இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளை அமுதமாகவே அளித்து உள்ளீர்கள்...
மிகவும் அருமை.
தொடரட்டும் உங்கள் பணி!!
இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளை அமுதமாகவே அளித்து உள்ளீர்கள்...
மிகவும் அருமை.
தொடரட்டும் உங்கள் பணி!!
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
" அருள்தாகம் ஒருவனுக்கு எப்போது உண்டாகும் ?
மனிதன் உலக ஆசைகளில் உழன்றுகொண்டிருக்கிறான்...இந்த ஆசைகளை நிறைவேறிச் சலித்துப் போனபின் அருள்தாகம் தானாக வருகிறது.
பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடும்போது, குழந்தை தன் தாயை நினைப்பதில்லை...விளையாடிச் சலித்துப் போனபிந்தான், தாயின் ஞாபகம் வருகிறது. "
" நீ எம்மதத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல..நீ எவ்வளவு தூரம் அருள்தாகம் பிடித்தவனாக இருக்கிறாய் என்பதே முக்கியம்.ஒருவனுக்கு அருள்தாகம் தீவிரமாக உன்டாகிவிட்டால், அவன் எம்மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவனை நிச்சயமாக அடியமுடியும். "
" அருள் தாகம் என்றால் என்ன ?
தன் உத்தியோகத்தை இழந்துவிட்ட ஒருவன், ஒரு உத்தியோகத்தைப் பெறும் பொருட்டு, இங்கும் அங்கும் ஓடியலைந்து திரிகிறான்...அம்முறையில் கடவுள் நாட்டம் கொள்ளுதல்தான் அருள்தாகம்."
"குழந்தையின் எளிய இயல்பு சாதகனுக்கு வரவேண்டும்.
தன் தாயைக் காண குழந்தை அழுவதைப் போல, ஆத்ம சாதகன், இறைவனைக் காண அருள்தாகம் பிடித்தவனாக இருக்கவேண்டும்."
ராமகிருஷ்ணர்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks