இங்கு கூறப்பட்டு இருக்கும் எனது கருத்துகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . உண்மையை அறிந்துகொள்ளும் ஆவலுடன் எழுதப்பட்டவையே
கடவுள் உண்மையா ? கட்டுகதையா ?
இக்கேள்விக்கு பதிலாக சில சம்பவங்களை இங்கே நம் மன்றத்தின் முன் வைக்கிறேன் . இந்த சம்பவங்களின் அடிப்படையில் , மன்ற நண்பர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
யாவரும் வாழ்க வளமுடன்
ஆதன்,
நான் அந்த புத்தக் கதையை கூறியது கௌதம புத்தரை கடவுளாக கொள்ளவேண்டும் என்று இல்லை. அவர் கூறிய அந்த போதனைக் காகத்தான்.
ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.
கோவிலின் வாசற்படியும் கோவில் தானே. அதில் ஒன்றும் தவறில்லை. எவ்வளவு தான் மனிதன் சிந்தித்தாலும் உயிர் எங்கிருந்து வருகிறது என்று அறிந்தவருமில்லை, இந்த உடலை விட்டு எங்கே போகிறது என்று தெரிந்தவரும் இல்லை. இந்த இயற்கையின் வடிவமைப்பு செயல்பாடுகள், விண்வெளியின் நீளம் என்ன? அதன் எல்லை அடைந்துவிட்டால் அதற்கடுத்து என்ன? இது போன்ற விடையில்லாக் கேள்விகளுக்கு பதில் கொண்டால் கடவுளுக்கான பதிலும் ஒருவேளை கிடைக்கலாம் அதுவும் உறுதியில்லை.
சூரியனை கடவுளாக கொண்டதும் தவறில்லை. கண்ணுக்கு தெரிந்த சூரியன் கடவுள் தான். விண்வெளியில் பலகோடி சூரியன் இருக்கலாம். ஆனால் இந்த பூமிக்கு, அதன் உயிருக்கு மூலாதாரம் இந்த சூரியன்தான்.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
இங்கு நான் கூறப்போகும் சம்பவங்களில் சில செய்திதாளில் நான் படித்த சம்பவங்கள் , சில என்னை சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள்
சம்பவம் 1
30 வயதிற்கு மேல் ஆகியும் தன் மகளுக்கு திருமணமே ஆகவில்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலாவது திருமணம் நடைபெறாதா ? என்ற ஏக்கத்துடனும் , எதிர்பார்ப்புடனும் கோவிலுக்கு சென்றனர் தந்தை , தாய் , மகள் மூவரும் .
கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் வாகன விபத்து ஏற்பட்டு , தந்தை , மகள் இறந்துவிட ,தற்போது அந்த தாய் மட்டும் தனியே அனாதையாக துடிதுடித்து வாழ்கிறார் தனது கணவரையும் , மகளையும் நினைத்து அழுதுகொண்டே .
அந்த தாய் கோவிலுக்கு சென்று கடவுளிடம் என்ன வேண்டியிருப்பார் ?
தன் மகளுக்கு தாலி பாக்கியத்தை தரவேண்டும் என்றுதானே கடவுளிடம் வேண்டியிருப்பார் . ஆனால் நடந்தது என்ன ? அவரது தாலியே பறிபோய்விட்டதே ? இதற்காகவா அவர் கடவுளைத் தேடி நம்பிக்கையுடன் கோவிலுக்கு சென்று முறையிட்டார் ?
மரணம் - எந்த மனிதனும் சந்தித்தே தீரவேண்டிய யதார்த்தமான உண்மை . இதை நான் ஒப்புகொள்கிறேன் .
ஆனால் என் ஆதங்கம் என்னவெனில் , இறந்தவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்துவிட , உயிரோடு இருக்கும் அந்த தாயின் நிலை என்ன ? தன் கணவரையும் , மகளையும் நினைத்து நினைத்து பாசத்தால் துடித்து வாடிக்கொண்டு இருக்கிறாரே ? ஏன் இந்த வேதனை ? இந்த வேதனைக்கு காரணம் என்ன ? பாசம் .
ஆம் , பாசம் என்ற மாயவலையில் மனிதனை சிக்கவைத்து , அவன் தவிக்கும் தவிப்பை வேடிக்கை பார்கிறானே இறைவன் . இது என்ன நீதி ? இதுதான் விதியா ? . இதுதான் இறைவனின் இரக்க குணமா ?
இறந்தது அவர்கள் விதிவசத்தால் , அந்த தாய் கதறி துடிப்பதும் விதிவசத்தால் ஆக இங்கு விதிதான் வலிமையானது எனில் கடவுள் எதற்கு ?
யாவரும் வாழ்க வளமுடன்
கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் நடக்கும் என்றும் கடவுளிடம் சென்று கேட்டால் அவர் கொடுக்க வேண்டும் என்றும் யார் சொன்னது? கடவுள் சொன்னாரா? இல்லை போகும் வழியில் மரணம் வாறது என்று கடவுள் உறுதி தந்தாரா?
சரி அவருடைய கணவன் அடுத்தநாள் இறந்திருந்தால் அப்பொழுது கடவுள் நல்லவரா? அனைவருக்கும் தான் ஆசை என் அப்பா என் அம்மா நான் எல்லோரும் சாகவே கூடாதென்று நடக்குமா. இப்பொழுது கடவுள் இல்லையா?
அது என்னக அவங்க நினைப்பது நடந்துவிட்டால் கடவுள் உண்டு. அல்லது வேறு எதுவும் நடந்து விட்டால் கடவுள் கடவுள் இல்லை. எவ்வளவு பெரிய சுயநலம்.
திருமணம், பணம் வேண்டும், வியாதி குனடய வேண்டும், வேலை வேண்டும். வீர் என்ன என்ன வேண்டும்? கடவுள் என்ன திருமான் புரோக்கரா? இல்லை சாப்ட்வேர் கம்பெனி ஓனரா?
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
நன்றி நண்பர் திரு . நிவாஸ் அவர்களே ,
என் கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன் . நான் எழுதியதில் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு பதில் அளித்திருக்கிறீர்கள் . மீதியையும் எடுத்துக் கொண்டு பதில் கூற வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் .
என் கேள்வி
மரணம் - எந்த மனிதனும் சந்தித்தே தீரவேண்டிய யதார்த்தமான உண்மை . இதை நான் ஒப்புகொள்கிறேன் .
ஆனால் என் ஆதங்கம் என்னவெனில் , இறந்தவர்கள் நிம்மதியாக போய் சேர்ந்துவிட , உயிரோடு இருக்கும் அந்த தாயின் நிலை என்ன ? தன் கணவரையும் , மகளையும் நினைத்து நினைத்து பாசத்தால் துடித்து வாடிக்கொண்டு இருக்கிறாரே ? ஏன் இந்த வேதனை ? இந்த வேதனைக்கு காரணம் என்ன ? பாசம் .
ஆம் , பாசம் என்ற மாயவலையில் மனிதனை சிக்கவைத்து , அவன் தவிக்கும் தவிப்பை வேடிக்கை பார்கிறானே இறைவன் . இது என்ன நீதி ? இதுதான் விதியா ? . இதுதான் இறைவனின் இரக்க குணமா ?
இறந்தது அவர்கள் விதிவசத்தால் , அந்த தாய் கதறி துடிப்பதும் விதிவசத்தால் ஆக இங்கு விதிதான் வலிமையானது எனில் கடவுள் எதற்கு ?
யாவரும் வாழ்க வளமுடன்
இல்லை ஆத்மா
நான் முழவது படித்து விட்டுத்தான் பதிப்பிட்டேன். இந்த பின்னூட்டம் நீங்கள் குறிப்பிட்ட முதல் மூன்று வரிகளுக்கு. அது மட்டுமல்ல இரு கடவுள் உண்டா? இல்லையா? என்னும் கேள்வியை எழுப்பும் மூடத்தனமான செயல்பாடுகள்.
உங்களது இறுதி கேள்விக்கு பதில் இதோ - இப்பொழுது நான் சொல்கிறேன். விதிதான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள். அது செய்வது நன்மையா தீமையா என்பது இருக்கட்டும். கடவுள் உண்டு என்பது இப்போது கொள்ளப்படும் சரிதானே
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
சம்பவம் 2
மகனுக்கு திருமணம் முடிவாகி திருமண பத்திரிக்கை அச்சடித்தாயிற்று . முதல் பத்திரிக்கையை குலதெய்வம் கோவிலில் வைத்து சாமி கும்பிடவேண்டும் என்று அந்த தாய் , தந்தை காரில் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர் .
திரும்பி ஊருக்கு வரும் வழியில் , ஆளிலா ரயில்வே கேட்டை கார் கடக்க முயலும்போது , ரயில் பாதையின் பாதியில் கார் சென்று கொண்டு இருக்கும்போது , எதிர்பாராவிதமாக ரயில் வந்தது . ஓட்டுனர் எப்படியும் தப்பித்துவிட எண்ணி காரை வேகமாக செலுத்த முயற்சித்தார் . ஆனால் விதி வசத்தால் காரின் எஞ்சின் off ஆகிவிட , காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வதற்குள் ரயில் காரின் மீது மோதி தாய் , தந்தை , ஓட்டுனர் மூவரும் உடல் சிதறி இறந்தனர் .
அவர்கள் விதிவசத்தால் இறந்தனர் , விதிவசத்தால் மகன் பெற்றோரை இழந்தார் . ok நான் அதை ஒத்துக் கொள்கிறேன் . அவர்களின் மகனுக்கு அவர்களது இழப்பு பேரிழப்பு . அந்த இழப்பில் இருந்து மகன் கொஞ்சம் , கொஞ்சமாக மீண்டு விடுவார் .
அதுவும் ok . ஆனால் அந்த மணப்பெண்ணின் கதி என்ன ?
திருமணம் நிச்சயிக்கப்பட்ட உடனேயே மாமனார் , மாமியாரை விழுங்கி விட்டாளே ? இவளை திருமணம் செய்துகொண்டால் கணவனின் நிலை என்னவாகும் ? என்று ஊரார் அந்த பெண்ணை தூற்றி , அப்பெண்ணுக்கு திருமணமே நடை பெற விடாமல் செய்வார்களே ? இதையும் அந்த பெண்ணின் விதி வசத்தால் நடந்தது என்று சாக்குபோக்கு கூறுவாரோ அந்தக் கடவுள் ?
எதற்கெடுத்தாலும் விதியை காரணம் காட்டும் கடவுள் நமக்கு தேவையா ? அல்லது
விதி , கடவுள் எல்லாமே வெறும் கட்டுக்கதையா ?
யாவரும் வாழ்க வளமுடன்
நன்றி ஐயா , எனக்கொரு சந்தேகம்
அவ்வாறெனில் கடவுளை ஏன் கும்பிடவேண்டும் ?விதிதான் கடவுள் என்றால் என்ன செய்வீர்கள்
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் நீ என்னிடம் எவ்வளவுதான் அழுதாலும் , தொழுதாலும் நான் மனமிரங்கி , உனக்காக எதையும் செய்யப் போவது இல்லை என்று கூறுபவரே கடவுள் எனில் கருணையே வடிவானவர் கடவுள் என்பது வெற்றுவார்த்தைகள்தானே ?.
ஐயா , இக்கேள்வியை நான் விதண்டாவாதமாக கேட்கவில்லை . ஒருவேளை எனக்கு தெரியாத விளக்கம் , பதில் மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கலாம் . மற்றவரின் பதில் எனக்கு மனத் தெளிவை ஏற்படுத்தலாம் .
அவ்வாறு எண்ணியே நான் கேள்வியை கேட்டு இருக்கிறேன்
யாவரும் வாழ்க வளமுடன்
//நான் அந்த புத்தக் கதையை கூறியது கௌதம புத்தரை கடவுளாக கொள்ளவேண்டும் என்று இல்லை. அவர் கூறிய அந்த போதனைக் காகத்தான்.
//
நீங்க அப்படி சொன்னதா, நானும் சொல்லலியே நிவாஸ்..
//ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.
கோவிலின் வாசற்படியும் கோவில் தானே. அதில் ஒன்றும் தவறில்லை.//
மேலுள்ள இரு வரிகளிலும் உள்ள முரண்களை கவனியுங்கள்..
அவர்கள் சொல்லவில்லை நாம்தாம் ஆக்கினோம், ஆனால் அதற்கு நாம் சொல்லும் காரணங்கள் என்ன பாருங்கள். நம் மனவோட்டம் அப்படி அலை மாதிரி மேலெழுந்து தாழும், அதன் விழைவே இது, இன்னொரு காரணம் என்ன தெரியுமா, நமெல்லோருக்கும் ஒரு ஆசை உண்டு நாம் சொல்லுவது மாதிரி கடவுள் இருக்க வேண்டுமென்று, ஒரு வேளை நாமெண்ணியவாறு கடவுளில்லை என்றால், நாம் கடவுளை கடவுளாகவே ஏற்க தயாராக இருப்பதில்லை..
நபியை யாரும் கடவுளா ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனிக்க..
அவர் வாழும் காலத்திலேயே தனக்கு கோவில்கள் கட்டுதல் கூடாது என்று சொல்லி இருக்கிறார்..
இதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிடலாம், அதை கண்டுபிடித்தால் கடவுளை கண்டுபிடித்துவிலாம் என்று சொல்லும் அளவுதான் கடவுளா, நிவாஸ் ?
இந்த பேரண்டத்தில் அண்டங்கள் ஒரு துளி, அந்த அண்டங்களில் சூரியகுடும்பங்கள் ஒரு துளி, அதிலொரு சூரியகுடும்பத்தில் பூமி ஒரு துளி, அந்த பூமியில் மனிதன் ஒரு துளி..
ஆனானப்பட்ட கடவுள், எல்லாத்தையும் விட்டுவிட்டு, துளியின் துளியின் துளியின் துளியையா கவனிச்சிட்டு இருக்க போகிறான்.. நம் கவலைக்கு பதில் சொல்வதுதான் அவன் வேலையா ? நிச்சயமாயில்லை..
கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை....
அன்புடன் ஆதி
ஆத்மா நீங்கள் என்னை நிவாஸ் என்றே அழைக்கலாம். ஐயா வேண்டாம்.
மன்னியுங்கள் நான் சிறுது தவறு செய்து விட்டேன். இதோ பதில் -
கடவுளை பொறுத்தவரை பாசம், நேசம், இறக்கம், வெறி, கோபம் எதுவும் இல்லை இவையனைத்தும் மனிதனுக்குத்தான்.
கீத உபதேசம் பார்த்தால்
"கொல்பவனும் கண்ணன் கொல்லப்படுபனும் கண்ணனே" இதில் யார் மீது இறக்கம், யார் மீது கோவம் கொள்வது, அனைத்தும் கண்ணன்.
விதியின் அம்சம் அதுதான் அது பக்தன், நாத்திகன் என்று பேதமில்லை. அவரவர்க்கு அந்த கால கட்டத்தில் எதுவோ? அதுவே என்பது சாராம்சம்.
ஒரு குழைந்தை பிறந்தால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் அப்போது யாரும் சொல்வதில் நான் அளவுக்கு அதிகமா மகிழ்ச்சியாக இறுக்கிறேன் கடவுள் கொடியவன் விதி கொடுமை என்று.
இதுதான் மனிதனின் எண்ணம். தவறு நமது எண்ணத்தில் மட்டும், கடவுளில் இல்லை. கடவுள் தன்மை என்பது எதனையும் சாராதது.
எது நடந்ததோ அது நன்றாக வே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக வே நடக்கும்.
எதை நீ இழந்து விட்டாய் அதற்காக அழுகிறாய்.
எதை நீ கொண்டுவந்தாய் அதை இழப்பதற்கு.
எதை நீ படைத்தாய் அது வீனாவதற்க்கு.
எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கே கொடுக்கப்பட்டது.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks