Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: காய்கறியும் காதலியும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    காய்கறியும் காதலியும்

    காய்கறிகள் வாங்கிடவே
    கடைவீதி சென்றிட்டேன்

    காய்கறிகள் அனைத்துமே
    காதலியை நினைவூட்ட

    வாங்கும் வகையறியாது
    ஏங்கியே நின்றிட்டேன்

    வெண்டைக்காய் அரிந்திட்டால் காதலியின் பிஞ்சுவிரல்
    வேதனையில் நோகுமென்று வாங்காது ஒதுக்கிட்டேன்

    புடலங்காய் அரிந்திட்டால் காதலியின் கறுப்புநிற
    சடைக்கேதும் வந்திடுமோ என்றஞ்சித் தள்ளிட்டேன்

    மாம்பழம் அரிந்திட்டால் காதலியின் கன்னத்தில்
    தீங்கேதும் வந்திடுமோ என்றஞ்சித் திடுக்கிட்டேன்

    கோவைப்பழம் அரிந்திட்டால் காதலியின் உதடுகளில்
    கோடேதும் விழுந்திடுமோ என்றஞ்சி விடுத்திட்டேன்

    நாவற்பழம் தின்றிட்டால் காதலியின் கருவிழியில்
    நோவேதும் வந்திடுமோ என்றஞ்சி நொந்திட்டேன்

    வாழைத்தண்டு அரிந்திட்டால் காதலியின் கால்களிலே
    வலுவேதும் குறைந்திடுமோ என்றஞ்சி வந்திட்டேன்

    காய்ஏதும் வாங்காமல் வந்திட்ட எனைக்கண்டு
    "பேய்ஏதும் பிடித்துளதா?" எனஅன்னைக் கேட்டிட்டாள்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0
    இனிமே தான் பிடிக்கப் போகின்றது என்று கூறுங்கள் அம்மாவிடம்!

    ஹி ஹி ஹி......


    ம்.....அழகாகத்தான் கற்பனை செய்கின்றீர்கள்.
    அந்தக் காதலிக்கும் வாழ்த்துக்கள்.
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அம்மா இப்பவே சண்டைக்கு தயாராகிட்டா போல. இதுக்குப் பிறகுமா கல்யாண ஆசை இருக்கும் அவனுக்கு. றெனி மாதிரி அனுபவசாலிகள் சொல்லைக் கேளுங்கப்பா

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அமரன்,றெனிநிமல் இருவருக்கும் நன்றி!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    [QUOTE=M.Jagadeesan;510785

    காதலியும், காய்கறியும் ஒப்பீடு நன்றாய் இருந்தது. ஆனாலும், கவிஞர்கள் பெண்களை சொத்தாகவும், பொருளாகவும் ஒப்பிட்டே, அவர்களுக்கு எலும்பும் சதையும், ரத்தமும், உணர்வும், உள்ளமும் இருப்பதாக ஆண் கவிகள் எழுதுவதில்லையே.

    ஆண் கவிஞர்களின் இந்த பிற்போக்கு சிந்தனையை உடைத்து, பெண்ணை சக மனுஷியாக கவிபடைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    உன்னையே நீயறிவாய்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்பரே! இப்பெல்லாம் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பில்லை. சொத்துக்கும் சத்துக்கும்தான் மதிப்பு. பெண்களை மதிப்புடன் ஒப்பிடுவதை நினைத்து மகிழ்வோம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அன்பரே! இப்பெல்லாம் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பில்லை. சொத்துக்கும் சத்துக்கும்தான் மதிப்பு. பெண்களை மதிப்புடன் ஒப்பிடுவதை நினைத்து மகிழ்வோம்
    சரிங்கண்ணா!
    உன்னையே நீயறிவாய்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    விலை ஏறிவிட்ட காய்கறிகளை
    வாங்காமல் இருக்க காரணம்
    கற்பித்த கவிஞருக்கு வாழ்த்துகள்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    [QUOTE=CEN Mark;510819][QUOTE=M.Jagadeesan;510785

    காதலியும், காய்கறியும் ஒப்பீடு நன்றாய் இருந்தது. ஆனாலும், கவிஞர்கள் பெண்களை சொத்தாகவும், பொருளாகவும் ஒப்பிட்டே, அவர்களுக்கு எலும்பும் சதையும், ரத்தமும், உணர்வும், உள்ளமும் இருப்பதாக ஆண் கவிகள் எழுதுவதில்லையே.

    ஆண் கவிஞர்களின் இந்த பிற்போக்கு சிந்தனையை உடைத்து, பெண்ணை சக மனுஷியாக கவிபடைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.[/QUOTE]

    உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்!

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சூரியகிரகணம் வரும்போது அந்த நேரத்தில் கர்ப்பவதிப் பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் அப்படி என்று கேட்டால் அவர்கள் இப்படிதான் பல காரணம் சொல்வார்கள். அங்கொருத்தி சூரிய கிரகணத்தின்போது காய் அரிந்தாள், அவளுக்குப் பிறந்த பிள்ளை, உதடு பிளவுபட்டுப் பிறந்தது. இன்னொருத்தி மாவு பிசைந்தாள், அவள் குழந்தைக்கு மூக்கு சப்பையாகப் போய்விட்டது என்று.

    அந்தநாள் நினைவுகள் வந்துவிட்டன உங்கள் கவிதை படித்து. நகைச்சுவையெனக் கொண்டால் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சூரியகிரகணம் வரும்போது அந்த நேரத்தில் கர்ப்பவதிப் பெண்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டுமென்று வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் அப்படி என்று கேட்டால் அவர்கள் இப்படிதான் பல காரணம் சொல்வார்கள். அங்கொருத்தி சூரிய கிரகணத்தின்போது காய் அரிந்தாள், அவளுக்குப் பிறந்த பிள்ளை, உதடு பிளவுபட்டுப் பிறந்தது. இன்னொருத்தி மாவு பிசைந்தாள், அவள் குழந்தைக்கு மூக்கு சப்பையாகப் போய்விட்டது என்று.

    அந்தநாள் நினைவுகள் வந்துவிட்டன உங்கள் கவிதை படித்து. நகைச்சுவையெனக் கொண்டால் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.
    பாராட்டுகளுக்கு நன்றி கீதம்!

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    உண்மையில் கவிதை ஒப்புமை நன்று. ஆனால் அரிசிப் பொங்கலை காதலியின் பற்களுக்கு ஒப்பிட்டு சாப்பிடாமல் இருந்து விடாதீர்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •