கௌதமன் நன்றி இப்படி ஒரு பதிவு போட்டு சோறு போடுமா கேட்பவர்களுக்கு சவுக்கு அடி கொடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்த உம்மை பாராட்டுகிறேன்
கௌதமன் நன்றி இப்படி ஒரு பதிவு போட்டு சோறு போடுமா கேட்பவர்களுக்கு சவுக்கு அடி கொடுத்து தமிழுக்கு பெருமை சேர்த்த உம்மை பாராட்டுகிறேன்
தமிழில்
"அவன்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவனுக்கு" என்றாகிறது.
"அவள்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவளுக்கு" என்றாகிறது.
"அவர்கள்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது "அவர்களுக்கு" என்று
ஆகிறது.ஆனால்
" நான்" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நானுக்கு" என்று ஆகாமல்
"எனக்கு" என்று ஆகிறது.
" நீ" என்பது 4ம் வேற்றுமை உருபு ஏற்கும்போது " நீக்கு" என்று ஆகாமல் "உனக்கு"
என்று ஆகிறது.
ஆனால் தெலுங்கில் " நானு" என்பது " நாக்கு" என்றும் " நுவ்வு" என்பது " நீக்கு"
என்றும் சரியாக உள்ளது.
ஆங்கிலத்தில்
I sing
You sing
We sing
They sing என்று சொல்லுகிறோம்.ஆனால் படர்க்கை ஒருமையில் மட்டும்
He sings
She sings என்று சொல்லும்படி குழந்தைகளை வலியுறுத்துகிறோம். மொழி
செய்யும் தவறுகளுக்கு குழந்தைகளைத் தண்டிப்பதா?
Last edited by M.Jagadeesan; 03-02-2011 at 11:19 AM.
ஆமாம் ஏன் இல்லை! அனேகமாக இதற்கு பதில் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
பதிலை நானும் தேடிப்பார்க்கிறேன். ஒரு காலமும் மொழி தவறு செய்ய முடியாது.
தமிழ் மொழியில் இலக்கணத் தவறு என்று நண்பர் ஜெகதீசன் கூறலாமா? நமக்குத் தெரியவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்வோம்.
(நண்பர் குணமதியின் உதவி தேவை)
இந்த ஒரு திரியைப் படித்ததுமே வயிறும் மனமும் நிறைந்தாற்போல் ஒரு உணர்வு. கௌதமனின் வலப்பூ அருமை! வாழ்த்துக்கள்!
எண்ணங்கள் கொண்டு எதிர்காலம் செதுக்குவோம்!
கெளவுதமனின் தமிழ் சோறு போடுமா என்ற திரி அருமை, அறிவு பசி உடையோரும், சமுகத்தில் சாதிக்க நினைபோருக்கும் தமிழ் மொழி ஒரு பெரும் வரபிரசாதம். ஆங்கிலம் உலக தொடர்பு மொழி ஆனால் தமிழ் மனிதனை சமூகத்தை செம்மை படுத்துகின்ற ஆற்றல் வாய்ந்த அறிவும், ஞானமும், செழுமையும் செறிந்த மொழி என்பது தமிழ் ஆய்ந்தோரின் அனுபவம். பிழைப்புக்காக இருப்போர் தமிழ் சோறு போடுமா என கேட்பதில் ஆச்சரியம் இல்லை. இவர்களால் இவ்வுலகம் இம்மியளவும் பயனடைய போவதில்லை. பசிதிரிந்தாலும் தமிழ் பாடி வறுமை போக்க உதவிய பாரதி எங்கே இந்த தன்னலகாரர்கள் எங்கே.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
தமிழ் அவமானமில்லை, அடையாளம்.. தமிழ் சோறு போடுமா எனக்கூவும் தமிங்கிலீஸ் மன்னர்களே! தமிழ் தான் உனக்கு அடையாளம்.. நீ எங்கும் ஓட முடியாது.. கேரளா அது மலையாளிகள் நாடு, ஆந்திரா அது தெலுங்கர்கள் தேசம், கன்னடா அது கன்னடர்கள் பூமி.. நீ எங்கே போவாய்.. தமிழ் நாட்டிலும் தமிழர் அல்லாதோர் இல்லை எனும் நிலை வரும் போது நீங்கள் எங்கே போவீர்கள்... இது விரைவில் அரங்கேறும்.. தமிழ் சோறு போடுமா அல்லது பீட்ஷா போடுமா என்று பார்ப்போம்... தமிழ் அவமானமில்லை, அடையாளம்..
எம்மொழி பயின்றாலும் உணர்வதும் உணர்விப்பதும் தாய்மொழி வாயிலாகத்தான். பிறமொழி கற்கும் போது நமது தாய்மொழி கற்றலும் பயிற்ச்சியுமே பிற மொழிகளை ஒப்பிட்டு மேலும் சிறக்க கற்க்கவியலுமேயன்றி தாய்மொழிப்பயிற்ச்சியில்லாதவன் பிறமொழி கற்றாலும் முழுமையடையவியலாது. மேலும் பன்மொழி கற்றவர்க்கு நம் தாய்மொழி தமிழின் அருமை மேலும் விளங்கும். இதனை முழுமையாக உணர்ந்த பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்காவதும் கானோம்" என்றார். நம் தமிழ்மொழியின் பான்மை பிறமொழியினரையும் கவரக்கூடியது என்பதற்க்கு ராபர்ட் கால்டுவெல் ஒரு முதன்மையான உதாரணம். அறிவிலார் கேள்விகளுக்கு பதில் தருகிறோம் என்ற நோக்கமில்லாமல் இத்திரியையும் நம்மை நாமே அளவிட்டுக்கொள்வதற்காகவே என கருதலாம்.
அறிவிலிகளை ஏசி என்னப்பயன் நமக்கு.
என்றென்றும் நட்புடன்!
இந்தச் சுட்டியைப் பார்த்ததும் எங்கள் மாலன் சாரின் 'அன்றைக்கிருந்த அறிவியல்' என்ற கட்டுரை தான் நினைவுக்கு வருகிறது. அதில் கடைசியாக இப்படி முடித்திருப்பார்: 'எல்லாம் சரி, இலக்கியம் சோறு போடுமா? எனக் கேட்கிறார்கள் சிலர். இலக்கியம் வயிருக்குச் சோறு போடாது. அறிவுக்கு பசி கொடுக்கும்'
முழுக் கட்டுரையும் படிக்க: http://maalan.co.in/topicdetails.php...tent_container
வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!
கூறுகெட்ட கேள்வி
கூறு அற்றோர் எண்ணம்
சோறு ஒன்றே திண்ணம்
வயிறு வீங்கி போவர்
வாழ நாதியற்று வீழ்வார்
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
போடும்...தமிழை முறையாக கற்று, தற்கால உத்திகளுடன் இணைந்தால் சோறிட்டு,குழம்பு உற்றி,பொரியல் வைத்து,தயிர் போட்டு சாப்பாடே கிடைக்கும்...ஆனால் நம்ககு அதற்கு தகுதி வேண்டாமா?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks