வீரிய வார்த்தைகளாலொரு சமூகச்சாடற்கவிதை! பாராட்டுகள் வல்லம்தமிழ் அவர்களே.
வீரிய வார்த்தைகளாலொரு சமூகச்சாடற்கவிதை! பாராட்டுகள் வல்லம்தமிழ் அவர்களே.
அத்தனை கவிதையும் அருமை நண்பரே !!கருத்தாழமிக்க கவிதைகள் நெஞ்சைத் தொட்டன....மனம் திறந்த பாராட்டுக்கள் !!
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![
இது கவிதையல்ல, ஒரு அக்கினிக்குஞ்சு;
அணைக்க வேண்டியது தான்; அள்ளி
அணைக்க வேண்டியது தான்.
இது கவிதையல்ல, ஒரு அறிவாயுதம்;
தாக்க வேண்டியது தான்; இதைநம
தாக்க வேண்டியது தான்.
சிறந்த கவிதைக்கு பாராட்டுகள் வல்லம் தமிழ்
Last edited by கௌதமன்; 21-01-2011 at 05:05 PM.
ஆகா... இப்படியெல்லாம் எங்களுக்குப் பாராட்டத் தெரியவில்லையே....கவிதைக்கு ஏற்ற பாராட்டு...தொடரட்டும்...நாங்கள் ரசிப்பதற்கு...
குழந்தைகள்
விடிகாலை! இளம் குருத்து!
முதல் தூறல்! புது நாத்து !
வீரிய விதை ! கீறிய நிலம் !
எழுதாக் காகிதம் ! உயிருள்ள ஓவியம் !
ஒளிர் கதிர் ! வளர் நிலவு !
இன்றைய நிகழை இனிப்பாய் மாற்றும்
நம்பிக்கை சுமக்கும் நாளைய நிஜங்கள்..!
அவரவர் கடவுளின் அற்புத தரிசனம்...!
அனுபவிக்க துடிக்கும் உண்மையான சுதந்திரம்..!
பசியில் கிடைக்கும் பல்சுவை விருந்து
பசியால் விளைந்த பசி நீக்கும் மருந்து...!
இவைகள் போலவும் இன்னும் கூடவும்
குழ்ந்தைகள் பற்றி கவிதைகள் கூறலாம்
ஆனால்....
குழந்தைகள் பற்றி கவிதைகள் புனைதல் தேவையற்றது...
ஏனெனில்
கவிதைகள் பற்றி கவிதைகள் எதற்கு...?
படிக்க யாருமற்ற பாழ்வெளியில் பாவம் வெகு நாட்களாய் தனிமையில் காய்கிறது இந்த பிள்ளை நிலா...
பாழ்வெளியில் அல்ல எங்கள் ஆழ்மனத்தில்
பரந்து நிற்கிறது இந்த பிள்ளைநிலா
பிள்ளைநிலா கண்ட சுகத்தில்
பின்னூட்டமிடத் தோன்றவில்லை
பாராட்டுகள் வல்லம் தமிழ்!
மிக்க நன்றி கௌதமன்!
நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
கனவெழுதி கரைந்து போகும்
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட..
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை-என்
உயிர் பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு..?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks