Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: தமிழ் மொழியை அவமதிப்பதா?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    தமிழ் மொழியை அவமதிப்பதா?

    தமிழ் மன்றத்தில் ஒருவர் வடமொழியைத் தேவபாஷை என்றும், தமிழ் மொழியை
    நீசபாஷை என்றும் நிந்தனை செய்கிறார். வடமொழியைத் தேவபாஷை என்று
    சொல்லிக் கொள்ளட்டும்.அது அவருடைய உரிமை. ஆனால் தமிழ் மொழியை நீச
    பாஷை என்று சொல்வதற்கு இவர் யார்? இதைத் தமிழ் மன்றம் எவ்வாறு அனுமதிக்
    கிறது?தமிழ்மொழியை உயிருக்கு நிகராக மதித்து வரும் உள்ளங்களைப் புண்படுத்து
    வதாக உள்ளது இவருடைய செயல்.

    ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த தமிழ் மொழியில், இறைவனுக்கு பூஜை
    செய்யக்கூடாது என்று இவர் சொல்கிறார்.இறைவனே,"சொற்றமிழால் எம்மைப்
    பாடுக!" என்று கேட்டுக் கொண்டதாக சேக்கிழார் எழுதுகிறார்.

    செம்மொழியாம் தமிழ் மொழியை நிந்தனை செய்வதை இவர் இத்துடன் நிறுத்திக்
    கொள்ள மன்றத்தார் அவரைக் கேட்டுக் கொள்ளவேண்டும்.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    நண்பர் M.Jagadeesan

    நீங்கள் எந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அருமை நண்பர் நாகராவின் பதிவையோ அல்லது அதற்கு என்னுடைய பின்னூட்டத்தையோக் கண்டே நீங்கள் எதிர்வினையாக இக்கருத்தைப் பதிந்துள்ளீர்கள் எனவுணர முடிகிறது.

    சிறு திருத்தம்:

    நண்பர் நாகரா போலியான ஆன்மீகவாதியாகத் தன்னை பாவித்து எழுதிய சிறந்தக் கவிதையே அது. அதில் தமிழுக்குப் பெருமையையேச் சேர்த்துள்ளார் (வஞ்சப் புகழ்ச்சிப் போல்). தமிழ் நீச பாஷை என்று தானேக் கூறித் தன்னையேச் சாடுகிறார். தமிழுக்கும் மன்றத்திற்கும் அளப்பரியத் தொண்டாற்றும் உங்களைப் போல் நாகராவும் சிறந்த தமிழுணர்வாளர். நீங்கள் குறிப்பிடும் தமிழ் நிந்தனையை நண்பரால் கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாதுவென்பதை அவர்தம் படைப்புகள் மூலம் நன்குணர்ந்துக் கூறுகிறேன்.


    உங்களைப் போன்றப் போர்க்குணம் கொண்டக் கொள்கை மறவர் கூட்டம் இருக்கின்றவரை தமிழை பழிக்க யார் முன்வருவார் அதுவும் நமது தமிழ் மன்றத்தில்.

    நன்றி!
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    அருமையான விளக்கம் தந்த கெளதமனை பாராட்டகிறேன். போர்ப்படை தளபதி ஜெகதீசனையும் உளமார வாழ்த்துகிறேன். நாகராவின் பதிப்பின் உண்மையான சராம்சத்தை நமக்கு எடுத்துரைத்த கெளதமனுக்கு நன்றிகள்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  4. #4
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    அருமையான கோப உணர்வு, அதற்கு ஏகடியம் பேசாமல் அற்புதமான ஒரு தன்னிலை விளக்கம். மன்ற உறவுகளின் உணர்வும், வெளிப்பாடும் காண மனம் மகிழ்கிறது.
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ராஜேஸ் சொன்னதே என்னதும்..

    தமிழிருக்கும் இடமெல்லாம் இது போன்ற ஆரோக்கியப் போர்கள் இருக்கும். அப்படி அல்லாவிட்டால் நாம் தமிழரே அல்லர்..

    இதே நல்லுறவு என்றும் நிலைக்க எல்லாரும் உழைப்போம்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    தமிழ்மேல் கொண்ட பற்றால் கரும்பா மேல்கொண்ட கோபத்தை அடக்குமங்குசமாய் அமைதலாயிராது உடன் வந்து விளக்கம் கூறிய கௌதமனவர்களுக்கு நன்றி.

    நாகராவை நானும் அறிவேன்.
    அவர் தமிழ் பற்றையும் நாமறிவோம்..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  7. #7
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    26 Jul 2008
    Location
    sri lanka
    Posts
    53
    Post Thanks / Like
    iCash Credits
    24,562
    Downloads
    6
    Uploads
    0
    கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    அந்த பதிவை நானும் முதலில் பார்த்திருந்தால் இப்படித்தான் நினைத்திருப்பேன் ஆனாலும் நாகராவை நம்மவர் நன்கு அறிவர், அவரது பனி நம் மன்றத்தில் மிகச் சிறப்பானது, கவலை வேண்டாம் இங்கு அனைவரும் கூறிய கருத்துக்கள்தான் என்னுடைய கருத்தும்.

    உங்கள் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்

    தமிழன் என்பதிலும், தமிழ்மன்ற உறுப்பினர் என்பதிலும், இதுபோன்ற உணர்வாளர்கள் சக நண்பர்கள் என்று எண்ணும்போதிலும் பெருமிதம் கொள்கிறேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by matheen View Post
    கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்
    மைதீன் அவசரப் படவேண்டாம்
    பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்துபாருங்கள்
    கோபம் தணியலாம்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by matheen View Post
    கொய்யால எவன்டா தமிழுக்கு எதிரா பேசினவன்............சங்க பிச்சி எறிஞ்சிடுவன்
    தமிழுக்கு எதிரி இதுபோன்ற வார்த்தைகளும்தாம். தயவுசெய்து நாகரிகம் காக்கவும்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நமது மன்றத்து போர்வாள்களின் சொற்வீச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழுக்காக துடிக்கும் துடிப்பு என் நாடி நரம்புகளை எடு என் வாளை என போர்களத்திற்கு படை திரட்ட தூண்டுகிறது ..என்ன பண்ணுறது எனக்கு நாளைக்கு அலுவலகம் போகணுமே...அதுவும் வெளிநாட்டு அலுவலகம் மாசம் கைநிறைய சம்பளம் இதெல்லாம் விட்டுட்டு போறது ரொம்ப கடினம் ஆச்சே ...

    தோழர் மைதீன் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிவந்த தூய தமிழ் நம்மை(தமிழர்களை ) இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும் என்பதில் ஐயமேதும் இல்லை...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஜெய் உங்க பகடிக்கு அளவே இல்லையா ?
    அன்புடன் ஆதி



Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •