இப்படியொரு விழிபுணர்வு திரியை நாள்களாக காணாமல் விட்டு விட்டேனே...
முதலில் தந்த மனித உடலின் உண்மை செயல்பாடுகள் பற்றி கொஞ்சமாவது அறிய முடிந்தது... நம்மை சார்ந்த செயல்பாடுகளை கூட முழுமையாய் நாம் அறியாமல் இருக்கத்தான் செய்கிறேன்.. அறியதந்தமைக்கு நன்றிகள்..
அடுத்து...
அலர்ஜி பற்றி அடிப்படையான விஷயங்கள் இப்போதுதான் அறிகிறேன்.. இதுபோல் விழிப்புணர்வு எல்லொருக்கும் இருக்குமாயின் அந்த தோழிக்கு நிகழ்ந்த கசப்பான எல்லாம் முடிந்து போன வாழ்க்கை அவருக்கு இழந்திருக்க மாட்டார்...
நன்றிகள்... ஹேகா...
இன்னும் தொடருங்கள்.. என்ன சந்தேகம் கேட்க என்னிடம் அதற்க்குள்ள விஷயங்கள் இன்னும் இல்லையே.. ஆதலால் உங்களுக்கு அறிந்த விஷயங்கள் இங்கே தெளிவுபடுத்துங்கள்..., அவற்றை படித்து நான் அறிந்து கொள்கிறேன்..
மீண்டும் மகத்தான விழிப்புணர்வு தந்து கொண்டிருக்கும் ஹேகாவிற்க்கு பாராட்டுக்கள்..
பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..
என் சகோதரிக்கு ஆஸ்த்துமா இருக்கு. தொடர்ந்து inhaler உபயோகித்து வருகிறார், தொந்தரவு அதிகமாகும் நாட்களில் 4 அல்லது 5 முறை கூட. தொடர்ந்து உபயோகிப்பதில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை வேறு வழி இல்லை, பனி காலங்களில் மூச்சிறைப்பு அதிகமாகும். சில தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை, முடிந்தால் விளக்கம் தரவும் சகோதரி.
ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முயல்வது சிரமமானதே..
இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே அன்றி குணப்படுத்துதல் இயலாது.
எதனால் ஆஸ்துமா வருகிறது என கண்டறிந்தால் அதின் வலியிலிருந்து ஓரளவு தப்பிக்கொளளலாம்.
எம்மைசூழ இருப்பவையினால் -------------
சிகரெட் புகை தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்ரில் இருக்கூம் பக்ரீரியாக்கள் தூசிகள்கூட இந்னோய்க்கு எமனாகும்.பாவிக்கும் துணிகல் படுக்கை விரிபுக்களை அடிக்கடி துவைத்து உபயோகிக்க வேண்டும். துணி துவைக்க பயன் படுத்தும் சலவைத்துளினாலும் அலர்ஜி வரலாம்.
அதைவிட காற்றில் உள்ள தூசி நிறுவனங்கள் வெளியேற்றும் அசுத்தமான புகை,பு கார் போன்ற வாகனங்களில் வெளியிடும் புகை போன்றவை ஆஸ்த்மா உள்ளவருக்கு ஆபத்தை வரவழைக்க கூடும்.
பூச்சிகள் .ஒட்டடைகள், அடைசல் இல்லாமல் எபோதும் வீட்டை சுத்டமாக வைத்திருந்தாலே ஆஸ்துமாவின் வீரியம் கட்டுக்குள் வரும். அதைவிட கரம்பான் பூச்சி, எலிமருந்து, வாசனைஸ்பிரே என நாம் பயன் படுத்தும் மருந்தின் வீரியம் கூட ஆஸ்த்மாவை வரவழைக்கூடியது.
அதீத குளுமை வீட்டில் நீர் தேங்காது சுறறி இருக்கும் இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருத்தல் அவசியம்.
செல்ல பிராணிகள் பூனை, நாய் போன்ற இவற்றின் முடி பலருக்கு ஒவ்வாமை தரக்கூடியது. பிறகு அது ஆஸ்த்மாவில் கொண்டு விடும்.
எனவே எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் அதிக முடி உள்ள செல்ல பிராணிகலை படுக்கை அறையில் அனுமதிக்காதீர்கள். அடிக்கடி வீட்டை சுத்தம் செய்து முடியை அகற்றுவது முக்கியம்.அதை விட செல்லபிராணிகளால் அலர்ஜி என தெரிந்தால் அதை வீட்டில் சேர்க்காதிருப்பது..
வீட்டில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்வது முக்கியம். எங்கேயாவது தண்ணீர் கசியுமானால் அதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியமாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பது அவசியமாகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஆஸ்துமா
ஒவ்வாமை நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. இந்நோயால், உலக அளவில் சுமார் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு உலக மக்களிடையே இருப்பது அவசியம் என்ற நோக்கில்தான், ஆண்டு தோறும் மே 6 -ம் தேதி உலக ஆஸ்துமா நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது .
பொதுவாக கோடை காலத்தில் மகரந்தப் பொடி காற்றில் பரவுதல், புல்லின் தூசி போன்றவற்றால் வரும் ஒவ்வாமை நோயினால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் நாளாவட்டத்தில் ஆஸ்த்துமா நோயாக மாற்றமடைவதாகவும் கூறப்படுகிறது. வழங்கப்படும் ஒவ்வாமை மருந்து தும்மலையோ, மூக்கடைப்பையோ நிறுத்தாமல் மருந்து செயலிழந்தால் ஆஸ்துமா ஆரம்பிக்கப் போகிறது என்றும் கூறப்படுகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஆஸ்துமா என்றால் என்ன ?
ஆஸ்துமா என்பது சுவாசப்பைகளை அல்லது சுவாசக்குழாய்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசப்பைகள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள்ஆகும்.ஆஸ்துமாஉள்ள நபர்களில், சுவாசப்பைகளின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசப் ப்பைகளின் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசப்பைகளின் எதிரிடையாக செயல்படும் போது சுவாசப்பைகளின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை (விசில் சத்தத்துடன்), இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்
ஒருவருக்கு தொடர்ந்து சளிப்பிடித்தால் அவர்களுக்கு 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி அதனை தொடர்ந்து தும்மலும் இருமலும் இருப்பவர்களுக்கு சிறிது சிறிதாக சளி இருமல் தாக்கி நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாயை கிருமிகள் தாக்குகிறது.
இதனால் மூச்சுக்குழாயின் உட்சுவர்களில் சேதம் உண்டாகி சிற குழாய்கள் பாதிப்பு அடைகிறது. அந்த இடத்தில் வீக்கமும் உண்டாகிறது.
இதன் காரணமாக அசுத்த நீர் கசிந்து கிருமிகள் சிறு குழாய்களை தாக்குவதால் மூச்சுக்குழாய்கள் சுருங்கி விரியும் தன்மை குறைகிறது. இதன் காரணமாக சுத்த காற்று உள்ளே செல்லவும், அசுத்த காற்று வெளிவரவும் முடியாமல் தடங்கலாக இருக்கிறது.
காற்று, மூச்சுகுழாயின் உட்புறத்தில் நீரை கிழித்துக் கொண்டு போவதும், கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான் வீசிங் என்ற சத்தம் கேட்கிறது.
உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பலாம். ஒத்துக் கொள்ளாத பொருட்களை தவிர்ப்பது நல்லது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஆஸ்துமாவை கண்டறியும் வழிகள்:
ஆஸ்துமாவை கண்டறிவது மிக கடினம். அது எதனால் என்பதை கண்டறிய பல கட்டங்களில் சோதனை செய்யவேண்டும்.
அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவதும் இன்னும் கடினம்.
மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போது மருத்துவர் உங்கள் உடல் நிலையை பரிசோதிப்பதுடன் உங்கலுடனான கலந்துரையாடல்மூலமாக நீங்கள் அளிக்கும் பதிலை வத்தே கண்டறிய முயல்வர்..
பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுதிணறல் இருக்கிறதா, வீட்டில் யாருக்கேனும் ஆஸ்துமா இருக்கிறதா, மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்பதையெல்லாம் கேட்டு தெரிந்த பின் உங்கள் சுவாசப்பைகளை பரிசோதனை செய்ய ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக உங்களால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதை கண்டறிய முயல்வார்..
இந்த காற்று அளவு ஆஸ்த்மா மருந்து எடுத்து கொள்வதற்கு முன், மருந்து எடுத்து கொண்டதன் பின் கணக்கிட்டு பார்க்க படும்.
அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்மாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் சிறிய குழாய்கள் மூலம் செல்லுகிறது. ஆஸ்த்மா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முட்யாமல் தடைபடுகிறது. அதிக முயுக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இழுப்பில் முடியும்.
அப்போது சுவாசத்தி்னை சீர்படுத்திட இன்கால்ர் எனும் மருந்தை உபயோகிக்க மருத்துவரால் அறிவுறுத்தப்படுவர்.
இந்த இன்காலர் அளவும் காலமும் கூட ஆஸ்துமாவின் விரியத்தினை பொறுத்து மாறுபடும்.அதனால் தக்க மருத்டுவரின் ஆலோசனையோடு தகுந்த மருந்துகளை தவறாது பயன் படுத்துவதுடன் ஒவ்வாமை எதனால் என தேடி அதனை அழிப்பதுவே சிறப்பு.
ஒவ்வாமை, ஆஸ்துமாவை உருவாக்கி சுவாசக்குழாழ்களை தாக்கிடும் போது தக்க மருந்து கொடுத்து மூச்சு குழாய்களை விரிவாக்க முடியாவிட்டால், இறக்கவும் நேரிடும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
.
[B]நல்ல வைத்தியரின்ஆலோசனை.சிறப்பு வைத்தியரின் அவதானிப்பு தேவை
புகையில்லா சூழல், புகை பிடிப்பவர்கள் அந்தப்புகை ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள். புகைத்தலால் குழந்தைகள பாதிக்கப்படுவதும் அதை பெரியவர்கள் உணராதிருப்பதும்
அவர்கள் முன்னால் புகை பிடிக்காதீர்கள்
அதை விட எப்போதுமே புகை பிடிக்காதீர்கள்.
ஒரு அறை அல்லது காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்துபுகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.[/B]
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல்.
ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி , வைத்தியரின் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப் பயன்படுத்துங்கள் -
ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையென்றால் இது வீரிய தன்மை பெற்றுவிடும். ஆஸ்துமா முதிர்ந்த நிலைக்கு சென்றுவிட்டால், பிராணவாயு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே ஆஸ்துமாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
Last edited by Hega; 20-12-2010 at 09:28 AM.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
மிக்க நன்றி ஹேகா, மிகவும் பயனுள்ள தகவல்கள்.
இன்னும் பல தகவல்களை பகிந்து கொள்ளுங்கள்
நமது உடலை பற்றி அறியும்படி செய்யும் நண்பர் hega அவர்களுக்கு நன்றி. மேலும் இவ்வாறு பல தகவல்கள் தந்தால் நன்று.
அருமையான தகவல்கள்..பதிவிற்கு நன்றி..
கருத்திட்டோருக்கு நன்றி..
இயன்றவரை முயல்வேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks