Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: வாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0

    வாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்

    சராசரி மனிதனுக்கு அதிக பீஸ் வாங்கும் பள்ளி, வழக்கறிஞர் என்று பல வகைகளில் அல்லாடல் உள்ளது. இன்சுரன்ஸ் கட்ட மறந்து டிராபிக்கில் மாட்டினால் மேஜிஸ்ட்ரேட்டிடம் முறையிட்டு ஏதாவது செய்ய முடிகிறதா? இரண்டு மூன்று வருடம் பிரீமியம் கட்டாதவரும் இரண்டு நாள் மட்டும் கட்டாதவரும் ஒரே அபராதம்தான் கட்டுகிறார்கள். நீதிமன்றம் சென்றவருக்கு வக்கீல் பீஸ் கட்டிய இரசீது நிச்சயம் இருக்காது. அது நுகர்வோர் மோசடி லஞ்சம் இல்லையா?

    நாங்கள் மந்தைவெளியில் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து 20 ஆண்டுகள் இருந்தோம். வாடகைக்கு இரசீது கிடையாது. இரசீது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நல்ல முறையில்தான் கேட்டோம். உடனே என் மகனுக்கு வீடு வேண்டும் என்று காலி செய்ய சொல்லி விட்டார். ரூ6000/- வாடகை என்ற நிலை மாறி இப்பொழுது ரூ10000/- கொடுத்து வேறு வீடு மாற்றி நாங்கள் இழந்ததெல்லாம் ஒரு வகை நுகர்வோர் மோசடிதானே!

    திட்டம் போட்டு திருடுபவர்களை என்ன சொல்ல. சரியான வீடு கிடைக்கவில்லை என்று நாங்கள் கூறியும் தன் பிள்ளையின் மைத்துனரிடம் கூறி எங்களுக்கு வீடு பார்க்கும் ஏற்பாடு செய்து பின் அதற்கான செலவு என்று அட்வான்ஸையும் சரியாக திருப்பவில்லை. நாங்கள் இடம் பெயர்ந்த வீடு அவர்கள் பார்த்துக் கொடுத்த வீடும் இல்லை. நாங்கள் காலி செய்த வீட்டில் அவர் மகனும் குடி வரவில்லை. Mylapore Timesல் விளம்பரம் செய்து ரூ9000/-க்கு வாடகைக்குதான் கொடுத்துள்ளார். இவ்வாறான ஊழல் கலாச்சாரம் வாழ்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பது 'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்ற வைராக்கியத்தால் நுகர்வோர் மன்றங்கள் சென்று சரிசெய்ய முடியாது.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாங்க விஜி!

    இன்னார் செய்தார் என்று சொல்லிக் காட்டுவதில் விழிப்புணர்வு ஏற்படும்தான். ஆனால் இன்னது நடந்தது என்று சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்குத்தான் மன்றக் கட்டுமானம் உள்ளது.

    மன்றத்தை நன்கு சுற்றிப்பார்த்தால் நீங்களே இதை உணர்வீர்கள்.

    அந்த அடிப்படையில் உங்கள் பதிவை திருத்துகைக்கு உட்படுத்தி உள்ளேன்.

    புரிந்துணர்வுக்கு நன்றி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வீட்டு வாடகை ரசீது யாரும் கொடுக்கமாட்டார்கள். இருபது ஆண்டுகளாக ரசீது கேட்காத நீங்கள் திடீரென்று கேட்டுள்ளீர்கள்.அதுவும் தவறுதானே.ரூ 6000 வாடகையில்தான் இருந்துள்ளீர்கள். மந்தைவெளியில் இவ்வளவு குறைவான வாடகைக்கு வீடு கிடைக்காது.நீங்கள் பேசாமல் இருந்திருக்கலாம்.முதலில் நாம் பிழைக்கும் வழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

  4. #4
    Banned
    Join Date
    11 Dec 2009
    Posts
    2,348
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    நண்பருக்கு வணக்கம்! வருக! வருக!
    ............................

    வீடு வாடகைக்கான ரசீது கொடுப்பதில்லை...அது ரொம்ப காலமாக அனைத்து வீட்டு உரிமையாளரும் கடைப்பிடிக்கின்ற சட்டவிரோத செயல் தான்....மறுப்பதற்கில்லை...உறவுகளும் அப்படித்தான் வசூலிக்கின்றன...அது பற்றி அப்புறம் பர்ர்க்கலாம்....

    உடனடியாக வீடு காலி செய்ய சொல்ல வீட்டு உரிமையாளருக்கு அதிகாரம் இல்லை..பெரும்பாலும் வீட்டு வாடகைச் சட்டம்...வீட்டின் வாடகைதாரருக்கே அதிக உரிமைகள் வழங்கியுள்ளது. (காலி செய்ய இரண்டு மாதம் அவகாசம் என்றாலும் அதற்கு மேலும் பெறலாம்) ஆரம்பத்திலேயே இது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் செய்து கால அவகாசத்தை அங்கேயே பெற்றிருக்கலாம்...(அவர்கள் பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில்)

    இல்லையேல் இலவச சட்டஉதவி மையத்தை நாடி ஒரு வழக்குரைஞரின் ஆலோசனையும் பெற்று அதன்படி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம்...(தனியாக செயல்பட முடியாத நிலையில் இருக்கும் சூழ்நிலைகளை சொல்லி)....உதவிபெற்றிருக்கலாம்..அப்படி செய்திருந்தால்...வீட்டின் முன்பணம் முழுமையாக திரும்ப கிடைத்திருக்கும்...

    அருகில் உள்ள காவல் நிலையம் சரியாக செயல்படாது என்ற நம்பிக்கை இருக்குமானால் மாநகர காவல்துறைக்கு (ஆணையருக்கு) மின்னஞ்சல் மூலம் உங்கள் புகாரின் நகலை அனுப்பியிருக்கலாம்..இதனால் கீழ்மட்டத்தில் (காவல் நிலையத்தில்) ஒரளவுக்கு...முறைகேடுகளை உங்கள் விஷயத்திற்காக தடுத்து நியாயமன உங்கள் முன்பணத்தை திரும்ப கிடைக்க வழிசெய்திருக்கலாம்...

    இந்த வழிமுறைகளையெல்லாம் கையாண்டு மிக எளிமையாக வீட்டு வாடகை முன்பணத்தை வீட்டு உரிமையாளரிடம் திரும்ப பெற்றிருக்கின்றனர். நீங்கள் காவல் துறைக்கு போக மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே வீட்டின் உரிமையாளர் எல்லை மீறி அதிக சட்டவிரோதத்திற்கு சென்றுள்ளார்.
    .......................
    நுகர்வோர் மன்றத்திற்கு வீட்டின் வாடகை செலுத்திய ரசீது...ரப்பர் ஸ்டாம்ப் குத்தியது இருந்தாலும் நீங்களே வழக்கு பதியலாம்..அல்லது ஒப்பந்த நகல் இது இப்போது பல இடங்களில் வீட்டு உரிமையாளரால் பின்பற்றபடுகிறது...(காரணம் வீட்டுவாடகைச்சட்டத்தினால் வீட்டின் உரிமையாளருக்குத்தான் அதிக பாதிப்பு உள்ளது அதில் இருந்து விடுபடுவதற்கு இந்த ஒப்பந்தமும் வழிசெய்கிறது...).....

    ....நுகர்வோர் மன்றத்தில் வழக்கு பதிய அவ்வளவு செலவுகள் இல்லை..வழக்குரைஞர்கள் வைத்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை...வீட்டின் குடும்ப உறுப்பினரில் யாராவது ஒருவர் கூட வழக்கிற்காக ஆஜர் ஆகலாம்...தேவைப்பட்டால் இலவச சட்ட ஆலோசனைகளும் அந்த மன்றத்தின் அருகிலேயே தருகின்றனர்.
    ...............
    லஞ்சம் தருவதில் யாருக்கும் உடன்பாடில்லை...இது குறித்து நேற்று கூட தொலைக்காட்சியில் அலசப்பட்டது...அதில் உள்ள ஒரு இளைஞர் கூட்டமைப்பு லஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதற்காக தொண்டுள்ளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது (சத்தியாகிரகா) (அவர்களும் லஞ்சித்தினால் பாதிக்கப்பட்டு அதனால் இன்னும் பிறரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் கட்டுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது)....அதைத்தொடர்பு கொள்ளலாம்....
    ................
    இப்போது எல்லாம் முடிந்துவிட்டதால் இதை இப்போது முன்னெடுத்து செல்வது சற்று கடினமான விஷயம்.... இருப்பினும் புகார் அளிக்கலாம்....நேரிடையாக காவல் நிலையத்திலும் அளிக்கலாம்...அல்லது....காவல்துறை இணையதளத்தின் மூலமும் புகார் அளிக்கலாம்....அல்லது பதிவு அஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம்...புகார் மனு ஆணையாளரின் குறிப்புடன் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.. .(மீண்டும் காவல்நிலையத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான தகவல்கள் ஆணையாளருக்கு காவல் நிலையம் விளக்க கடிதத்துடன் குறிப்பிட்ட காலவகாசத்திற்குள் அனுப்பி வைக்கவேண்டும்...இது வழக்கமான முறை) அதன்படி விரைவில் ஒரளவுக்கு பணம் திரும்ப கிடைக்கலாம். இதற்காக கையூட்டு எதுவும் தர முயற்சிக்க வேண்டாம்...எதிர்தரப்பு தந்தாலும் பரவாயில்லை...இதில் வரும் எந்த விஷயத்தையும் நியாயமற்ற முறையில் (காவல் துறையினரால்) செய்துவிடமுடியாது...இது (சிவில்). நண்பர்கள் யாராவது வழக்குரைஞர்களாக இருந்தால் அவர்கள் உதவியையும் நாடலாம்...

    (இன்னும் சில விஷயங்கள் தவறாக புரிதலுடன் தங்கள் பதிவில் இருக்கிறது...பாதகமில்லை..அது பற்றி பிறகு பதிவிடுகிறேன்...உதாரணம் இன்சூரன்ஸ்)

    நன்றி! தங்கள் வரவு நல்வரவு ஆகுக....
    Last edited by nambi; 15-11-2010 at 02:39 AM.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    வாங்க விஜிஸ்ரீ, அறிமுகப்பகுதியில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை தரலாமே...
    அன்புடன் ஆதி



  6. #6
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    மந்தைவெளி ஆளுக்கே நுகர்வோர் மன்றம் பாடம் என்பது சற்று மிகைதான்! நுகர்வோர் மன்றங்கள் மட்டும் அல்ல, நீதிமன்றங்களும் இங்கு பயன்படத்தக்க வகையில் இருப்பதில்லை என்பது ஊரரிந்த உண்மை. தகவல் உரிமை, நுகர்வோர் உரிமை, மனித உரிமை போன்ற சில புதிய சட்டங்களுக்கு ஆர்வமாக பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்தாலும் அடிப்படை ஏதும் மாரவில்லை என்பதை உணர்ந்த சராசரி மனிதன் விழிப்புணர்வு ப்ரசாரகர்களை சந்தேக கண்ணொடுதான் பார்க்கிரான். CAI என்ற அமைப்பின் ப்ரசாரம் ஒன்றை சமீபத்தில் கேட்க நேரிட்டது. எதையும் மன்றதிற்கு எடுத்துச் செல்லாமல் இடைத் தரகாக இவர்கள் ஆதாயம் தேடுவதாகவே எனக்கு படுகிறது!!

  7. #7
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    நான் மன்றங்களில் 10க்கும் அதிகமான வழக்குகளில் ஈடுபாடுடன் செயல்பட்டு கொன்ன்டிருக்கிறேன். ஆரம்ப நாட்களில் வாதத்தை எடுத்து வைப்பதற்கும் முன்னால் நீதிபதி 'Case Dismissed ' என்று ஈரம் இல்லாமல் வெளியே தள்ளப்பட்டேன். இன்றும் அவ்வாறே தணிகாசலம் போன்ற நீதிபதிகள் நடந்து கொண்டாலும் NCDRC யில் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்துகிறேன். என் அனுபவம் பிரச்சாரம் செய்பவர்களின் அனுபவத்தை விட முதன்மையானது.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சின்ன விஷயம்தான்.

    நுகர்வோர் உரிமை என்பது போல் நுகர்வோர் கடமை என்றும் ஒன்று உள்ளது என்பதை நாம் என்றுமே நினைவில் கொள்ளுதல் மிக முக்கியம்.

    வீட்டு விஷயத்திற்கு வருவோம். வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை நாம் சரியாக படிப்பது கூட இல்லை. 11 மாதங்களுக்குப் பிறகு மறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஒரு வாக்கியம் அதில் இருப்பதையே மறந்து விடுவோம். 11 மாதத்திற்கு பின்னால் ஒப்பந்த புதுப்பிப்பு என்பது நம்மைப் பொறுத்தவரை அனாவசியச் செலவு என்று புதுப்பிப்பதே இல்லை.

    ஆனால் வீட்டு உரிமையாளர் அதிக வாடகை கேட்கும் போதோ அல்லது பின்னொரு நாளில் ரசீது கொடுக்க கேட்கும் பொழுது மறுக்கும் பொழுதோ, நமது உரிமை உணர்வு எழுந்து கொள்கிறது.

    கடமையைச் செய்யாதவருக்கு உரிமை கேட்க தார்மீக உரிமையே கிடையாது.

    விழிப்புணர்வு என்பது மற்றவர்களை மாற்றுவது அல்ல,

    தான் மாறுவது என்பதாகும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    PhD போன்ற ஆராய்ச்சி படிப்பு படித்தவரும் வேலை வேண்டும் என்றால் தங்கள் கல்வி தகுதி சான்றுகளை (நகல் அல்ல) கிரயமாக கொடுத்து அடிமை தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நம் தமிழகத்தில் உரிமை கேட்கும் தாமரை எப்படி? யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? பெற்றவர்களை மக்கள் காப்பற்றவேண்டும் என்று கூட புதிதாக உரிமை கூறும் சட்டம் இருப்பதினாலேயே உங்கள் பெற்றோருக்கு எழுத்து மூலம் பட்டயம் எழுதி கொடுத்தீர்களா?

  10. #10
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    There is no use in fighting amongst ourselves. The Right in India are available only in paper and it is hard to secure tham through Consumer Court for ordinary public. This is a plain and simple fact

  11. #11
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    சமூகத்தினரின் உணர்வுகளால் வழங்கபடுவது உரிமை. அது சட்டத்தினால் ஏற்படுவது அல்ல. மறுக்கப்பட்டட உரிமைகள் சட்டப்படி ஆராயப்படும் இடம்தான் மன்றங்கள். மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக பிரதிவாதி தண்டனை பெற்றாலும் வாதி இழந்த எதனையும் பெறுவதில்லை. செய்திகளில் நுகர்வோருக்கு சாதகமாக ஒரு தீர்ப்பில் இருபது லட்சம் என்று வந்தாலும் அந்த தீர்ப்பிலேயே மேல்முறையிட்டில் அது எடுபடாத வகையில்தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. நுகர்வோர் மன்றம் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நீங்கி சமூக நல்உணர்வுகள் ஊட்டும் பிரச்சாரங்கள் தேவை.விழிப்புணர்வு என்று செய்யப்படும் இதற பிரசாரங்கள் பிற ஆதாயங்களுக்காகத்தான்.

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    20 வருடம் ரசீது கேட்காதபோது திடீரென்று ரசீது கேட்க வேண்டும் என்று எதற்காக தோன்றியது.

    மந்தைவெளியில் 6000 ரூபாய்க்கு ஒரு குடிசைவீடு கூட கிடைக்காதே. அப்படியென்றால் இவ்வளவு குறைந்த வாடகையில் இருந்த நீங்கள் ஏன் அந்த வாய்ப்பை இழந்தீர்கள். ரசீது கேட்கவேண்டும் என்று எதற்காக தோன்றியது என்று நீங்கள் எழுதினால் உங்கள் பிரச்சனையை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

    நீங்கள் 6000 ரூபாய் கொடுத்த இடத்தை அவர்கள் மறுபடியும் 9000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்கள் என்றால் அவர்கள் இதுவரை நஷ்டப்பட்டே இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    வாடகைக்கு வீடு எடுக்கும்போது ஒரு ஒப்பந்தம் செய்வீர்கள் அல்லவா, அந்த ஒப்பந்தத்தில் சரியான வாடகை என்று இருக்குமே, அதுவே ரசீதாக உபயோகப்படுத்திக்கொள்ளலாமே.

    ரொம்ப சுலபமான வழி என்னவென்றால் கொடுக்கும் வாடகையை பணமாக கொடுக்காமல் காசோலையாக கொடுத்தால் அதுவே ரசீதிற்கு சமமாக இருக்குமே.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •