Page 2 of 14 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast
Results 13 to 24 of 158

Thread: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்..மாம்பூவும் தில்லைப்பூவும் சொல்வதென்ன..

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஆம்பல்










    அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை நீர்ச்சுனைகளிலும் , மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.


    அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம்ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. பச்சை நிறத்தில் நீண்ட தண்டு, வெள்ளை நிறத்திலும் வெளிர் சிவப்பிலும் மலர்கள் காணப்படும்.ஆம்பல் அல்லது அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை
    .


    குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு..... ஔவையார்.
    கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும்



    நீர்அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார்.
    நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும்



    மருத்துவ பயன்கள்


    இதழ்களும், இலைகளும் தண்டும், விதைகளும் கூட மருந்தாக பயன்படுகிறது

    நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம். கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

    அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

    அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.

    அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

    கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிது கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்.அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.

    அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

    சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும்.ரதம் பெருகும்.அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.

    வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும்.ரத்தக்கொதிப்பும்,நீரிழிவுநோயும்கட்டுப்படும்.வெள்ளைநோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்







    Last edited by Hega; 01-07-2012 at 08:15 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வண்ண மலர்களின் காட்சி, கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.

    இங்கு, சங்ககால மலர்க் கண்காட்சி நடக்கிறது, அனைவரும் கண்டு களியுங்கள் !

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கமகமக்கும் இலக்கியக் கதக்கம்.

    இணையத்தில் தேடி எடுத்துத் தொடுப்பது இலகுவான காரியமல்ல.

    உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    தொடர்ந்து தொடுங்கள்.

    மன்றமெங்கும் வாசனை பரவட்டும்.

    காந்தள்.. கார்த்திகைப் பூ..
    உணர்வோடு கலந்திட்ட ஒன்று..

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    ஜானகி அக்கா, அமரன் ஆகியோருக்கு நன்றி.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    அனிச்சம்




    Name : Scarlet pimpernel
    Botanical Name : Anagallis arvensis
    Family: Myrsinaceae




    மலர்களில் மிகவும் மென்மையானது அனிச்சம் பூ. அதை மோந்து பார்த்தாலேயே வாடி விடுமாம்.மென்மைக்கு உதாரணமாக திருக்குறளில் கூறப்படும் மலர் அனிச்சம் பூ ஆகும்

    இளஞ் சிவப்பிலும், அழகிய ஆரஞ்சிலும்,ஊதா நிறத்திலும் அழகாய் மலர்ந்திருக்கும் சூரியன் வெளிச்சம் இருக்கும் திசையில் இலைகள் திரும்பி கொண்டே இருக்கும்.இது ஒரு செடி வகைத்தாவரமாகும்.

    மோப்பக் குழையும், அனிச்சம்; முகம் திரிந்து
    நோக்கக் குழையும், விருந்து.

    மோந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்;
    முகம் மலராது திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர் விருந்தினர்.
    [



    Last edited by Hega; 01-07-2012 at 08:11 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  6. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அனிச்சமலர் காண நெடுநாளாய் ஆசைப்பட்டிருந்தேன். உங்களால் அது நிறைவேறிற்று. மிக்க நன்றி Hega.

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    நன்றி கீதம் அக்கா
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    குவளை










    செங்குவளை








    செங்குவளை, கருங்குவளை, நீலக்குவளை என்றெல்லாம் நிறத்துக்கேற்ப அழைக்கபடும் மல்ர் இது. சங்கப் பாடல்களில் உவமையாக இம்மலர் பயன் படுத்தப்ட்டிருக்கும். தேவாரம், திருப் புகழ், திருமந்திரம் என அனைத்திலும் பாடப்பட்ட மலர் இது. பெண்ணின் விழிகளுக்கு ஒப்பிடப்படும் மல்ர் இது.

    ஆமபலைபோன்ற நீர்தாவரம் இது.



    பார்க்கும் போது குவளையும் ஆம்பலும் ஒரே மலர் போல் தோன்றினாலும் இருமலர்களையும் ஒத்திட்டு பார்க்க வேண்டும்.

    ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது







    குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது

    Last edited by Hega; 01-07-2012 at 08:06 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    குறிஞ்சி












    இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி என ஆச்சரியமூட்டும் இயற்கையின் முன்னேநிலங்களை ஐவகையாய் பிரிக்கையில்மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என பிரிக்கப்பட இம்மலரே காரணம்


    கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும்

    குறிஞ்சிச் செடி கூட்டங்கூட்டமாக மலரும், மலரும் காலம் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை. உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன.





    Last edited by Hega; 01-07-2012 at 07:56 PM.
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  10. #22
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சங்ககால மலர்கள் பற்றிய அரிய தகவல்களை அரும்புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கும் உங்கள் பெரும் முயற்சிக்கு என் பாராட்டுகளும் சிறிய இ-பண அன்பளிப்பும்.

  11. #23
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கண்கொள்ளாக் காட்சிகள் ! நன்றி.

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க சிரமப்பட்டுத் தேடி அரிய தகவல்களைப் படங்களுடன் விள்க்கும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    சொ.ஞானசம்பந்தன்

Page 2 of 14 FirstFirst 1 2 3 4 5 6 12 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •