Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: பூக்கள்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0

    பூக்கள்

    ஆம்!
    பூக்களுக்கு பற்கள் இல்லை
    அவை கடிப்பதில்லை

    பல் முளைத்திடாத குழந்தை போல
    பல் போன கிழவி போலவே பூக்கள்
    அவை குமரி போல சிரிப்பதில்லை

    பூக்களிடம் சொற்கள் இல்லை
    அவை கொல்வதில்லை

    பூக்களும் நாயும் ஒன்று
    இரண்டும் மோப்பம் பிடிக்கும்

    பூக்களும் நிலவும் ஒன்று
    இரண்டும் காயும்

    பூக்களும் நிழலும் ஒன்று
    இரண்டும் உதிர்ந்து போகும்

    பூக்களும் இலையும் ஒன்று
    இரண்டும் குப்பை ஆகும்

    பூக்களும் காதலும் ஒன்று
    இரண்டும் கல்லறை போகும்

    பூக்களும் சாமியும் ஒன்று
    இரண்டும் கருவறை ஆடும்

    பூக்களும் நீரும் ஒன்று
    இரண்டும் காற்றில் நெளியும்

    பூக்களும் பழம்பெண்டிரும் ஒன்று
    இரண்டும் உன்கட்டை ஏறும்

    பூத்த மரம் பூப்பெய்யும்
    பூக்கள் பூப்பெய்வதில்லை

    பூத்த மரம் காய்காய்க்கும்
    பூக்கள் காய்ப்பதில்லை
    பூக்கள் காயும் மாயும்

    பூத்த மரம் கனித்தரும்
    பூக்கள் கனித்தருவதில்லை

    பூக்கள் பிறக்கின்றன பூக்களாக
    பூக்கள் உய்கின்றன பூக்களாக
    பூக்கள் மடிகின்றன பூக்களாக

    பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன






    என்னுடைய சிறு கவிதை முயற்சி, பிழைகள் இருக்கின்றன என்றால் மன்னிக்கவும், பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள்

    ஜெஃபி

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன என
    பூக்களை ஒப்பிட்ட வித்ம அருமை

    அழகான முயற்சி இது.. தொடந்து எழுதுங்கள்..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Hega View Post
    பூக்கள் பூக்களாகவே இருக்கின்றன என
    பூக்களை ஒப்பிட்ட வித்ம அருமை

    அழகான முயற்சி இது.. தொடந்து எழுதுங்கள்..
    என் பிதற்றலுக்கும் ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஹேகா அவர்கள்...

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    பூவேதான் காயாகும் பின் கனிந்தக் கனியாகும்
    தென்னையின் உதிராதப் பூதான் தேங்காய்

    தொடர்ந்து எழுதுங்கள்! பாராட்டுகள்!
    முயற்சிதான் வெற்றிக்கு அடித்தளம்
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    நீவிர் பருகக் கொடுத்த
    பூக் கள் அருமையோ அருமை

    பூக்கள் பூக்களாய் இருப்பதைப் போல்
    நானும் நானாய் இருந்தால்
    பேத பாவம் நாச மாகுமே!

    வாழ்த்துக்கள் ஜெஃபி
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    பூக்களும் நாயும் ஒன்று
    இரண்டும் மோப்பம் பிடிக்கும்
    பூக்களும் நாயும் ஒன்றா?

    பூக்கள் மோப்பம் பிடிக்குமா?

    மற்றபடி மிகவும் ரசித்தேன் உங்கள் பூக்கவியில் உள்ள சுவையை



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    ஒரு பூவை பற்றி பூங்காவியம் எழுதிய ஜெ பி க்கு என்வாழ்த்துகள்
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பூக்கள் பற்றிய ஆராய்ச்சியை ரசித்தேன், சில இடங்களில் நெருடியபோதும். முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    முதலிரண்டு பத்திகளை இடம் மாற்றினால் இன்னும் அழகுபடும் என்று தோன்றுகிறது. பரிசீலிக்கவும். நன்றி.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜனகன்'s Avatar
    Join Date
    28 Sep 2009
    Posts
    3,234
    Post Thanks / Like
    iCash Credits
    26,748
    Downloads
    2
    Uploads
    0
    பூவைப் பற்றி ஒரு நல்ல கற்பனை,
    அதை கவிதையில் வடித்த விதம் அருமை.இன்னும் எழுதுங்கள்.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    நட்புடன் ஜனகன்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இதழ்கள் இருக்கின்ற போதும்,
    பேசமுடியாத பூக்கள்,
    இதழ் விரிப்பதுதானே
    அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

    அதையும் பறித்துவிடாதீர்கள்
    பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

    பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
    என்பது தெரியவில்லை...
    ஆனால்,
    பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
    அழகுதான்...

    சொரியும் பூக்களின் அழகை
    ரசிக்கின்றேன்..,
    அவற்றின் மரண உதிரலை உணராமலே...

    பூக்கவிதைக்குப் பாராட்டு...
    கவிப்பூக்களைக் கவிமாலையிற் தொடுத்துக்கொண்டேயிருங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    ஓவ் பூக்களுக்குள் இத்தணை சுவாரசியமான
    தொடர்கள் இருக்கிறதா
    வாழ்த்துக்கள் ......

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    இதழ்கள் இருக்கின்ற போதும்,
    பேசமுடியாத பூக்கள்,
    இதழ் விரிப்பதுதானே
    அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

    அதையும் பறித்துவிடாதீர்கள்
    பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

    பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
    என்பது தெரியவில்லை...
    ஆனால்,
    பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
    அழகுதான்...

    சொரியும் பூக்களின் அழகை
    ரசிக்கின்றேன்..,
    அவற்றின் மரண உதிரலை உணராமலே...

    பூக்கவிதைக்குப் பாராட்டு...
    கவிப்பூக்களைக் கவிமாலையிற் தொடுத்துக்கொண்டேயிருங்கள்...
    பூத்தபின் பூப்பெய்யும் மரங்கள்!

    ரசிக்கவைத்த காட்சியழகு.

    கவிப்பூச்சொறிவுக்கும் கருத்துச்செறிவுக்கும் பாராட்டுகள் அக்னி அவர்களே.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •