கொழும்பு, பிப்.14: சர்வதேச கடல்பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் 13 கப்பல்கள் தொடர்பான தகவல்கள் அரசுக்கு கிடைத்துள்ளதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தி:
விடுதலைப் புலிகளின் 13 கப்பல்களும் பல்வேறு நாட்டவர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறித்து புலனாய்வின்போது தெரியவந்தது. அந்தக் கப்பல்கள் இன்னும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் கப்பல் போக்குவரத்து மூலம் பெரும் நிதியை விடுதலைப் புலிகள் அமைப்பு ஈட்டி வருகிறது. வரும் காலங்களில் அந்தக் கப்பல்களைக் கைப்பற்றி இலங்கை அரசுக்கு சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பாக சர்வதேச அளவில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நன்றி: தினமணி
Bookmarks