Results 1 to 10 of 10

Thread: தொடரும் தலைமுறை!

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0

    தொடரும் தலைமுறை!

    ஆல மர நிழலில் தொட்டிலில்
    அழுது தொங்கி இருப்பான்!

    வயல் வெளி வெயிலில் களைத்தவள்
    வற்றிய நெஞ்சோடு வருவாள் !

    இல்லாத பாலை பொய்யாகச் சப்பி
    பசி மயக்கத்தில் பகல் மறப்பான்!

    அவனுக்கு பால் என்பதே வாளாகிக் கொன்றது!
    வாழ்வென்பது பாழாகிப் போனது!

    எப்படியோ ஈரப்பதம் கொண்டு
    ஏழு வரை வளர்ந்து விட்டான்!

    அரவணைத்த அம்மாவும் போய்விட
    பசி என்ற மிருகம்
    வயிற்றில் வயலின் வாசிக்க

    நாடே எரிமலையாய் தீய்க்க
    பஞ்சம் தத்து எடுத்தது!
    வஞ்சகம் நட்பு கொடுத்தது!

    அடுத்தவன் தூக்கம்
    இவனுக்கு துவக்கம்!

    தெரியாமல் எடுத்தவன்
    தெரிந்தே அடிக்க ஆரம்பித்தான்!

    கேட்ட போது வராதவை
    பறித்த போது பயந்து வந்தது!

    பாசறை நிரம்பிற்று!
    பொன்னாலும் புகழாலும்!

    எனக்கும் கொஞ்சம் கொடு
    எனப் புறட்டவன் இப்போது
    எவனுக்கும் எதையும் கொடுப்பதில்லை!

    இதோ அடுத்த குழந்தை
    அதே ஆல மர நிழலில் தொட்டிலில்
    அழுது கொண்டிருக்கிறது!
    Last edited by lenram80; 11-02-2011 at 06:15 PM.
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுயம் துறந்த சூழல் மறந்த சுயநலவியாதியால்
    தொற்றும் அவலத்தைச் சாற்றும் கவிதைக்குப்
    பாராட்டுகள் லென்ராம் அவர்களே.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    இந்த அவலத்தைப் போக்கும் வழியையும் சொல்லிவிடுங்கள்.... இல்லாமை போல இயலாமையின் ரணமும் கொடியது....தொடரவேண்டாம் இந்தத் தலைமுறை.....தொடரட்டும் சமூகச் சீர்திருத்தம்...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நாடோடிகளின் வாழ்வின் உண்மை வரிகள் ...தொடருங்கள்
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கொடிது! கொடிது!! வறுமை கொடிது!
    வறுமையே குற்றங்களின் தாய்!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    இதுவும் ஒரு சக்கரமையா - இதை தடுக்க முடியாதையா.
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

  7. #7
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    மிக்க நன்றி கீதம், ஜானகி , ஜெய், ஜெகதீசன் மற்றும் உமாமீனா
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    திருடுவது தவறு.
    பசிக்குத் திருடுவது யார் தவறு?

    முதற்தவறு,
    ஆலமரத்தைச் செவிலியாக்கியது...

    ஆலிலைகளின் ஆலவட்டத்தில்
    விழுதுகளிற் தொட்டில் கட்டித்
    தொங்கவிடப்படுவது,
    கவிதைக்கும், களிப்பிற்கும்
    நன்றாகத்தான் இருக்கும்...
    ஆனால்,
    இதுவே பச்சிளம்சிசுவின்
    முழு வாழ்வென்றாகையில்
    எப்படி நன்றாகும்...

    Quote Originally Posted by lenram80 View Post
    எப்படியோ ஈரப்பதம் கொண்டு
    ஏழு வரை வளர்ந்து விட்டான்!
    இந்த வரிகள் மனம்பிழியக்
    கண்களில் ஈரப்பதன்...

    சமூக அவலம் ஒன்று, வலிந்துருவாக்கப்படும் அவலம் சொல்லும் கவிதை...

    பாராட்டு லெனின்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் கலாசுரன்'s Avatar
    Join Date
    31 Jan 2011
    Posts
    115
    Post Thanks / Like
    iCash Credits
    9,960
    Downloads
    0
    Uploads
    0
    ரொம்ப நல்லா இருக்கு

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    கவிதை நன்று
    வறுமை கொடிது

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •