தமிழ் சோறு போடுமா?
இந்த கேள்வியினை மேலோட்டமாக நோக்கி உணர்சி வசப்படுவதைவிட உள்ளார்ந்து நோக்கினால் தமிழ்சமூகத்தின் வலியும் வேதனையும் இதில் உள்ளடங்கியிருப்பதை உணரமுடியும்..!!
தமிழ் சமூக வரலாற்றின் எந்த காலக்கட்டத்திலும் இத்தனை விரக்தியான ஒரு வினா எழுந்ததாக எந்த குறிப்பும் இல்லை.. ஆனால் இன்று எழுந்திருக்கிறது..!! காரணம் எல்லோரும் அறிந்ததே..!!
தமிழை முன்னிலைப்படுத்தி தலைவரானவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்த தவறியதுதான்..!! ஜப்பானியர்களும் சீனர்களும் தங்கள் தாய்மொழியில் பயின்று தங்கள் தாயகத்திலேயே தங்களது உழைப்பை செலுத்தும் வகையில் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் அமைந்து இருக்கிறது..!! இதேமுறையில்தான் நெடுங்காலமாக தமிழ்சமூகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு அமைந்து வந்திருக்கிறது..!!
ஆனால் இன்றைக்கு ”ஈந்து வாழ்ந்த சமூகம் இரந்து வாழும் நிலைக்கு” தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இங்கே சிவாண்ணா தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..!!
கௌதமன் அண்ணா... தமிழ் சோறுப்போடுமா என்ற கேள்வியை தமிழரல்லாத ஒருவர் கேட்பதற்க்கும் தமிழர் ஒருவர் கேட்பதற்க்கும் உள்ள உள்ளார்ந்த வேறுபாட்டை உங்களால் உணர முடியும் என்று நம்புகிறேன்..!!
Bookmarks