Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 84

Thread: கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட சக்தி தான் கடவுள்... கடவுள்: அனைத்தையும் கடந்தவர்.

    மனுஷனுடைய இருதயத்தை கொண்டோ, மனதை கொண்டோ கடவுளை பூரணமாக அறிந்து கொள்ள முடியாது..

    நம்மில் நல்ல குணங்கள் இருப்பின் அது கடவுளுடைய குணாதிசயம் ஆகிறது, கேட்டகுணங்கள் இருப்பின் அது கடவுள் அல்லாத ஒன்றினோடு பொருந்துகிறது.

    நம்மையே உதாரணத்திற்கு எடுத்துகொள்வோமே, சாலையில் ஒருவன் அடிபட்டு கிடக்கின்றான், நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும்...

    நம்மில் பெரும்பாலானோர் என்ன செய்வோம், கடவுளே இவன காப்பாத்துன்னு சொல்லீட்டு போய்கிட்டே இருப்போம்.

    இதுல நாம கடவுள எப்படி குத்தம் சொல்ல முடியும்? உண்மைய சொன்னா நாம அதுக்கு யோக்கியதை இல்லாதவர்கள்.

    இந்தியாவில் சைவம், வைணவம் பரவியது ஆரியர்களது வரவினால் தான்.

    அவர்கள் வந்து செய்யும் தொழிலின் அடிப்படையில் ஜாதிகள் பிரித்தார்கள், சூரியனையும் சந்திரனையும் வழிபட்டார்கள்...

    நான் சிறுவனாய் இருந்த பொழுது தினமும் பூஜை செய்துவிட்டு தான் பள்ளி செல்லுவேன். அப்படி ஒரு ஆத்திகன்.

    சில நேரங்களில் நினைத்து பார்ப்பேன். தவறாக நினைக்க வேண்டாம், புள்ளையாரை உதாரணத்திற்கு எடுத்துகொள்வோம்.

    ஒரு யானையின் தலையை மனிதனின் தலையோடு இணைக்க முடியுமா? இருவரது உடற்கூறும் வெவ்வேறு. தலை துண்டிக்கப்பட்ட மனிதன் எப்படி உயிர் வாழ்வான். இது ஒரு மூட நம்பிக்கை அல்லவா? சற்று சிந்தியுங்கள்...

    இசுலாமியர்களுக்கு அவர்களது மதகுருமார் என்ன போதிகிர்ரர்கள் தெரியுமா?
    இசுலாமியன் அல்லாத யாரையும் அவர்கள் கொல்லலாம். மற்ற ஜாதிக்காரர்களை போல வாழக்கூடாது. அவர்களது கொள்கைப்படி ஜிஹாத், தீவிரவாதம் சரிதானாம்

    ஒரு உயிரின் விலையை என்று மனிதன் உணருகிறானோ அன்று கடவுள் அவனுள் பிறக்கிறார்..


    எந்த ஒரு இசுலாமியனயவது இது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், இது என்னுடன் பணிபுரியும் ஒரு இசுலாமிய நண்பன் கூறியது

    ஒரு சராசரி மனிதன் என்ன செய்கிறான். மீசை வைத்து தாடியை மழித்துக்கொள்கிறான். இசுலாமியன் தாடி வைத்து மீசையை மழித்துக்கொள்கிறான்.

    இதை எல்லாம் விட்டு மனிதனை மனிதனாக பார்த்து ஒற்றுமையோடு வாழ்ந்தால் மனிதம் சிறக்கும்... உலகம் செழிக்கும்

    மதங்கள் என்னும் தடைகளை உடைத்து மனிதநேயம் என்னும் வெள்ளி முளைத்து நாம் மனிதர்கள் என்ற எண்ணம் உயிர்த்தால் ஓங்கி வளரும் மனிதம்..


    இந்த பதிவின் மூலம் நமது நண்பர்களின் மனம் புண்படும்படி கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை தகுந்த விளக்கத்தின் பேரில் நிர்வாகிகள் நீக்கலாம்...
    Last edited by sarcharan; 24-02-2011 at 11:54 AM.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    நண்பர்கள் அனைவரும் மிக அருமையாக தங்களின் பங்களிப்பை தந்துக் கொண்டு இருக்கிறீர்கள்...

    ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து மற்றவர்களின் மனதை நோகடித்து விடக்கூடாது என்ற நினைப்புடன் நாம் சொல்லுவதில் இருந்தே தெரிகிறது கடவுள் எங்கு இருக்கிறான் என்று, நம் நினைப்பிலும் நம் பண்பிலும் தான் கடவுள் இருக்க வேண்டும்.... அது நம்மில் பலருக்கு இருக்கிறது...

    இன்னும் இன்னும் பேசலாம், .....
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    யூத மறையின் தனாக்கில் ஒன்றான தோரா, மோசேவால் வழங்கப்பட்டது, இந்த நூல் விவிலியம், குர்-ஆன், மற்றும் தனாக் அனைத்திலும் ஒரு புத்தகமாக கருதப்படுகிறது, இஸ்லாமிய நாடுகள் தங்களின் சட்டங்களை இந்த நூல் கொண்டே வகுத்து வைத்திருக்கின்றன, இந்த புத்தத்தில் "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்று பேசக்கூடிய ஒன்று..

    ஆனால் இதனை முழுமையாக கற்றுணர்ந்தால் நமக்கு தோன்றுவது என்னவென்றால், பிறர் உனக்கு எதை செய்ய கூடாதென்று நினைக்கிறாயோ, அதை நீ பிறருக்கு செய்யாதே, என்பதுதான்..

    இந்த ஒரு வரி போது உலக நெறிகள்/மறைகள் அனைத்தையும் பின்பற்ற.
    அன்புடன் ஆதி



  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    அன்பே சிவம்

    சக்தி என்று ஒன்று உள்ளது
    நாம் ஆறியா சக்தி,

    வடிவமைப்பும் உறுவங்களும்
    அவர் அவரின் எண்ணங்களுக்கேப்ப
    அமைந்ததே , அதோடு நம் முன்னோர்கள்
    தங்கள் மூதாதையர்களையே
    காவல் தெய்வமாக பூஜிக்கின்றனர்

    என்னை பொறுத்தவரை நம்மை
    வழிநடத்தும் சக்தியே கடவுள்

    தம்பி என்னை திரும்பி கேட்கலாம்
    அப்படின்னா எதுக்கு வருஷம்
    வருஷம் திருப்பதிக்கு போரிங்கன்னு
    அது ஒரு மன திருப்திக்கு பா!!!!
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    எவ்வளவு கஷ்டம் வந்தாலும்
    கடவுள்
    இல்லை என்பவனுக்கு இல்லை
    உண்டு என்பனுக்கு உண்டு

    இது அவரவர் மனநிலை பொறுத்தே அமையும்

    இல்லை என்று சொன்னாலும் கடவுளுக்கு அசிங்கமில்லை

    உண்டு என்று சொன்னாலும் கடவுளுக்கு பெருமையுமில்லை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    "புத்தரிடம் குழந்தை பிணத்துடன் வந்த பெண்மணி ஐயா என்குழந்தை பாம்பு தீண்டி இறந்துவிட்டது தயவு செய்து மீண்டும் உயிர்பெறச் செய்யுங்கள் இவன் என் ஒரே மகன் என்று புலப்பினாள்

    அதற்கு புத்தர் கர்ம பலனை நாம் அனுபவித்துதான் ஆகா வேண்டும் என்று ஆறுதல் கூறியும் அவள் கேக்கவில்லை

    உயிர்பெறச் செய்யவில்லை என்றால் கடவுள் நம்பிக்கை விடுத்து தன் வாழ்க்கையும் முடித்துகொள்வேன் என்று அவள் கூற

    புத்தர் கூறினார் "இதுவரை இறப்பே நடக்காத வீட்டில் இருந்து சிறுது கடுகு வாங்கி வா" என்றார்.

    கடைசிவரை அவளால் முடியவில்லை

    "இதை நான் யாரையும் காயப்படுத்த சொல்லவில்லை, வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கடவுளை வெறுப்பது தவறு"
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நிவாஸ், கடவுள் மறுப்பு என்பது வேறு, கடவுள் வெறுப்பு என்பது வேறு..

    இல்லை என்றால் மறுப்பு, பிடிக்கவில்லை என்றால் வெறுப்பு..

    வெறுப்பென்று பார்த்தால், பலரும் நமக்கு பிடிக்காத மற்றக் கடவுளை வெறுத்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்..

    இல்லை என்று சொல்லவும், இருக்கு என்று சொல்லவும் நம்ப வேண்டும். நம்பிக்கை தான் எல்லாம் என்றால், நம்பிக்கை தான் கடவுள்..

    ஆத்திகனும் நம்புறான், நாத்திகனும் நம்புறான், இருவரின் நம்பிக்கையும் வேறு வேறு..

    புத்தன் என்று சொல்கிறோமே அதில் பல குழப்பம் உண்டு தெரியும்... பல புத்தர்கள் இருந்திருக்கிறார், ஔவை மாதிரி..

    ஔவை என்றால் முதியவள் என்று பொருளுள்ளது மாதிரி புத்தன் என்றால் விழிபுணர்வு உற்றவன் என்பது பொருள்..

    நீங்கள் சொல்லும் புத்தன் புத்தமதத்துக்கு சொந்தக்காரனா என்பதே சந்தேகம் தான்..

    சூரபத்மனை பற்றி தாமரையண்ணா சொன்னரே அந்த மாதிரி தான் கடவுளை வெறுப்பது கூட நமக்கு வழங்கப்பட்ட ஒரு உரிமைதான் ஆனால் அதனையும் ஒழுங்க செய்யனும்..
    அன்புடன் ஆதி



  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    ஆனால் ஆதன்,

    வாழ்க்கையில் தொண்ணூறு சதவிகிதம் வாழ்க்கையில் வரும் துன்பங்களால் கடவுலை வெறுக்கவும் செய்கிறார்கள், மறுக்கவும் செய்கிறார்கள்.

    வெறுப்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள், மறுப்பவர்கள் நபிக்கை இழந்து கடவுள் இல்லவே இல்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

    இங்குதான் கடவுள் பற்றிய சந்தேகம் முளைக்கிறது. நான் சொன்னது கௌதம புத்தரைத்தான். ஏனென்றால் அவர்தான் எந்த ஒரு மாயாஜால வித்தைகளும் நிகழ்த்தாமல் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #21
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல விவாதம்தான். இதில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

    கடவுள்..அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    ஒருசில கணங்களில் நம்மை அறியாமல் நடந்துவிடும் சில செயல்களில் , நம்சக்தியைத் தாண்டிய ஒரு காரியத்தை நாம் செய்துவிடிருக்கக் கூடும். அல்லது பிறர் நமக்கு செய்திருக்கக் கூடும். இதில் நாம் வியப்பது என்னவென்றால், மனித சக்தியென்று நாம் வரையறுத்த எல்லையை மீறி இச்செயல்கள் நடப்பதால் இன்னொரு சக்தி கண்டிப்பாக இதில் இடைப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.

    நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.

    நல்லொழுக்கம் அனைவருக்கும் நல்வாழ்வைத் தரும் அதை பின்பற்றவேண்டும், ஆனால் அதை மறுப்பவர்களை என்ன செய்வது. எனவே ஒழுக்கம் மோட்சம் தரும், ஒழுக்கமின்மை நரகம் தரும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    புரியாத சக்திகள் உலகில் உள்ளவரை கடவுள்களும் அதனை தாங்கிவரும் தூதுவர்களும் மக்களிடம் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //வெறுப்பவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள்//

    இது யாரையும் புண்படுத்தும் ஆதலால் தவிர்த்தேன்..

    //நான் சொன்னது கௌதம புத்தரைத்தான். ஏனென்றால் அவர்தான் எந்த ஒரு மாயாஜால வித்தைகளும் நிகழ்த்தாமல் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் //

    எப்பொழுது அவரை கடவுளாக ஏற்றுக்கொண்டோமோ அப்பொழுதே அவர் தோற்றுவிட்டார் நிவாஸ், எல்லாம் பூஜ்ஜியம் என்று சொன்னவன் அவன், அவனை ஹிமாயன, மஹாயனவில் அடைத்தோன் நாம்..

    புத்தனை பிந்தொடர்தல் என்பதே முழுமையாக புத்தனை அறியாதவர்கள் செய்யும் செயல் நிவாஸ், புத்தனாக வாழ்தலே புத்தத்தின் தத்துவம்..

    இது போலத்தான் கிறிஸ்துவமும், கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்து அவன் என்று பொருள், கிறிஸ்துவாக வாழ்தல் யார் இதை எல்லாம் செய்கிறார்கள் சொல்லுங்கள்..

    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25810

    இந்த கவிதையில் மறை பொருளாக வைத்திருப்பேன் நேரிய பொருள் வேறாக இருக்கும்...
    அன்புடன் ஆதி



  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    //நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.

    //

    இதை அப்படியே வழி மொழிகிறேன்..
    அன்புடன் ஆதி



  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இந்தக் கேள்விக்கு விடையை நான் இத்திரியிலேயே, அதுவும் உங்கள் பதிவிலேயே கண்டு கொண்டேன்.

    Quote Originally Posted by ரங்கராஜன் View Post
    மிகச்சிறந்த மனிதன் தான் கடவுள்....

    மிக மோசமான கடவுள் தான் மனிதன்...
    எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு...

    மனிதனின் வாழ்வின் ஆதாரமான அனைத்துமே உணர்வுகள் தொடர்பானவை எனலாம் என நினைக்கின்றேன்.
    பாசம், காதல், சோகம், இன்பம், துன்பம், வஞ்சம், பொறாமை...
    இப்படியானவைதானே மனிதனை ஆட்டுவிக்கின்றன...

    இவற்றில் எவற்றைத் தொட்டறிந்தோம்... பார்த்தறிந்தோம்...
    உருவமில்லாத இவற்றின் இயல்புகள்தானே மனிதரிடத்தில் வித்தியாசங்களைப் பிரதிபலிக்கின்றன...???

    இவ்வுணர்வுகளின் தோற்றுவாய் எங்கிருக்கின்றது என வினவினால்..,
    எனக்கு அதுவே கடவுளாகத் தெரிகின்றது...

    நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனிதன் சமூகத்தில் போற்றப்படுவதும்,
    தீயவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் மனிதன் சமூகத்தால் ஒதுக்கப்படுவதும்,
    உண்மைதானே...???

    அப்படியானால், ஏன் தீயவுணர்வுகள்...???
    நல்லுணர்வுகள் உருவாகையில் அதற்கு எதிர்மாறானவை தீயவுணர்வுகளாகத் தானே உருப்பெற்றுவிடுமே...
    உருப்பெறாவிட்டால், இவைதான் நல்லுணர்வுகள் என்று எப்படித் தெரியும்...

    ஆரம்பப்பாடசாலையில் சேருவதற்கே நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலையில்,
    வாழ்க்கைப்பாடத்திற் தேறுவதற்கு இவற்றைக் கற்றறிந்து, பட்டறிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகத்தானே உள்ளது.

    நாவைத் தாண்டினால் சுவை தெரியாது என்பதற்காக,
    எப்படியும் எதையும் உண்ணுவதில்லையே...
    ஆக, இறப்பின் பின் தெரியாத வாழ்க்கைக்காக,
    எப்படியும் எப்படி வாழ்ந்துமுடிப்பது...

    பிறப்பின் முன்பும் இறப்பின் பின்பும்
    எம் வாழ்வை அறியமுடியாத அச்சம்,
    ஏதோ ஒரு சக்தியிடம் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது.
    அந்த சக்தி... கடவுள்...

    மனிதனின் நல்லுணர்வு அவனுக்குக் கடவுளைக் காட்டும்...
    மனிதனின் தீயவுணர்வு அவனே கடவுள் என்றாக்கும்...

    என்ன சொல்லவந்தேன் என்றும் தெரியவில்லை.
    என்ன சொல்லியிருக்கின்றேன் என்றும் புரியவில்லை.
    எப்படி எழுதினேன்... எதற்கு எழுதினேன்... தெரிந்து எழுதினேனா... தெரிந்தமாதிரி எழுதினேனா...

    எது என்னை இதையெல்லாம் எழுத வைத்தது...
    என்னைப் பொறுத்தவரையில் ‘கடவுள்’
    Last edited by அக்னி; 25-02-2011 at 12:01 AM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •