சந்தோசம் கொண்ட நிகழ்வுகளை தொலைத்து வருத்தம் கொண்ட நிகழ்வை கண்டு மனம் கொள்வது தான் நிம்மதியோ ?
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
"கந்தையானாலும் கசக்கிக்கட்டு" என்பது பழமொழி. அதுபோல ஓட்டை கார் ஆனாலும் தினமும் துடைக்கவேண்டும்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
------------------------------------------
தாயின் கவலை...
------------------------------------------
அமாவாசை ஏன் தான் வருகிறதோ?
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
-------------------------------------------
------------------------------------------
தாயின் கவலை...2
------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
-------------------------------------------
------------------------------------------
தாயின் கவலை...3
------------------------------------------
எதைக்காட்டி சோறூட்டுவேன்
இன்றெந்தன் குழந்தைக்கு
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை?
-------------------------------------------
வேறொன்றுமில்லை எது ஓரளவு கவிதைக்குரிய வடிவத்தில் இருக்கிறது எனபதில் சிறு குழப்பம்...யாராவது உதவுங்களேன்
Last edited by கௌதமன்; 17-11-2011 at 12:44 PM.
இப்போதுதான் இந்தப்பக்கம் வந்தேன் கவுதமன்.
நறுக்குகள் அருமை!
நூலாக்குங்கள்.
___________________________________
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.
நன்றி ஆதன்! எல்லாம் சொந்த அனுபவம் தான்.
நன்றி ஜெய். சந்தோஷமும், வருத்தமும் கலந்தது தானே வாழ்க்கை.
நன்றி ஐயா! புதுசா இருக்கும் போது ’தினமும் கழுவியேத் தீர வேண்டும்’ என்று உள்மனம் சொல்லும். அதே மனம் முதல் கீறலுக்குப் பிறகு அடங்கிக் கிடக்கும். [மனசை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வெச்சிருக்கிறொம்....]
அப்படியா...! நன்றி குணமதி!
இன்னும் நறுக்குகள் சேரட்டும்...ஆக்கிடலாம்.
[என்ன செய்ய? தமிழ் கூறும் நல்லுலகுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது..]
-----------------------------------------
வானிலை அறிக்கை
-----------------------------------------
வானொலி செய்திகளை
குழந்தைகளும் கேட்கத் தூண்டுகிறது
பள்ளி விடுமுறை அறிவிப்பு!
-----------------------------------------
மூன்று வடிவங்களுமே நன்றாக உள்ளன, என்றாலும் இரண்டாவது வடிவம் எனக்குப் பிடித்துள்ளது.
இவற்றையும் கொஞ்சம் பாருங்களேன்.
எதைக் காட்டி சோறூட்டுவேன்,
அடம்பிடிக்கும் என் குழந்தைக்கு,
இந்த அமாவாசை நாளில்!
நிலா கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைக்கு
எப்படிப் புரியவைப்பேன்,
இன்று அமாவாசையென்பதை!
தாயின் கவலை...2மிகவும் அருமை இந்த வரிகளினூடே வந்த மாறுபட்ட சிந்தனை ..------------------------------------------
ஏன் தான் வருகிறதோ இந்த அமாவாசை
எதைக்காட்டி சோறூட்டுவேன்
அடம்பிடிக்கும் குழந்தைக்கு
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
ரசிகர்கள் இன்றி
இன்னிசைக் கச்சேரி
பாடும் குயில்கள்.
நான் ஒரு மென்பொறியாளன், எனக்கு தமிழ் மீது தீராத காதல், நிறைய கவிதைகள் எழுதுவேன்.
----------------------------------------------------------
இருக்கு...ஆனா இல்லை
----------------------------------------------------------
எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ வேவ் அவன்
இன்டக்சன் அடுப்பு...
படுசுத்தமாக சமையலறை
கடையில் சாப்பாடு
----------------------------------------------------------
----------------------------------------------
இருளானந்தம் (?)
---------------------------------------------
எத்தனை ஆனந்தம்
இந்த நிலாச்சோறு
நன்றி மின்சார வெட்டு...
---------------------------------------------
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks