Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 33 of 33

Thread: மகாநதி

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    கவியெழுத கைகொடுப்பதால்
    பிரிவின் வலியும் சுகம்தான்
    இல்லையா
    வண்ணத்தமிழ் தந்த வல்லம்தமிழ்?
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  2. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அன்பின் வலியை வெளிப்படுத்திய கவிதை அருமை. பாராட்டுகள் வல்லம்தமிழ்.

  3. #27
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டிய நல்ல இதயங்களுக்கு நன்றி!

  4. #28
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0

    மழை!

    உயிர்களின் பசியடக்கும்
    பயிர்களின் தாய்ப்பாலே..!

    வானம் வழங்கிய அருட்கொடையே!
    வறட்சி வென்றிடும் நீர்ப்படையே..!

    எதிர்பார்ப்புகளற்ற காரியமாற்ற
    எங்கள் உதாரணமே..!

    மேகம் கிடுகிடுக்க மின்னல் ஒளிவிளக்காய்
    வானம் விட்டு வரும் வசந்த பூ விதையே..!

    ஆறுகள் பெருக்கெடுத்து
    கடல் தோறும் கரை புரளும்
    அலைகளின் பிறப்பிடமே..!

    விதைகளை விருட்சமாக்கும்
    விந்தை செய் விண்துளியே..!

    கருணையின் வடிவமாய்
    கசிந்துருகி வழியும் நீர்ச்சரமே..!

    வறண்ட உலகைக் கண்டு
    வானம் வடித்த கண்ணீரே..!

    விதைத்து காத்திருக்கும்
    விவசாயியின் வியர்வையை
    அர்ச்சித்து தூவும்
    அர்ச்சனை பூக்களே..!

    நிலத்தில் நீ விழுந்தால்
    நெல் முத்தாகிறாய்..
    சிப்பிக்குள் நீ சிந்தினால்
    நல்முத்தாகிறாய்..
    முத்து முத்தாய் நீ முத்தமிட்டு தான்
    மொத்த பூமியும் சுகப்படுகிறது..!

    இயற்கைக்கு மாறாய் நீ
    இந்த வருடம்
    அதிகம் பொழிந்தாய் என
    ஆனந்தப்பட்டோமே...
    இப்போதல்லவா புரிகிறது-அது
    ஆழிப்பேரலையால் அல்லல்படப்போகும்
    மனிதகுலத்தை எண்ணி நீ
    வடித கண்ணீர் என்று..!

    நற்பெண்டிரின் நாக்குக்கு கட்டுப்படும் நாயகியே..!
    வழங்கி வாழ்வளித்து
    பொழியும் இடந்தோறும்
    பொலிவை உண்டாக்கும்
    தண்ணீர் குலத்தின் தலைமகளே..!

    அழித்து அபகரித்து
    ஆறாத்துயர் கூட்டும்
    ஆழிப்பேரலையை-இனி
    தண்ணீர் குலம் விட்டே
    தள்ளி வைப்பாய் என் தாயே..!

    பூமியின் அழுக்கினை
    போக்கிட பொழிந்தாய்-இனி
    மனிதரின் மன அழுக்கை
    மாய்த்திட அவர்தம் மனதுக்குள் பொழி தாயே..!

    அகிலத்தின் உயிர்ச்சத்தே..!
    அனைத்துலகின் தத்துவமே..!
    மகாசக்தி! தேவி ..!
    மாரி உன்னை வணங்கி நின்றேன்
    எங்கள் மனக்குறையை கேட்டருளாய்..

    நீ வழங்கிய அருட்கொடையால்
    நிறைந்துவரும் நதிப்போக்கை
    நிறுத்தி அணை கண்டார்..
    அந்த அணைகள் நிறைந்தழிந்து
    தளும்பி சீற்றமுடன் தமிழகம்
    தழுவும் வகையில் இனி
    தாயே நீ பொழிக!
    தமிழர் தாகம் தணித்திடுக
    .
    Last edited by வல்லம் தமிழ்; 13-03-2011 at 03:44 AM. Reason: to changr the font colour

  5. #29
    இனியவர் பண்பட்டவர் ஆளுங்க's Avatar
    Join Date
    05 Jul 2010
    Location
    திருச்சிராப்பள்ளி/ திருநெல்வேலி
    Age
    37
    Posts
    648
    Post Thanks / Like
    iCash Credits
    15,137
    Downloads
    136
    Uploads
    0
    அருமை நண்பரே!!

    வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
    சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

  6. #30
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆளுங்க View Post
    அருமை நண்பரே!!
    நன்றி நண்பரே!

  7. #31
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    கவிதை எனும் சொற்றாடலை எவ்வாறெல்லாம் சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் எனும் விதம் ...புது அனுபவம்...தொடருங்கள் வல்லம் தமிழ் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #32
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    கிறுக்கு...
    என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
    எல்லாவற்றுகுள்ளும்
    எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்...

    உண்மையில்
    எல்லாமென்பது இல்லை..
    இல்லைகளுக்குள்ளும்
    இருக்கும் என்னை
    தேடியலையும் தேடுதலின்
    மூச்சு வாங்குதலே
    எல்லாமுமாக இருக்கிறது...

    விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
    காற்றினால் அசைகிறது பேனா..
    பின்
    என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்...

    காற்றினால் அசையும் அசைவை
    ஏதாவதொரு கணத்தில்
    என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்....
    அற்புதம்...அற்புதம்...
    நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
    பாய்வோம்....

    எழுத்துகளும், வரிகளுமற்ற
    எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
    உண்மையான கவிதை...
    அதை
    வரிகளாலும் வார்த்தைகளாலும்
    வருடி வருடி
    அடையாளப்படுத்த விழையும்
    அற்ப முயற்சிகளே
    இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
    இது உட்பட...

  9. #33
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    04 Jul 2010
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    9,077
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    கவிதை எனும் சொற்றாடலை எவ்வாறெல்லாம் சமூகத்தின் பார்வையில் ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் எனும் விதம் ...புது அனுபவம்...தொடருங்கள் வல்லம் தமிழ் ...
    நன்றி! நண்பரே!

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •