Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 34

Thread: சோறு போடுமா தமிழ்?

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தமிழ் சோறு போடுமா?

    இந்த கேள்வியினை மேலோட்டமாக நோக்கி உணர்சி வசப்படுவதைவிட உள்ளார்ந்து நோக்கினால் தமிழ்சமூகத்தின் வலியும் வேதனையும் இதில் உள்ளடங்கியிருப்பதை உணரமுடியும்..!!

    தமிழ் சமூக வரலாற்றின் எந்த காலக்கட்டத்திலும் இத்தனை விரக்தியான ஒரு வினா எழுந்ததாக எந்த குறிப்பும் இல்லை.. ஆனால் இன்று எழுந்திருக்கிறது..!! காரணம் எல்லோரும் அறிந்ததே..!!

    தமிழை முன்னிலைப்படுத்தி தலைவரானவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்த தவறியதுதான்..!! ஜப்பானியர்களும் சீனர்களும் தங்கள் தாய்மொழியில் பயின்று தங்கள் தாயகத்திலேயே தங்களது உழைப்பை செலுத்தும் வகையில் அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் அமைந்து இருக்கிறது..!! இதேமுறையில்தான் நெடுங்காலமாக தமிழ்சமூகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு அமைந்து வந்திருக்கிறது..!!

    ஆனால் இன்றைக்கு ”ஈந்து வாழ்ந்த சமூகம் இரந்து வாழும் நிலைக்கு” தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை இங்கே சிவாண்ணா தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..!!

    கௌதமன் அண்ணா... தமிழ் சோறுப்போடுமா என்ற கேள்வியை தமிழரல்லாத ஒருவர் கேட்பதற்க்கும் தமிழர் ஒருவர் கேட்பதற்க்கும் உள்ள உள்ளார்ந்த வேறுபாட்டை உங்களால் உணர முடியும் என்று நம்புகிறேன்..!!
    Last edited by சுகந்தப்ரீதன்; 19-01-2011 at 11:47 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #14
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    தமிழ் படித்தால்தான் இன்று வரை எனக்கு சோறே கிடைக்கின்றது!
    இதை எந்த கோவிலிலும் சொல்லுவேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்!!
    எல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்!!!

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கோவிலுக்கெல்லாம் எதுக்கு மாதவர் அண்ணா.. நீங்க சொன்னா நாங்க நம்பமாட்டமா என்ன?

    சரி.. தெளிவாகவே விசயத்தை சொல்லிவிடுகிறேன்..!! தமி்ழகம் என்பது ஜப்பானையும் சீனாவையும் போல் ஒரு தனித்த நாடு கிடையாது..!! இந்திய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தனித்த மாநிலம் அவ்வளவே..!! இங்கே தமிழர்களின் அரசியலும் பொருளாதாரமும் முழுக்க முழுக்க தமிழர்கள் கையில் மட்டுமே இல்லை..!! அது கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களையும் சார்ந்தே இருக்கிறது..!!

    தமிழை முன்னிலைப்படுத்திய தலைவர்களால் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் போனதற்க்கு இதுவும் ஒருக்காரணமாக இருக்கலாம்..!! ஆனால் அது மட்டுமே காரணமல்ல என்பதை அன்றாட அரசியல் நிகழ்வுகளை அவதானித்து வருபவர்களால் அறிய முடியும்..!!

    தமிழ் மட்டுமே போதும் என்று உறுதியாக சொல்வதற்க்கு, ஒன்று தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்க வேண்டும்.. அல்லது இந்தியக் கூட்டமைப்பிலிருந்து விலகி வர வேண்டும்..!! ஆனால் இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்பதோடு இதனால் ஏற்படும் சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்குமென்று நம்மாநில அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம்..!!

    கடைசியாக, ‘தமிழ் சோறுப் போடுமா?’ என்ற கேள்வி தமிழை வெறுப்பதால் தோன்றுவதாக எனக்கு தோணவில்லை.. மாறாக தமிழ்தலைவர்களின் மீதான அவநம்பிக்கையில் பிறப்பதாகவே தோன்றுகிறது..!!

    ஒருவேளை கேள்வி, ‘சோறுப்போட தமிழ் மட்டும் போதுமா?’ என்றிருந்தால் சரியாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது..!! அதுமட்டும் இல்லாமல் இங்கே ‘சோறு’ என்பதை பொருளாதர குறியீடு என்றுதான் கொள்ள வேண்டுமே தவிர நாம் உண்ணும் உணவு என்று கொள்ளலாகாது..!! அப்படி கொள்வதற்க்கு தமிழ் ஒன்றும் அன்னக்கரண்டி கிடையாது.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #16
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    சோறு போடுமே தமிழ்.
    அதன் மேல் சேறு வீசாத வரை போடும்.
    சேறு வீசினாலும் தமிழ் சோறு போடும்
    உன்னையே நீயறிவாய்

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by சுகந்தவாசன் View Post

    ஒருவேளை கேள்வி, ‘சோறுப்போட தமிழ் மட்டும் போதுமா?’ என்றிருந்தால் சரியாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது..!! அதுமட்டும் இல்லாமல் இங்கே ‘சோறு’ என்பதை பொருளாதர குறியீடு என்றுதான் கொள்ள வேண்டுமே தவிர நாம் உண்ணும் உணவு என்று கொள்ளலாகாது..!! அப்படி கொள்வதற்க்கு தமிழ் ஒன்றும் அன்னக்கரண்டி கிடையாது.
    சோறு போடுமா தமிழ்? என்றக் கேள்வியேத் தவறானது என்பதுதான் திரியின் உள்ளடக்கம். தமிழ் என்பதன் இடத்தில் ஒழுக்கம், நேர்மை, ..தொடங்கி எதையும் நிரப்பலாம்.ஆனால் அந்தக் கேள்வியில் பொருள் உள்ளதா? நண்பர் aalunga இந்தத் திரியின் உள்ளர்த்தத்தை புரிந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by வியாசன் View Post
    உங்கள் ஆதங்கம் புரிகிறது. கட்டுவதற்கு கோவணத்துணியும் இல்லாமல் தமிழை மட்டும் கையிலெடுத்து, இன்றைக்கு கோடானுகோடிஸ்வரர்கள். ஆனால் தமிழ் மட்டும் இன்றும் நிர்வாணமாகவே உள்ளது.
    தமிழ் சோறு போடுமா?
    சோறு போடுமா தெரியாது ஆனால் உயிரை பறிக்கும். தமிழ் மீனவன் என்பதால் அநியாயமாய் உயிரையிழந்த அந்த தமிழனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
    தொப்பிகள் அளவென்பதற்காக யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளமுடியும்.
    தமிழை வாழ வைக்க உங்களை போன்றோர் தேவை. எங்கள் பாதங்களும் உங்கள் பாதச்சுவடுகள் பற்றித் தொடரும்

    வேதனையுடன் வியாசன்
    நெஞ்சைத் தொட்டுட்டீங்க ஐயா!
    உன்னையே நீயறிவாய்

  7. #19
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aalunga View Post
    முற்போக்குச் சிந்தனையாளர்களே.....
    ஆங்கிலம் மட்டும் சோறு போடுமா?

    [SIZE="3"]
    "உழவனிடம் உலக மொழி பேசினால் வீட்டில் உலை வைக்க முடியாது"[/COLOR]
    இவரு நம்ம ஆளுங்க! செருப்பு கொஞ்சம் உட்சபட்ச வார்த்தை. தவிர்த்திருக்கலாம். மற்றபடி உங்கள் கருத்து நூருஸதவிகிதம் ஏற்புடையதுதான்.
    உன்னையே நீயறிவாய்

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் CEN Mark's Avatar
    Join Date
    12 Dec 2010
    Location
    நாகர்கோவில்
    Posts
    253
    Post Thanks / Like
    iCash Credits
    9,908
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கௌதமன் View Post
    சோறு போடுமா தமிழ்? என்றக் கேள்வியேத் தவறானது என்பதுதான் திரியின் உள்ளடக்கம். தமிழ் என்பதன் இடத்தில் ஒழுக்கம், நேர்மை, ..தொடங்கி எதையும் நிரப்பலாம்.ஆனால் அந்தக் கேள்வியில் பொருள் உள்ளதா? நண்பர் aalunga இந்தத் திரியின் உள்ளர்த்தத்தை புரிந்து பின்னூட்டமிட்டிருக்கிறார்.
    கெளதம். வரவர குரங்கு பிடிக்கபோய் பிள்ளையார் ஆனா கதையாய். உங்கள் திரி எல்லாம் கொழுந்துவிட்டு எரிகிறது. கௌதமன் என்றால் என்ன அர்த்தம்?
    உன்னையே நீயறிவாய்

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    Quote Originally Posted by CEN Mark View Post
    கெளதம். வரவர குரங்கு பிடிக்கபோய் பிள்ளையார் ஆனா கதையாய். உங்கள் திரி எல்லாம் கொழுந்துவிட்டு எரிகிறது. கௌதமன் என்றால் என்ன அர்த்தம்?
    சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இதுவே பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காயிருந்தால்?

    கௌதமன் என்றால் என்ன அர்த்தம். தெரியவில்லை.

    ஆனால் எதிர்காலத்தில் கௌதமன் என்றால் அன்பானவன், சொலல்வல்லன், சோர்விலன், அஞ்சான் எனப் பொருள் வரும்படி இருக்கவேண்டுமென எண்ணுகிறேன்.
    Last edited by கௌதமன்; 23-01-2011 at 07:40 AM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  10. #22
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    Quote Originally Posted by CEN Mark View Post
    இவரு நம்ம ஆளுங்க! செருப்பு கொஞ்சம் உட்சபட்ச வார்த்தை. தவிர்த்திருக்கலாம். மற்றபடி உங்கள் கருத்து நூருஸதவிகிதம் ஏற்புடையதுதான்.
    நான் அந்த வார்த்தையை (செருப்பு) எங்கும் பயன்படுத்தவில்லையே !!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    திருமணப் பத்திரிக்கைகளில்,"எனது மகன்","எனது மகள்"என்று குறிப்பிடு
    வது தவறு."என் மகன்","என் மகள்" என்றே குறிப்பிடவேண்டும்."எனது ஆடு","எனது மாடு"என்று குறிப்பிடலாம்.

  12. #24
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    எதையும் மற்றவரில் இருந்து எதிர்பார்ப்பது தான் நம் இயல்பு என்பதற்கு இந்த திரியின் தலைப்பே போதும்.

    தமிழ் சோறு போடுமா??? இதென்ன கேள்வி? விட்டா பிட்ஸா பேர்கர் நூடுல்ஸ் எல்லாம் கேட்ப்பீங்க போல...

    தமிழுக்கு அவனவன் என்ன செய்தீங்க? அப்புறம் தமிழ் தானா சோறென்ன. பெரிய விருந்தே தடல் புடலாக வைக்கும்...

    தமிழரிடம் தமிழன் தமிழில் தான் பேசுகிறானா??? தூய தமிழில் பேசினால் எம்மை பைத்தியக்காரன் போலல்லவா பார்க்கிறார்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •