அன்பு என்பது........
பாசம் என்பது பாரமாகுமா..
நேசம் என்பதும் நெஞ்சைத்
தொட்டுச்செல்லுமா...?
வாழ்க்கை முழுவதும்
வாதை ஆகுமா
இன்பம் தேடினால்
என்றும் இனிமை போகுமா?
அன்பாய் அரவணைப்பதும் .
என்னை அடிமை ஆக்குமா.
இத்தனை வலி ,,
இந்த அன்பில் தோன்றுமா?
பந்தம் என்பதும்
பாசம் என்பதும்
வந்த சொந்தத்தால்
நிந்தை ஆகுமா?
பேதை என் உள்ளம்
வேதனை தனை
சோதனையோடு
சகிக்க வேண்டுமா?
இல்லை...........இல்லை
அன்பு என்பது
அன்னை அன்பை ஜெயிப்பது
பாசம் என்பது
தந்தை அறிவைக்கொடுப்பது
நேசம் என்பது
நட்பில் நிழலாய் இருப்பது
அணைப்பு என்பது
அகிலம் ஜெயிக்க செய்வது
வாழ்க்கை முழுவதும்... ஜெயிக்கும்
வல்லமை தருவது
நினைக்கும் போதிலே
இனிய நினைவைத்தருவது
பந்தம் என்பது
உயிர் கொடுப்பது
சொந்தம் என்பது
என்றும் நிலைத்து நிற்பது.
துன்ப நேரத்தில் பெரும்
நிழலாய் இருப்பது
துவளும் போதிலே
தாங்கும் தூணாய் இருப்பது
இத்தனை பயன்
இந்த அன்பில் இருக்க
அத்தனை அன்பும் எனக்கு
வேண்டாம் என்பேனா.... ?
Bookmarks