யானைப்பசிக்கு சோளப்பொரிகள்தான்,
எங்கள் ரசனைப்பசிக்கு உங்கள் கவிப்பொரிகள்!
சிக்கினோம் உங்கள் கவிப்பொறியில்!
இன்னுமின்னும் சிதறட்டும் கவிப்பொரிகள்!
யானைப்பசிக்கு சோளப்பொரிகள்தான்,
எங்கள் ரசனைப்பசிக்கு உங்கள் கவிப்பொரிகள்!
சிக்கினோம் உங்கள் கவிப்பொறியில்!
இன்னுமின்னும் சிதறட்டும் கவிப்பொரிகள்!
சேமிப்பு
நியான் விளக்கில் ஒளிர்ந்த
விளம்பரம் சேமிக்கச் சொன்னது
எரிசக்தியை!
சினேகிதம்
நம் தாயவிளையாட்டில்
நகர்ந்து போகும் நினைவாக
உடைந்த உன் வளையல் துண்டு!
தேடி வந்த கண்கள்
என்னைக் காணத் தேடி
பூந்தோட்டம் வந்த கண்களா
வண்டுகள்!
மின் சிக்கனத்தை சொன்ன
ஸ்நேகிதனின் வண்டுக்கண்களுக்கு
பாராட்டுக்கள் தருகிறான் மகாபிரபு
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
கனவும் நினைவும்
அதிகாலைத் தூக்கதில்
விழிப்பூட்டும் கனவு நீ
தூக்கம் வராத இரவுகளில்
தூங்க வைக்கும் நினைவும் நீ!
தூக்கம் கலைத்துவிட்டு
தூங்கச் செய்யும் நீ மட்டும்
தூங்காமல் எப்போதும்...
கனவும் நினைவும் ஒன்றுக்கொண்று சந்திக்க முடியாததால் இருக்கலாம்
அருமையான கவிதை
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி..
கர்ணனும் துரியோதனனின் மனைவியும் விளாடிட்டு இருக்கும் போது துரியோதனன் வந்து விடுவான். கர்ணன் கண்டிலன். பதிவிரதை துடித்து எழ, கர்ணன் அவள் கரம் பற்ற, இடை மாலை அறுந்து மணிகள் உருண்டோடக் மருண்டு விடுவர் கர்ணனும், துரியோதனன் மனைவியும்..
துரியோதனன் கேட்பான்.. எடுக்கவா... கோர்க்கவா..
நட்பு அங்கே நாதஸ்வரம் வாசிக்கும்.
இங்கே காலம் உருட்டிய தாயத்தில் ‘இலக்கு’ நோக்கிச் செல்லும் நகர்வானாக உடைந்த வளையல்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks