உலக மொழிகளில் முதலில் தோன்றிய மொழி தமிழ் என்பதை பாவாணர் ஆழ்ந்துச் சிந்தித்து, பல மொழிகளைக் கற்றுணர்ந்து, மூலச்சொற்களை ஆராய்ந்து, சொல்லாராய்ச்சி செய்து, வடமொழி முதலான பிற மொழிச் சொற்களின் வேர்ச்சொற்களைக் கண்டறிந்துச் சொன்ன பேருண்மையாகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் பாவாணர் வழியில் சொல்லாராய்ச்சிச் செய்து வருகின்றனர். நம் மொழி என்ற உணர்ச்சி மேலோங்கிடாமல் அறிவியல் வழியில் ஆதாரத்துடன் மெய்ப்பிப்பதே தமிழ் அறிஞர்களின் கடமையும் பொறுப்புமாகும்.இதற்கு பன்மொழிப் புலமையுடன் வரலாறு மற்றும் புவியியல் அறிவும், அயராத உழைப்பும் மிகவும் தேவை.
அத்தகைய அறிஞர் பெருமகனார்களில் திரு.மா.சோ.விக்டர் என்பாரும் ஒருவர். தமிழ் இணைய பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்ட பாவாணரின் பல்வேறு நூல்களும், தேவநேயம் என்ற பெயரிலமைந்த பாவாணரின் பல்வேறு தொகுப்புகளும், மா.சோ.விக்டர் அவர்களின் நூல்களும் மற்றும் இணையத்தில் கிடைத்தச் செய்திகளும், விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா? நானா? நிகழ்ச்சியில் தமிழ் மொழி வளர / வளர்க்க செய்யப்படவேண்டிய முயற்சிகள் குறித்த சொல்லாடலும் இத்திரிக்குக் தூண்டுகோலாக அமைந்தது.
இத்திரியைத் தொடங்குவதில் உள்ளபடியே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
இது குறித்த நல்ல சிந்தனைகளை இதில் பதிவுச் செய்வோம்!
தகவல்களில் ஏதேனும் பிழையிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுமாறுப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
Bookmarks