வார்த்தைச் சாட்டைகளை நீ
சொடுக்கும் ஒவ்வொருமுறையும்
புன்னகைத்து வைக்கிறேன்!
சொல்லம்பு தைத்த வேதனையை
உள்ளுக்குள் வாங்கிப் புதைக்கிறேன்!
ஆக்ரோஷம் மேலிட நீ முன்னேறும்போது
அமைதியாய் அடங்கிப்போகிறேன்!
என் எதிர்வினை வெறுமையாய்ப் போனதில்
திகைத்து நீ பின்வாங்குகிறாய்!
வெற்றிக்களிப்பில் நான்!
ஆனாலும்...
அடக்கிவைத்த என் துயரம் யாவும்
ஏதாவதொரு கண்ணீர்த்துளியில் வெளிப்பட்டு
என் தோல்வியை உன்னிடம் பறைசாற்றிவிடுமோ
என்று சிறிது அஞ்சத்தான் செய்கிறேன்!
Bookmarks