Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: மகாநதி

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0

    மகாநதி

    மகாநதி...
    புரிந்தவைகளை தீர்மானமாக மறுக்கும்...
    மறுப்புகளிலிருந்தே மறுபடியும் புரியவைக்கும்
    உயிரும் உணர்வுமற்று
    அசைவுகளை உண்டாக்கும்..
    அசைவுகளை அடையாளம் காட்டியே
    உயிர்களை உருவாக்கும்...

    சைகைகளின் ஒலிவடிவாய்
    மொழிகளை பிரசவிக்கும்..
    மொழிகளின் சப்தத்தினால்
    நிசப்தத்தின் பெருமைபேசும்...

    உயிரற்றதொரு நாள் வரும் என்ற
    உணர்வினூடே
    வாழ்தலின் சுகம் காட்டும்..

    நாளாய் கிழமையாய்
    நாட்காட்டியில் பிடித்து விட்டோமென்று
    கணக்கில் திருப்திபடுவோரை
    கண்டு நகை காட்டும்...

    எப்போதிலிருந்து எப்பொதுவரையென்ற
    விடைதெரியா கதைசொல்லி
    கணக்கற்ற தன் கரங்கள் கொட்டி சிரிக்கும்...

    பூமிக்கும் வானுக்குமிடையே
    காற்றாய் நீராய் நெருப்பாய்
    வெவ்வேறாய் காட்சி தரும்..
    பின்னெல்லாம் கலந்து
    யாதுமாகி நிற்கும்...
    சிலநேரம்
    எதுவுமற்றும் தோணும்...

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஊற்றுக்கண் தோன்றி ஓடையென ஓடி, சின்னதாய், கொஞ்சம் பெரிதாய் இன்னும் பெரிதாய் அகன்று கிளைபரப்பி இன்னுமின்னும் ஓடி முடிவில் மகாநதியாகிக் கடலில் சங்கமிக்கும்வரை எத்தனை எத்தனை பேச்சுகள், பிதற்றல்கள், பிரஸ்தாபங்கள்? அத்தனையும் சொல்லிப்போகும் அற்புதக் கவிநதி. பாராட்டுகள் வல்லம் தமிழ்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வாழ்க்கையெனும் ஓடம்... என்றான் ஒரு கவி......

    ஓடத்தின் ஓட்டத்தை திசைப்படுத்தும் சக்தி, நதியா... அல்லது எங்கும் நிறைந்த பரம்பொருளா ?

    எதுவோ......பயணிகளான எங்களுக்கு கிடைத்தது சுகமான ராகம் !

    பாரதி எட்டிப் பார்க்கிறான் !

  4. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    மரமும் நானும்...
    நீள வளர்ந்தால்
    பாதை மறையுமென
    நெடுஞ்சாலைதுறையினர்
    நீக்கி எறிந்தனர்...

    பக்கம் படர
    சுற்றுச்சுவர் பாழாகுமென
    வீட்டு உரிமையாளர்
    வெட்டித்தள்ளினார்...

    தாழ படர
    கீழே வடைதட்டி விற்பவர்
    கைகள் இடிக்குமென
    கழித்து கட்டினார்...

    அனைவரையும் அனுசரித்து
    எவரையும் பாதிக்காமல்
    எப்பக்கம் படர்வதென
    புரியாத பதைபதைப்பில்
    சாலையோர மரமும்
    மரத்தடியில் நானும்...

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    குழந்தைகள்
    விடிகாலை! இளங்குருத்து!
    முதல் தூறல்! புது நாத்து!
    கீறிய நிலம்! வீரிய விதை!
    எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஒவியம் !

    பசிக்கையில் கிடைக்கும் பல்சுவை விருந்து !
    பசியால் விளைந்த பசிநீக்கும் மருந்து !

    இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
    நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜம் !

    அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம் !
    அவரவர் கடவுளின் அற்புத தரிசனம் !

    இவைகள் போலவும் இன்னும் கூடவும்
    குழந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
    ஆனால்...
    குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது
    ஏனெனில்.....

    கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றன.பாராட்டுகள் வல்லம் தமிழ்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by வல்லம் தமிழ் View Post
    மரமும் நானும்...
    நீள வளர்ந்தால்
    பாதை மறையுமென
    நெடுஞ்சாலைதுறையினர்
    நீக்கி எறிந்தனர்...

    பக்கம் படர
    சுற்றுச்சுவர் பாழாகுமென
    வீட்டு உரிமையாளர்
    வெட்டித்தள்ளினார்...

    தாழ படர
    கீழே வடைதட்டி விற்பவர்
    கைகள் இடிக்குமென
    கழித்து கட்டினார்...

    அனைவரையும் அனுசரித்து
    எவரையும் பாதிக்காமல்
    எப்பக்கம் படர்வதென
    புரியாத பதைபதைப்பில்
    சாலையோர மரமும்
    மரத்தடியில் நானும்...
    எப்பக்கம் படர்ந்தாலும்
    எதிர்க்கேள்வி கேட்பாரில்லை!
    மனம்போல் நீள்வதும் சுருங்குவதுமாய்
    மரத்தின் நிழல் மட்டும் விதிவிலக்காய்!

    ஆதங்கம் தெறிக்கும் கவிக்குப் பாராட்டுகள்.

  8. #8
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    ஊற்றுக்கண் தோன்றி ஓடையென ஓடி, சின்னதாய், கொஞ்சம் பெரிதாய் இன்னும் பெரிதாய் அகன்று கிளைபரப்பி இன்னுமின்னும் ஓடி முடிவில் மகாநதியாகிக் கடலில் சங்கமிக்கும்வரை எத்தனை எத்தனை பேச்சுகள், பிதற்றல்கள், பிரஸ்தாபங்கள்? அத்தனையும் சொல்லிப்போகும் அற்புதக் கவிநதி. பாராட்டுகள் வல்லம் தமிழ்.
    மிக்க நன்றி!தொடர்ந்து இதில் என்னுடைய கவிதைகள் மட்டும் வெளியிட அனுமதி வேண்டும்....

  9. #9
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    வாழ்க்கையெனும் ஓடம்... என்றான் ஒரு கவி......

    ஓடத்தின் ஓட்டத்தை திசைப்படுத்தும் சக்தி, நதியா... அல்லது எங்கும் நிறைந்த பரம்பொருளா ?

    எதுவோ......பயணிகளான எங்களுக்கு கிடைத்தது சுகமான ராகம் !

    பாரதி எட்டிப் பார்க்கிறான் !
    அன்புள்ள ஜானகி,வணக்கம்! என்னை எவ்வளவோ பேர் பாராட்டி இருக்கிறார்கள்,ஆனால் உங்களுடைய `பாரதி எட்டி பார்க்கிறான்` என்ற வரிகள் எனக்கு இந்த பிறவியில் கிடைத்த பாரத ரத்னா-அதற்கு எனக்கு தகுதி இல்லை என்றாலும் மனசுக்குள் அன்று முழுதும் ஒரே மத்தாப்பு வெளிச்சம்!மிக்க நன்றி!

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by வல்லம் தமிழ் View Post
    மிக்க நன்றி!தொடர்ந்து இதில் என்னுடைய கவிதைகள் மட்டும் வெளியிட அனுமதி வேண்டும்....
    தவறுக்கு வருந்துகிறேன், இனி இத்திரியில் உங்கள் படைப்புகளுக்கான பாராட்டுகள் தவிர என்னுடைய பிதற்றல்கள் இடம்பெறாது.

    அருமையான உங்கள் கவித்தொகுப்பு தொடர்ந்து எம்மை மகிழ்விக்க விரும்புகிறேன்.

  11. #11
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    மௌனம் என்ன மொழி?

    அனைத்து நதிகளிலும்
    அன்பே பிரவகிப்பதால்
    மதங்களைக் கடப்பதைக் காட்டிலும்
    மதங்களில் கரைவதன் மூலம்
    மனிதத்தில் சங்கமிப்போம்
    மகா சமுத்திரமாய் ஆர்ப்பரிப்போம் !


    உணர்வுகளை சொல்லவல்ல
    ஊடகமே மொழி !
    மனங்களை இணைப்பதொன்றே
    மகத்தான அதன் பணி !
    ஊடகத்தின் பெயரால்-நமக்குள்
    கோடுகிழிக்க வருவோரிடத்து
    மௌனமாயிருங்கள்..-கேளுங்கள்
    மௌனம் என்ன மொழி ?

    வியர்வையாய் சிந்த வேதனைப்பட்டால்
    கட்டாயம் ஒருநாளதை கண்ணீராய் சிந்தவேண்டிவரும்
    என்பதாலேயே
    வியர்வைக்கும் கண்ணீருக்கும் ஒரே சுவை..!
    ஆகவே அருமை நண்பர்களே..
    உழைத்தவன் கைகளில் உரிமைகள் தருவோம்
    அவரை ஏய்த்து
    பிழைப்பவர் செயலை பிழையென்றே கொல்வோம்..!

    தீண்டிடில் தின்றிடும் தீயது சாதா தீ!
    தீண்டாமை தின்றிடும் தீயெது சாதி!
    தீண்டியும், தீண்டாதும்
    திகுதிகுவென எரியும் தீ அது அறிவுத் தீ!
    அக்கினிக் குஞ்சில் உயர்வெது தாழ்வெது?
    அறிவுத்தீயில் முதலெது முடிவெது?
    அறிவுத்தீயால் அழிப்போம் சாதியை..அது கொடியது..!

    கனவுச்சுடரால் சமைப்போம் வழியை
    அறிவுச்சிறகால் அளப்போம் வெளியை
    பறப்போம் கலப்போம்
    பள்ளம் மேடற்ற சமூகம் படைப்போம்..!

    மத மொழியின வர்க்கபேதம் தகர்த்து
    அனைவரும் சமமெனும்
    ஆனந்த சமூகம் படைப்பது
    மனிதரனைவரின் பொறுப்பு..!
    ஏனெனில்..
    சக மனிதரனைவரும்
    சகோதரனே என்பதற்கு
    சாட்சியாய் கிடக்கிறது
    உனக்குள்ளே ஊறித் ததும்பி நிற்கும்
    உதிரச் சிவப்பு..!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    [கவிதைப் போட்டியில் நுழையாத] நல்லதொரு கவிதைத் தீ....நாட்டுப் பற்றைப் தூண்டிவிடும் உரிமைப் போராட்டத் தீ...ஆன்மீகத்தைத் எழுப்பிவிடும் மௌனத் தீ.... பரவட்டும் எங்கும்....பரப்பட்டும் ஒளியை எங்கும்...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •