Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 45

Thread: முதற்றாய்மொழி - நம் தமிழ்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2

    முதற்றாய்மொழி - நம் தமிழ்

    உலக மொழிகளில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதை பாவாணர் ஆழ்ந்துச் சிந்தித்து, பல மொழிகளைக் கற்றுணர்ந்து, மூலச்சொற்களை ஆராய்ந்து, சொல்லாராய்ச்சி செய்து, வடமொழி முதலான பிற மொழிச் சொற்களின் வேர்ச்சொற்களைக் கண்டறிந்துச் சொன்ன பேருண்மையாகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் பாவாணர் வழியில் சொல்லாராய்ச்சிச் செய்து வருகின்றனர். நம் மொழி என்ற உணர்ச்சி மேலோங்கிடாமல் அறிவியல் வழியில் ஆதாரத்துடன் மெய்ப்பிப்பதே தமிழ் அறிஞர்களின் கடமையும் பொறுப்புமாகும்.இதற்கு பன்மொழிப் புலமையுடன் வரலாறு மற்றும் புவியியல் அறிவும், அயராத உழைப்பும் மிகவும் தேவை.
    அத்தகைய அறிஞர் பெருமகனார்களில் திரு.மா.சோ.விக்டர் என்பாரும் ஒருவர். தமிழ் இணைய பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட பாவாணரின் பல்வேறு நூல்களும், தேவநேயம் என்ற பெயரிலமைந்த பாவாணரின் பல்வேறு தொகுப்புகளும், மா.சோ.விக்டர் அவர்களின் நூல்களும் மற்றும் இணையத்தில் கிடைத்தச் செய்திகளும், விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா? நானா? நிகழ்ச்சியில் தமிழ் மொழி வளர / வளர்க்க செய்யப்படவேண்டிய முயற்சிகள் குறித்த சொல்லாடலும் இத்திரிக்குக் தூண்டுகோலாக அமைந்தது.

    இத்திரியைத் தொடங்குவதில் உள்ளபடியே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

    இது குறித்த நல்ல சிந்தனைகளை இதில் பதிவுச் செய்வோம்!

    தகவல்களில் ஏதேனும் பிழையிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுமாறுப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி!
    Last edited by கௌதமன்; 19-12-2010 at 05:07 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    வடசொற்கள் என்னும் சமஸ்கிருதச்சொற்களின் வேர்ச்சொற்கள் தமிழே என்பது ஆச்சிரியப்படுத்தும் உண்மையாகும்.

    இவையன்றி உலகின் மற்ற மற்ற இடங்களில் எல்லாம் தமிழ் வேர்ச் சொற்கள் பரவிக்கிடக்கின்றன.
    Last edited by கௌதமன்; 18-12-2010 at 06:51 PM.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    மன்றம் வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன் நண்பரே.

    உங்களை முல்லைப் பந்தலில் அறிமுகம் செய்து கொள்ளலாமே..

    தமிழின் முப்பரிமாணங்களையும் தனித் தன்மையையும் அறிந்து வைத்த்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    அதே நேரம் எந்த மொழியில் , எந்த விதத்தில் சொல்ல வேண்டுமோ அந்த விதத்தில் சொல்ல வேணும்.

    இது என் பட்டறிவு.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    "தமிழ் இணைய பல்கலைகழத்தால் பாவாணரின் பல்வேறு நூல்கள் இலவசமாக இணையம் மூலம் பெறத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது."

    அந்த இணையம் என்ன நண்பரே ....மேலும் கூறும் விடயங்கள் புதிது கூற வந்தது ......
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    பாவாணர் காட்டும் முதற்றாய் மொழியின் இயல்புகள்

    1. மிகப் பழைமையானதாயிருத்தல்

    2. பெரும்பாலும் எல்லா மொழிக்கும் பொதுவான எளிய ஒலிகளையே கொண்டிருத்தல்.

    3. கூட்டுவரி, மெய்ம்முதல், க ச த ப மெய்களின் பின் வேற்றுமெய் வரவு, வல்லின

    மெய்யீறு முதலியனவில்லாதிருத்தல்.

    4. முன்னொட்டுகளை மிகுதியாகக் கொள்ளாமை

    5. இடுகுறிப் பெயரில்லாதிருத்தல்

    6. ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல்

    7. பல மொழிகட்கும் அடிப்படைச் சொல் வழங்கியிருத்தல்

    8. பன்மொழிப் பொதுச்சொற்களின் மூல வடிவத்தைக் கொண்டிருத்தல்

    9. சொல்வளமுடமை

    10. நெடுங்காலம் கழியுனும் மிகச் சிறிதே திரிதல்

    11. இயற்கையான முறையில் வள்ர்ந்திருத்தல்

    12. இயன்மொழியாயன்றித் திரிமொழியா யில்லாதிருத்தல்

    13. பொருள்பற்றியன்றி ஈறுபற்றிப் பாலுணர்த்தாமை

    14. பொருட்பாகுபாடு செய்வதில் எளிய முறையைத் தழுவியிருத்தல்

    15. முதற்கால் மக்களின் எளிய கருத்துகளைக் கொண்டிருத்தல்

    மொழிஞாயிறு தேவநேய பாவாணர்

    அறிஞர் மா.சோ.விக்டர்
    Last edited by கௌதமன்; 19-12-2010 at 01:57 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    நுழைவாயில்

    பழந்தமிழ் நாடு தற்போதைய குமரி முனையுடன் முடிந்துவிடவில்லை. அது இந்தியப்பெருங்கடலில் நீண்டு சென்று நிலப்பகுதியாக இருந்தது. அதை குமரிநாடு என்றும் குமரிக்கண்டம் என்றும் லெமுரியா என்றும் அழைத்தனர். இந்த நாட்டிற்கு தெற்கு எல்லையாக பஃறுளி ஆறும், வடக்கே குமரி மலையும், குமரி ஆறும் இருந்தன. ஒரு காலத்தில் தோன்றிய கடல்கோளினால் இந்த நிலப்பகுதி அழிந்தது. பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்று இந்த நிகழ்ச்சியை சிலப்பதிகாரம் குறித்து வைத்துள்ளது. இந்தக் கடல்கோள் ஏற்பட்டு அந்த நிலப்பகுதி அழிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியில் புலமை பெற்று திருத்தமான மொழியை பேசியுள்ளனர். பல புலவர்கள் அருந்தமிழ்பாடல்களை பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த வரிவடிவ தமிழ் எழுத்துக்களைக் கொண்டு பனையோலைகளில் இலக்கணம் தவறாத சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சங்கங்கள் நிறுவி தமிழ் மொழியில் சிறந்த புலவர்களைக் கொண்டு பல நூல்களை இயற்றி தமிழை வளர்த்துள்ளனர்.
    Last edited by கௌதமன்; 24-12-2010 at 02:57 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    ரொம்பவே சுவாரசியமான தகவல்கள் இவை. எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு
    தொடருங்கள் கெளதமன்



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    தற்கால அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும், பல்லாயிரம் கோடி ஆண்டுகட்கு முன்பு ஒரேப் பொருளாகயிருந்ததென்றும், அது வெடித்துச் சிதறி இபோது நாம் காணும் அண்டத்தையும் அதன் பிற உற்ப்புகளையும் தொர்றுவித்ததென்றும் கூறுகின்றனர்.
    அவ்வாறு வெடித்துச் சிதறியப் பொருள் விரிந்து பரந்ததன. அவற்றுள் சில நம் சூரியக் குடும்பத்தை உருவாக்கக் காரணமாகவிருந்த்தது. (இதுவே Edwin hubble என்ற அறிவியலாரின் பிரபஞ்சத் தோற்றக் கொள்கையாகும்).

    எட்வின் ஹபிள்



    பிரபஞ்சம் விரிவடைதல்

    Last edited by கௌதமன்; 19-12-2010 at 05:27 PM.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  9. #9
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    பழமையோ ,புதுமையோ ,எதுவோ
    உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்
    நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ......

    தொடருங்கள்
    வாழ்த்துக்கள்

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    பாஞ்சியா (Pangaea) என அழைக்கப்பட்ட உலகின் முதல் கண்டம், முற்றிலும் ஒருநிலப்பரப்பாகவே இருந்ததாக அறிவியலார் கருதுகின்றனர். பின்னர் வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாகப் பிரிந்தது. இரண்டுக்குமிடயே கடல்வழி இருந்தது. வடக்குக் கண்டம் லாராசியா (Laurasia) என்றும் தெற்குக்கண்டம் கோண்டுவானா (Gondwana) என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரண்டும் சிதறி, புதுப்புதுக் கண்டங்கள் தோன்றின.
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    லாராசியா எனும் கண்டத்தில் இன்று நாம் அறியப்படும் வட அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா தவிர்த்த ஆசியா போன்ற கண்டங்கள் உள்ளடங்கியிருந்தன. கோண்டுவானா கண்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிக்கா, இந்தியா மற்றும் தென் அமெரிக்க உள்ளிட்ட கண்டங்கள் அடங்கியிருந்தன. இவ்விரு பெருங்கண்டங்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து சிதறின என்பது அறிவியலார் கூற்று. (இக்கொள்கையை ஆல்ஃப்ரெட் வெகெனெர் [Alfred Wegener] என்பார், கி.பி. 1910 ஆண்டில் வெளியிட்டார்.)
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கௌதமன்'s Avatar
    Join Date
    29 Dec 2009
    Location
    தமிழகம்
    Age
    48
    Posts
    1,293
    Post Thanks / Like
    iCash Credits
    27,343
    Downloads
    2
    Uploads
    2
    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
    " நான் கொஞ்சம் முரண்பட்டவன்”
    எனது வலைப்பூ

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •