இமை சுருக்கி இருள் நோக்கி
மனம் குவிய அமர்ந்தேன்.
தோள்மீதும், தலைமீதும்
மடிமீதும்,
உள்ளும், புறமும்,
ஓடி,ஆடி,பாடி,பறந்து
கண்டவை, கேட்டவை,
படித்தவை
நட்பு, காதல், காமம், குரோதம்
வினோதம்,பசி, துக்கம்
உணர்ந்தவை அத்தனையும்
அலையலையாய்...
எதிர்ப்பின்றி, ஏற்புமின்றி
காட்சி கண்டே உறங்கிப்போனேன்.
விழித்து, மலைத்து
சிலிர்த்து
உள் உணர்ந்தேன்
வாழ்வின் மரணம் சிலநொடி
தள்ளிப்போனது..
Bookmarks