புறக்கா ழனவே புல்லெனப் படுமே
அகக்கா ழனவே மரமெனப் படுமே
என்பது தொல்காப்பிய நூற்பா.இதன்படி வெளிப்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "புல்" என்றும் உட்புறத்தே உறுதியுடைய தாவரங்கள் "மரம்"என்றும் அழைக்கப்பட வேண்டும்.
மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்கள் வெளிப்புறம் உறுதியுடைய "புல்"
வகையைச் சார்ந்தது.இதனை இன்றைய தாவர இயலாரும் ஏற்றுக் கொள்கின்றனர்
தென்னை மரத்தின் தாவர இயல் பெயர் "COCOS NUCIFERA" என்பதாகும்.இது
"PALM" என்ற புல் வகைக் குடும்பத்தைச் சார்ந்தது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்காப்பியர் இக்கருத்தைக் கூறியிருப்பதுவிந்தையிலும் விந்தையல்லவா?
ஆகவே இனி நாம் மூங்கில்,தென்னை,பனை ஆகிய தாவரங்களை மரம் என்று
அழைக்காது "மூங்கில்புல்","தென்னம்புல்","பனம்புல்"என்றே அழைப்போமாக!
Bookmarks