Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: வாடகை வீடும் நுகர்வோர் மன்றங்களும்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இன்று நிலம் விற்கும் விலையில் இது போன்று குறுக்கு வழியில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படலாமா? உழைத்து தன காசில் வாங்க வேண்டும் அது தான் நன்று நண்பரே ...நண்பர் தாமரை அவர்களின் கருத்து மிகவும் பொருந்தக்கூடியது சட்டத்திற்கு வேண்டியது சாட்சிகள் மட்டுமே கடமையை சரிவர செய்யாத ஒருவனால் எவ்வாறு சாட்சிகள் சேகரிக்க முடியும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ரசீது கேட்டதற்காக வீடு மாறியது கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். அதை விடக் கொடுமையெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது கோயமுத்தூரில். அடிமையாய் வாழ பழகிக் கொண்டால் தான் வாடகை வீடு வசதிப்படும். இல்லையென்றால் வீடு தேடியே வாழ்க்கை போய் விடும்.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by Vijisri View Post
    PhD போன்ற ஆராய்ச்சி படிப்பு படித்தவரும் வேலை வேண்டும் என்றால் தங்கள் கல்வி தகுதி சான்றுகளை (நகல் அல்ல) கிரயமாக கொடுத்து அடிமை தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ள நம் தமிழகத்தில் உரிமை கேட்கும் தாமரை எப்படி? யதார்த்தம் என்று ஒன்று உண்டல்லவா? பெற்றவர்களை மக்கள் காப்பற்றவேண்டும் என்று கூட புதிதாக உரிமை கூறும் சட்டம் இருப்பதினாலேயே உங்கள் பெற்றோருக்கு எழுத்து மூலம் பட்டயம் எழுதி கொடுத்தீர்களா?

    நாம் கடமைகளைச் சரிவரச் செய்யாததால்தான் உரிமையைக் கேட்கவியலாமல் தவிக்கிறோம் என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

    எது உரிமை? எது கடமை?

    பெற்றவர்களுக்கு இறுதிக் காலத்தில் பாதுகாப்பு அளிப்பது கடமை.

    பெற்றவர் சம்பாதித்த சொத்துக்களை அனுபவிப்பது உரிமை.


    கடமையைச் செய்ய மறுக்கிறோம். உரிமை உரிமை என்று போராடுகிறோம். இதுதானே இன்றைய எதார்த்த நிலை. அதைத்தானே அந்தச் சட்டம் உணர்த்துகிறது? எது கடமை எது உரிமை என்று புரிந்து கொள்ள மறுப்பது வேடிக்கையாய் இருக்கிறது.

    சமூகத்தின் உணர்வுகளினால் உரிமைகள் கொடுக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படையே சமூகத்தில் இருக்கும் அந்த உரிமைக்கு அடிப்படையான கடமைகள் தான்..

    அந்த கடமைகள் மதிக்கப்படாமல் மிதிக்கப்படும்பொழுதுதான் அவற்றைக் காப்பாற்றச் சட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதாவது உரிமை என்பது உண்டாகும் பொழுது அதற்கு முன்பாகவே கடமை என்ற ஒன்று உண்டாகிவிடுகிறது. அந்தக் கடமை சரிவர செய்யப்படாத பொழுது சரியான வழியில் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.

    எனவே சட்டங்களின் முதல் அடிப்படை கடமையைச் செய்தலை கண்காணித்தல், இரண்டாம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்.

    வாடகை வீட்டில் குடியிருப்பவரும் சரி, வீட்டை வாடகைக்கு விடுவோரும் சரி இருவருமே சமூகத்தின் உள்ளேதான் இருக்கிறார்கள். இருவருக்கும் கடமைகளும் உரிமைகளும் உண்டு.

    50,00,000 முதலீட்டிற்கு வங்கி வட்டியே மாதம் 45,000 ரூபாய் வருகிறது. அப்படி இருக்க முதலீடு செய்து வீட்டைக் கட்டி 9000 ரூபாய்க்கு வாடகைக்கு விடுபவர்கள் பெரும் தியாகிகள்.
    விலைவாசி தற்போது வருடத்திற்கு 12 சதவிகிதம் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறக்கக் கூடாது.

    அதிலும் கைவைத்து பங்கு வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்வதைப் போல, அங்கும் முதலுக்கே மோசம் வந்தால் ??? வாடகைக்கு விட என யார் வீட்டைக் கட்டுவார்கள்?

    அப்புறம் சொந்த வீடுகள் கட்ட இயலாதோர் எங்குதான் வசிப்பார்கள்?

    ஒப்பசந்தை விலைக்கு வாடகையை உயர்த்துவதற்காகத்தான் 11 மாத கால ஒப்பந்தமே போடப்படுகிறது. அதையும் நாம் அறிவோம். ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டோம்.

    ந்தத்தின் ஒவ்வொரு வருட இறுதியிலும் சராசரி சந்தை விலைக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கடமை வாடகைதாரருக்கு உண்டு. சுயலாபத்திற்காக அதை செய்வதில்லை நாம். காரணம் அதிக வாடகை கொடுக்கணுமே


    பின்னர் வாடகையை திடீரென உயர்த்துகிறார்கள் என கூப்பாடு போடுவது எந்த விதத்தில் நியாயம்?

    வீட்டுக்கு வாடகையை நிர்ணயிக்க வீட்டு உரிமையாளருக்கு உரிமை இருக்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

    இவ்வாறு அடுத்தவருக்கும் இருக்கும் உரிமையை மறுத்து நம் உரிமையை மட்டுமே நிலைநாட்ட முயற்சித்தால், எதிர்காலத்தில் யாருமே ஒரு வாடகை வீட்டில் 11 மாதத்திற்கு மேல் வாடகைக்கு நிலையாக இருக்க முடியாத நிலைக்குதான் நாம் சமூகத்தை தள்ளுகிறோம் என்பதையும் மறக்கக் கூடாது. ஏனென்றால் சொத்துப் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களின் மூலம் வருமானம் என்ற அவர்களின் உரிமைகளுக்கு உண்டாகும் பங்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்குக் கிடையாது.

    சுதந்திரம் என்பது பரஸ்பரம் ஒருவர் உரிமையை ஒருவர் மதித்து நடத்தலாகும்.

    6000 ரூபாய் மாதவாடகை. அது வீட்டு உரிமையாளருக்கு ஒரு வருமானம் அல்லவா. நீங்கள் வீட்டு வாடகைக்கு ரசீது கேட்டீர்கள். ரசீது கொடுத்தால் அவர் வரி கட்ட வேண்டும்.

    வரி 33 சதவிகிதம்.ஆகிறது. அதாவது 2000. அதாவது 6000 ரூபாய் வாடகைக்கு பதிலாக அவர்களுக்கு 4000 ரூபாய்தான் கிடைக்கும். அவர்களுக்கு 6000 ரூபாய் நிரந்தரமாக கிடைக்க வேண்டுமானால் 9000 ரூபாய் வாடகை வாங்கினால் மட்டுமே என்பதை வசதியாக மறைத்து விட்டு, புலம்புவது ஏன்?

    சோப்பு வாங்கினால் கூட உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி ஆகியவற்றை நுகர்வோர்தான் செலுத்துகிறோம். கம்பெனிகள் அவற்றை விலையில் சேர்த்திருக்கும்.

    நியாயமாக நான் 9000 மாதம் தருகிறேன். ரசீது கொடுங்கள் என கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்க் நஷ்டமில்லாமல் இருக்கும்.

    நீங்கள் கொடுத்த இரண்டாவது பதிவிற்கு,


    பி.ஹெச்.டி போன்ற படிப்பு படித்தவர்கள் நிறுவனங்களைத் தலைமை தாங்கும் அளவிற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் பட்டங்களை அடகு வைத்தல் என்பது அவர்களது தகுதியின்மையைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

    எனக்குத் தெரிந்து அப்படி யாரும் அடகு வைக்கவில்லை. (எனக்கு குறைந்தபட்சம் 30 பி.ஹெச் டி முடித்த நண்பர்கள் உண்டு.) ஏழைகளாக வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்று அனைவருமே நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    20 வருடங்கள் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அவர்களைக் கிளப்புவது ப்ரம்மப் ப்ரயத்னம். தில்லியில்.

    வீட்டுக்காரர்கள், இதுபோன்ற வாடகைதாரர்களைக் கிளப்பும் வழியே தனி. மொத்தமாக ஒரு தொகை பேசி அதற்குள் முடியுமானால் ஒரு ஃப்ளாட் வாங்கியே தந்து விடுகிறார்கள். சற்று தொலைவில் இருந்தாலும், வாடகைதாரர்கள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

    20 வருடங்கள் இருந்ததற்கான அத்தாட்சிகள் பலப்பல உங்களிடம் இருந்தாக வேண்டும். திருமணப் பத்திரிகை, கார்ப்பொரேஷனிலிருந்து பெறப்படும் குழந்தை பிறந்த அத்தாட்சி, இறந்தவர் அத்தாட்சி, வங்கிக் கணக்கு வைத்திருந்தீர்களானால் அவர்கள் அனுப்பும் மாதாந்திர கணக்கு, ஒரு உத்தியோகத்தில் இருந்தீர்களானால் அவர்கள் அனுப்பும் கடிதங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தபால் மூலமாக அனுப்பும் அட்ரஸ் எழுதப்பட்ட கடிதக்கவர்கள், அட்டைகள், வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடிய கடன் அட்டைகளின் கணக்குகளைத் தாங்கிய ஸ்டேட்மெண்டுகள், இன்னும் பற்பல சான்றிதழ்கள் தங்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்.

    இவ்வளவு அத்தாட்சிகள் இருக்கும் போது .... சராசரி மனிதனிடம் இவைகளில் ஒருசில கட்டாயம் இருந்தாக வேண்டும் .... தாங்கள் ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை?

    தாமரைஜி சொன்னது போல் எங்கோ உதைக்கிறது..

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.

    லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...

    டெல்லி நொய்டாவில் செய்வது போல யாரையும் ஒரே வாடகை வீட்டில் 3 வருடத்திற்கு மேல இருக்க விடவே கூடாது...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    இதிலிருந்து என்ன தெரியுதுன்னா...

    டெல்லி நொய்டாவில் செய்வது போல யாரையும் ஒரே வாடகை வீட்டில் 3 வருடத்திற்கு மேல இருக்க விடவே கூடாது...
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஆனால் ஒவ்வொரு மூன்று வருடத்தொருமுறை வீட்டை புதுப்பிக்கவேண்டும், அதற்கு காசுக்கு எங்கே போவது. அதனால்தான் வாடகையையும் ஏற்ற வேண்டியதாகிறது.

  8. #20
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    என்ன தான் நாம் நமது கடமையில் சரியாக இருந்தாலும் சில சமயங்களில் வீட்டு உரிமையாளர்கள் அவர்கள் கடமையில் இருந்து தவறி விடுகிறார்கள்

    அதற்கு காரணம் கேட்பார் பேச்சுக்கு ஆடுவதால் தான் என நினைக்கிறேன்

    ஒப்பந்தங்கள் சரியாக போட்டாலே பிரச்சினைகள் வரும்போது ஒப்பந்தமே இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

  9. #21
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    சரியான பதில் கூறினால் மனம் வருத்தப்படுவீர்கள் என்று அமைதியாக இருந்துவிட்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கயின் அடிப்படையில் வாடகைக்கு என் தகப்பனார் குடி சென்ற வீட்டில் இன்று நான் தலைஎடுத்துவிட்ட நிலையில் இரசீது கேட்டேன் என்றால் நான் கடைமயில் தவறிவிட்டடேன் என்றும் வீட்டு சொந்தக்கரரின் சொத்தை கொள்ளை அடித்துவிட்டேன் என்றும் கூறுவதில் இருந்து நுகர்வோரை நோகடிக்கும் நுகர்வோர் மன்றங்களின் போக்குத்தான் தெரிகிறது. இரசீது கேட்பதில் உள்ள சிக்கல்களை பற்றி அல்லவா இங்கு விவாதிக்க வேண்டும்? இன்று ரூ10000 வாங்குபவர் அதற்க்கு இரசீது கொடுக்கமாட்டார் என்பது மட்டும் அல்லாமல் அரசாங்கத்துக்கும் எந்த வரியும் செலுத்தப் போவதில்லை. அடிப்படையில் நிலைமை நுகர்வோரை சூரையாட வசதியாக இருக்க நுகர்வோர் நீதிமன்றங்கள் என்பதும் வக்கீல்களிடம் மாட்டிக்கொண்டு முழி பிதுங்குவதற்கு என்பதாகவே உள்ளது என்பதல்லவா என் கருத்து. வக்கீல்களின் வில்லங்க போக்கை விசாரிக்காத நுகர்வோர் நீதி மன்றம் என்பது Fraud

  10. #22
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by karikaalan View Post
    20 வருடங்கள் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அவர்களைக் கிளப்புவது ப்ரம்மப் ப்ரயத்னம். தில்லியில்.

    இவ்வளவு அத்தாட்சிகள் இருக்கும் போது .... சராசரி மனிதனிடம் இவைகளில் ஒருசில கட்டாயம் இருந்தாக வேண்டும் .... தாங்கள் ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை?
    ===கரிகாலன்
    மந்தைவெலி டெல்லியில் இல்லை. மேலும் தன் மகன் குடும்பம்... என்று கூறப்பட்ட காரணத்திற்க்கு எந்த கோர்டிலும் அப்பீல் இல்லை. 20 வருட உறவு என்பதிற்க்கு நான் கொடுத்த மரியாதை என்பதும் ஒரு உண்மை

  11. #23
    புதியவர்
    Join Date
    14 Nov 2010
    Posts
    20
    Post Thanks / Like
    iCash Credits
    9,023
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நானும் 32 வயதுவரை வாடகைவீட்டில் குடியிருந்தவன் தான். இப்போது வாடகை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஒரு கடையை 7 வருடங்களாக வாடகைக்கு எடுத்திருப்பவர்கள்...நான் அதை மாற்றியமைத்துக் கட்டப்போகிறேன்...அதனால் தயவுசெய்து காலி செய்யுங்கள் என்று சொன்னால்....இவ்வளவு முதல் போட்டுவிட்டோம்....உடனே காலி செய்ய முடியாது(இவ்வளவுக்கும் நான் அவர்களுக்கு மூன்றுமாதம் அவகாசம் கொடுத்தேன்) இதே ஏரியாவில் இதைப்போலவே(இளிச்சவாய ஓனர்) கிடைத்த பிறகு காலி செய்கிறேன் என்று சொல்கிறார்கள். வெறும் இரண்டாயிரம் கொடுத்துவிட்டு பல லட்சங்கள் மதிப்புள்ளக் கடையை சொந்தமாக்கிக்கொள்ள...வக்கீல் தேடுகிறார்கள்.

    லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...2G விற்றோ சம்பாதித்துக் கட்டியதல்ல அந்தக் கட்டடம்...பிற்கால வருமான ஆதாரத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டது. இதற்கு உரிமை கொண்டாடும் அவர்களைப் போலத்தான் இருக்கிறது உங்கள் பதிவும். சந்தை நிலவரத்தை மனதில் கொள்ளாமல்....அதிக வாடகைக்காக காலி செய்யச் சொல்கிறர்கள் என்று சொல்வதே அடிப்படைத் தவறு....அதற்கும் மேல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க நினைப்பது....அடேங்கப்பா.....என்னத்த சொல்றது....?
    வாடகையில் வரும் வருமானம் உழைத்து வரும் வருமானம் என்பது தாங்கள் எவ்வாறு பண்பட்டவர் என்பதை காட்டுகிறது! சந்தை மதிப்பு என்பது இது நாள் வரை அங்கு தன் உழைப்பால் கடை நடத்துபவர் முயற்சியில் உயர்ந்தது. அடுத்தவர் உழைப்பை சொந்தம் கொண்டாடும் நீங்கள்தான் தமிழகத்தின் தலைசிறந்த ஓனர்!! லஞ்சம் வாங்கியோ, கொள்ளையடித்தோ...இல்லாமல் எப்படி சார் சொந்த வீடும் கடையும் கட்ட முடியும்? கொள்ளை அடிக்கிறோம் என்று கூட தெரியாமல் கொள்ளை அடிக்கும் உங்களைப்போன்ற அப்பாவி ஓனர் இருக்கவே முடியாது சார்!!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •