" மானுட உடல், ஒரு தலையணை போன்றது. அதனுல் பஞ்சு போல எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பலாம்.
ஆனால் பக்தன் ஒருவனுடைய உள்ளமோ ஈசனுடைய ஆலயம் போன்றது. "
"சேற்று மீன் சேற்றினுள் புதையுண்டு கிடக்கிறது. ஆயினும் அம்மீன் மீது சேறு படிவது கிடையாது.
அதே பாங்கில் மனிதன் உலகில் வாழவேண்டும். ஆனால் உலகப் பற்றினுள் அவன் தோய்ந்துபோய்விடக்கூடாது.
"மக்களில் பெரும்பான்மையோர் பூந்தோட்டத்தின் அழகைக் கண்டு ரசிக்கின்றார்கள். ஆனால், அத்தோட்டத்தை உருவாக்கியவனைப் பற்றி அவர்கள் ஒன்றும் நினைப்பதில்லை.
அதுபோல, இப்பிரபஞ்சம் எனும் தோட்டத்தை மக்கள் கண்டு களிக்கிறார்கள்.இதற்கு ஆதிமூலமாக இருக்கும் இறைவனைப் பற்றி சிந்திப்பதில்லை.
உலகுக்கு முதல் காரணமாகிய இறைவனை அடைவதுதான், மானுடப் பிறவியின் குறிக்கோளாக இருக்கவேண்டும்."
Bookmarks