நல்லாலோசனை வழங்கியமைக்கு நன்றி காமாக்ஷி.
கவனிப்பாரற்றுக் கிடக்கும் சுவடிகளில் நம் பார்வையைப் படியவைக்க முயற்சி செய்கிறோம்.
நல்லாலோசனை வழங்கியமைக்கு நன்றி காமாக்ஷி.
கவனிப்பாரற்றுக் கிடக்கும் சுவடிகளில் நம் பார்வையைப் படியவைக்க முயற்சி செய்கிறோம்.
நானும் தோள் கொடுக்கிறேன் உங்களோடு..
உங்களுக்கு தேவையெனில் எனக்கு தனிமடல் இடுங்கள் என்று வரும் பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும் அல்லது இந்த பதிவுகளை கண்டு பதிலிடகூடாது நன்கு அறிந்தவர்களை தவிர அல்லது பொது பார்வைக்கு அவர்கள் கூற விளையும் கருத்துகள் வைக்க பட வேண்டும் .
இது முகம் சுளிக்கவைக்கும் பதிவுகள் என்று தோன்றினால் நிர்வாகத்தினால் அகற்றப்படும் என்று கூறி அந்த பதிவினை பொதுவில் வைக்காமல் அந்த பதிவருக்கு விளக்கம் கேட்டு செய்தி அனுப்பலாம் அந்த விளக்கம் ஏற்று கொள்ளபட்டால் அந்த பதிவினை பொதுவில் வைக்கலாம். தனிமடல் தொந்தரவு என்பது அந்த குறிப்பிட்ட முகவர் அதனை அனுப்பியவருக்கு நிர்வாகத்தினர் மூலமாக முதலில் மறைமுகமாக ,பின்னர் மறுமுறை அதுபோல் நிகழ்ந்தால் பொதுபடையாக எச்சரிக்கை செய்தி இடலாம் இதன் மூலம் மற்றவர்கள் அவரை பற்றி அறிந்து கொள்வர் ..இது போன்ற விசமிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்
நண்பர் கூறியதும் சரியான கருத்தாக படுகிறது பழங்க்கதைகள் படிக்கையில் அதனை படித்தவர்கள் இட்ட பின்னோட்டங்கள் குறைவாகவே உள்ளன .ஒரு பின்னூட்டம்தான் ஒரு படைப்பாளியின் திறமையை வெளிக்கொணரும் என்பதில் ஐயமேதும் இல்லை .இவ்வாறு நிகழாமல் இருக்க போட்டியின் போது மட்டும் புதிய படைப்புகள் அளிக்க பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு விழா காலங்களிலும் ஏதேனும் ஒரு தலைப்பில் போட்டியினை நடத்தலாம் .இவ்வாறு செய்வதன் மூலம் புதிய படைப்பின் மூலம் பாதுகாக்கப்படும் .மேலும் மன்றத்தின் பொறுப்பு கூடும் . .இன்றைய தினம் மன்ற நண்பர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் தாண்டினாலும் பின்னோட்டம் இடுபவர்கள், படைப்புகள் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது .இதற்க்கேனும் இவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் ஒரு மாற்றத்தை எதிபார்க்கலாம் ..தற்போது மன்ற உறுபினர்களின் எண்ணிக்கை என்ன நிர்வாகி அவர்களே?Originally Posted by KAMAKSHE
என்றும் மன்றத்தின் நாலாவது தூணாக என்றென்றும் ....
Last edited by நாஞ்சில் த.க.ஜெய்; 19-01-2011 at 11:51 AM.
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
தரமான படைப்புகளை வழங்குபவர்களின் எண்ணிக்கையையும், பின்னூட்டமிடுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க..
1) படைப்புகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை [ ஏற்கனவே மன்றத்தில் உள்ள வழிமுறைதான். இதில் பதிவின் தரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். வெறுமனே எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாது, பதிவின் கருத்து, எழுத்து நடை, பிழை தவிர்ப்பு ,... ஆகியனவற்றிற்கேற்ப புள்ளிகள் வழங்கலாம். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் இணைய காசுகளும், பட்டங்களும் வழங்கலாம். இந்த பொறுப்பை பொறுப்பாளர்கள் / தொகுப்பாளர்கள் ஏற்க வேண்டும். இதன் மூலம் பதிவுகளின் தரம் உயரக்கூடும்(?)].
2) பின்னூட்டம் என்பது வெறுமனே ‘நன்றி , பாராட்டுகள் போன்ற சம்பிரதாய வார்த்தைகளாக இல்லாமல் படைப்புகளை நன்கு அலசும் விதத்தில் இருந்தால் சிலசமயம் படைப்பைக் காட்டிலும் பின்னூட்டம் சிறப்பாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரு படைப்பு கவிதையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான பாராட்டையோ, விமர்சனத்தையோ எதிர்கவிதையாகவே பின்னூட்டமிடலாம். அத்தகைய பின்னூட்டங்களை திரியைப் பதித்தவர்கள் சிபாரிசு செய்யலாம், பொறுப்பாளர்களும், தொகுப்பாளர்களும் அதனை இனங்கண்டு பின்னூட்டமிட்டவர்களுக்கு புள்ளிகள் வழங்கலாம்.
3) பின்னூட்டங்களில் எதிர்கருத்துகள் அதிகம் வரவேற்கப்படவேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் திறமையும் அத்ற்கு பதில் அளிக்கும் திறமையும் அதிகரிக்கும். ஆனால் எதிர்ப்பு கண்மூடித்தனமானதாக இருக்கக் கூடாது. நியாயமானக் கருத்தாகவிருந்தால் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் எதிர்கருத்துகள் பதிக்கப்படவேண்டும். அதே சமயத்தில் மனம் புண்படும்படியானக் கருத்துகளோ, தனிமனித விமர்சனமோ, பொத்தாம்பொதுவான கருத்துகளோ பதித்தால் புள்ளிகளை குறைக்கலாம். பண்பட்டவர் பட்டத்தை திரும்பப் பெறலாம். பின்னூட்டங்களில் எதிர்கருத்துகளில் நயத்தகு நாகரிகம் இருந்தால் அதிகப் புள்ளிகள் வழங்கலாம்.
4) தனி மடல் அனுப்புவது முற்றிலும் தவறானதல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. பதிவைப் பற்றிய ஒரு கருத்தை வெளிப்படையாக கேட்காமல் தனிப்பட்ட முறையில் கேட்பது நாகரிகமான பழக்கமே. ஆனால் அதை விரும்பாதவர்களுக்கு அனுப்புதல் தவறு.
இதனால் படைப்புகளின் எண்ணிக்கையும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா?
நமக்கு தேவை எண்ணிக்கையல்ல. தரம்! தரம் நன்றாக அமைந்தால் சிறந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்!
இது குறுகிய காலத் திட்டம் அல்ல. ஒரு நீண்டகால திட்டம்.
இந்தக் கருத்துப் பற்றி தோழர்கள் விமர்சிக்கலாம்!
Last edited by கௌதமன்; 19-01-2011 at 05:12 PM.
மன்றத்தின் விதிமுறைகளை நான் ஏற்கிறேன்....
புதிய பொலிவுக்கும் புதிய அறிவுரைகளுக்கும் பாராட்டுக்கள்...!
புதிய பொலிவுடன் தமிழ் மன்றம் இயங்குவது பற்றி மகிழ்ச்சி! மன்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்!
வாழ்க வளமுடன்! என்றும் அன்புடன்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks