கையில் எழுதுகோல்
முன்னால் காகிதம்.
கவிதை எழுத உத்தேசம்
எதைப்பற்றி?
நிலா -
அது நல்கவிஞர்களின் சொத்து.
மலர் -
வண்டுகளின் சொந்தம்
இசை-
ரசிகனின் ரசனை.
காதல்-
வீரர்களின் மறுபுறம்
அன்பு-
தாய்மையின் பிரதிபலிப்பு
அழகு-
உள்ளன்பின் வெளிப்பாடு.
விவேகம்-
புத்திசாலிகளின் நண்பன்.
பின் எதைப்பற்றி நான் கவிதை சொல்ல.???
"என் காதலி"-
ஆம் இவை எல்லாம் அந்த
ஒற்றை சொல்லில் அடக்கம்.
Bookmarks