாளாமல் , பதறி கொண்டு ஓடோடி போய் அந்த குழந்தையை தூக்கி அதற்கு சமாதானம் சொல்லி , அதன் அழுகையை துடைத்து , அமைதி படுத்துவோம் நாம் , இல்லையா ?

    ஒரு மனிதனுக்கே குழந்தை மீது இவ்வளவு இரக்கம் இருக்கும் போது , கடவுளுக்கு குழந்தைகள் மீது எவ்வளவு கருணை இருக்க வேண்டும் ?

    கடவுளுக்கு கருணை இல்லையா ?

    அல்லது

    கடவுளே இல்லையா ?

    அந்த பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி , வெந்து துடிதுடித்து இறந்தார்களே , அதற்கு காரணம் என்ன ? அவர்களின் விதியா ?

    விதிதான் எனில், ஒரு உயிர் துடித்துக் கொண்டு இருக்கும்போது ஓடிவந்து காப்பாற்றாத கடவுள் எதற்கு ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  9. #45
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    சம்பவம் 4

    மரணபடுக்கையில் நோயுடன் போராடும் தாய் ,

    மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் தந்தை ,

    இவர்களை கவனித்துக் கொள்ள மனம் இல்லாமல் தனிகுடித்தனத்தில் மகனும் , மருமகளும்

    நோய் வென்று தாய் இறந்தாள் .

    கவனிக்க ஆள் இல்லாமல் பட்டினியால் இறந்தார் தந்தை .

    தாய் , தந்தை இறந்த பின் , மிக்க மகிழ்ச்சியுடன் ,
    அவர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து சம்பாதித்த வீட்டை
    அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார் மகன் .

    கடைசீவரை சுகபோகமாக வாழ்ந்து மறைந்தனர் மகனும் , மருமகளும் .

    தாய் தந்தையை கவனித்துக் கொள்ளாமல்
    அவர்களை சாகவிட்ட மகனுக்கு எந்த தண்டனையும்
    அவரது வாழ்நாளில் இறைவன் அவருக்கு அளிக்கவே இல்லை ?

    இது எந்தவிதத்தில் நியாயம் ?

    இதுதான் இறைவனின் நீதியா ?

    அல்லது

    இறைவன் என்ற ஒருவனே இல்லையா ?

    இல்லாத இறைவனிடம் நான் நியாத்தை எதிர்பார்கிறேனா ?

    அந்த தாயும் , தந்தையும் இறந்தது வேண்டுமானால்
    யதார்த்த உண்மையாக இருக்கலாம் .

    பிறந்த மனிதன் என்றாவது ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் .
    நான் அதை மறுக்கவில்லை .

    ஆனால் மகன் அந்த தாயையும் தந்தையையும்
    மரண அவஸ்தையில் இருந்து காப்பாற்றி
    அவர்களுக்கு அமைதியை தந்து இருக்கலாமே ?

    அவர்கள் படு அவஸ்தைப்பட்டு இறப்பதற்கு பதில் ,
    அமைதியான மரணத்தை தழுவி இருப்பார்கள்
    மகன் அவர்களை கவனித்து இருந்தால் .
    யாவரும் வாழ்க வளமுடன்

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
    விதியின் வலிமையையும் கடவுளுக்கே
    அதன் பலனும் கடவுளுக்கே
    கர்மாவின் வினையும் கடவுளுக்கே
    //

    எல்லாம் கடவுள் என்றால் கடவுளை அடையும் பிரயத்தனங்கள் எதற்காக ?

    மறைகள் எதற்காக ?

    வழிகாட்ட வந்த ஞானிகள் எதற்காக ?

    ஒவ்வொரு பதிவிலும் என் சில கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்குறீர்கள் இல்லையா ?

    இப்போதைக்கு கடவுள் என்பது "கேள்வி"
    Last edited by ஆதி; 25-02-2011 at 10:09 AM.
    அன்புடன் ஆதி



  11. #47
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    சம்பவம் 5

    பாடுபட்டு கண்ணும் கருத்துமாக மகளை வளர்த்தனர் பெற்றோர் .

    அவளை பட்டப்படிப்பெல்லாம் படிக்க வைத்தனர் .

    நல்ல இடத்தில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவனை
    அவளுக்கு திருமணம் செய்துவைத்தனர்
    மிக அதிக அளவு வரதட்சினை கொடுத்து .

    வந்த மருமகனுக்கு மாமனாரின் செல்வத்தை
    கொள்ளை அடிக்க ஆசை .

    மகளோ , தன் பெற்றோர் என்று கூட நினைக்காமல் அவர்களை பணம் காய்க்கும் மரமாகவே நினைத்து நன்றாக அவர்களை ஏமாற்றி அவர்களது சொத்துகளையும் பறித்துக் கொண்டு அவர்களது உழைப்பையும் உறிஞ்சினாள் , பாசம் என்ற போர்வையில் தன் சுயரூபத்தை ஒளித்துக்கொண்டு .

    மகள் பாசத்தினால் அனைத்தையும் இழந்த அந்த பெற்றோரை ,
    ஊரைக் கூட்டி அவமரியாதை செய்தாள் அந்த மகள் ,
    அவளின் தவறை எடுத்து சொன்ன ஒரே காரணத்திற்க்காக

    நல்ல வசதியான வாழ்கையில் வாழ்வாங்கு வாழ்கிறாள் மகள் .
    பாசத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்ட பெற்றோரோ வாடுகின்றனர் .

    பெற்றவரையே வஞ்சித்துவிட வேண்டும், தான் நன்றாக வாழவேண்டும் எனில் . ஆம் , இதுதான் அந்த மகள் உலகுக்கு உணர்த்தும் நீதி . அவள் செய்த பச்சை துரோகத்திற்கு இறைவன் அவளுக்கு அளித்த பரிசு , சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தான வாழ்க்கை

    இதுதான் இறைவனின் தீர்ப்பா ?

    அல்லது

    இறைவனே இல்லையா ?

    அல்லது

    இறைவன் என்ற ஒருவன் இருந்தும் ,
    அநியாயவாதிகளைக் கண்டும் காணாமல்
    கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறானா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

  12. #48
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    16 Aug 2010
    Posts
    343
    Post Thanks / Like
    iCash Credits
    9,589
    Downloads
    24
    Uploads
    0
    சம்பவம் 6

    இன்னொருத்தியின் கணவனை அபகரித்துக் கொண்டாள் ஒருத்தி .

    கணவனை உயிருடன் பறிகொடுத்த மனைவியோ பரிதவித்தாள் , துடிதுடித்தாள் , கதறினாள் , அப்பெண்ணுக்கு சாபமிட்டாள்

    பின் ஒருவழியாக தன் கணவனை அந்த பேயிடமிருந்து மீட்டுக் கொண்டு , கணவனுடன் ஊரைவிட்டே ஓடிபோய்விட்டாள் , எங்கே அந்த ஊரிலேயே இருந்தால் அந்த பேய் மறுபடியும் தன் கணவனை பிடித்துக் கொண்டு விடுமோ என்ற பயத்தினால் .

    எதுவுமே நடக்காதது போல் , அந்த பேய் sorry அந்த பெண் இன்னொருவனை ( ஏமாந்தவன் !!) திருமணம் செய்துகொண்டாள்.

    மிக மகிழ்ச்சியுடன் நல்ல அந்தஸ்தான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து போனாள் .

    கணவனை இவளிடம் பறிகொடுத்த அந்த மனைவி இவளுக்கு இட்ட சாபம் ஏன் பலிக்கவில்லை ? அந்த மனைவி எப்படியெல்லாம் கதறி துடித்து கண்ணீர் விட்டு இருப்பாள் தன் வாழ்கையை இன்னொருத்தி பறித்துக் கொண்டாளே என்று நினைத்து .
    அந்த கண்ணீருக்கு என்ன பதில் ?

    இவள் செய்த துரோகத்திற்கு கடவுள் ஏன் தண்டனை அளிக்கவில்லை ?

    அல்லது தண்டனை அளிக்க கடவுளே இல்லையா ?
    யாவரும் வாழ்க வளமுடன்

Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •