தமிழ் மன்றத்தில் ஒருவர் வடமொழியைத் தேவபாஷை என்றும், தமிழ் மொழியை
நீசபாஷை என்றும் நிந்தனை செய்கிறார். வடமொழியைத் தேவபாஷை என்று
சொல்லிக் கொள்ளட்டும்.அது அவருடைய உரிமை. ஆனால் தமிழ் மொழியை நீச
பாஷை என்று சொல்வதற்கு இவர் யார்? இதைத் தமிழ் மன்றம் எவ்வாறு அனுமதிக்
கிறது?தமிழ்மொழியை உயிருக்கு நிகராக மதித்து வரும் உள்ளங்களைப் புண்படுத்து
வதாக உள்ளது இவருடைய செயல்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த தமிழ் மொழியில், இறைவனுக்கு பூஜை
செய்யக்கூடாது என்று இவர் சொல்கிறார்.இறைவனே,"சொற்றமிழால் எம்மைப்
பாடுக!" என்று கேட்டுக் கொண்டதாக சேக்கிழார் எழுதுகிறார்.
செம்மொழியாம் தமிழ் மொழியை நிந்தனை செய்வதை இவர் இத்துடன் நிறுத்திக்
கொள்ள மன்றத்தார் அவரைக் கேட்டுக் கொள்ளவேண்டும்.
Bookmarks