Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: வெள்ளைக் காகிதம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0

    வெள்ளைக் காகிதம்

    கருப்பு,சிவப்பு என பேதம் இல்லை,
    எனவே நிறவெறி அற்ற சமூகமாய்
    அறிவிக்கிறேன் உன்னை..

    பொருளாதார ஏற்றத்தாழ்வில்
    நீயும் ஒடுக்கப் படுகிறாய்
    பேப்பர் பந்தாய் மாறுகையில்..

    காயப்படுத்த எண்ணம் இல்லாத காரணத்தினால்,
    போர்களத்தில்,
    சமரசப் உடன்படிக்கைகளே உன் மேல் எழுதப்படுகின்றது..

    முதல் குட்டு,
    முதல் சபாஷ்
    இரண்டையும் நீ வாங்கி விடுகிறாய்
    ஒரு மாணவனுக்கு கிடைக்கும் முன்,

    முதல் கண்ணீர்,
    முதல் முத்தம்
    இரண்டையும் நீ ஏந்திக் கொள்கிறாய்
    ஒரு காதலனுக்கு கிடைக்கும் முன்,

    உன்னை அடித்தும்,திருத்தியும்
    தன்னை வளர்த்த கவிஞர்கள் ஏராளம்..

    கவிஞன் கசக்கி எறிந்த வெள்ளை காகிதத்தில்
    ஒரு கர்வம் ஒளிந்திருக்கும்,
    அவனை ஒரு படி ஏற்றி விட்டோமென..

    தொழில்நுட்பமும்,கணிப்பொறியும் வளர்ந்து விட்டபோதிலும்,

    எல்லா உயிருனுள்ளும் இருக்கின்றது,
    ஏதோ ஒரு புதிய நோட்டு புத்தகத்தின் உன் வாசம்..

    எல்லா குழந்தையினுள்ளும் மிதக்கின்றது,
    ஏதோ ஒரு காகிதக் கப்பலில் உன் நினைவுகள்..

    இறுதியாய் ஒரு கேள்வி,
    உயிரற்ற பொருள் நீ என்றால்,
    உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
    -பிரேம்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அழகான சிந்தனை. முதல் குட்டு, முதல் முத்தம்...பிரமாதமான வரிகள். வித்தியாசமாய் வந்தக் கவிதை வரிகள். வாழ்த்துக்கள் பிரேம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0
    மிக்க நன்றி திரு,சிவா..வாழ்த்துக்களுக்கு நன்றி..

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வெண் மை பூசிய காகிதத்தின்
    உண்மைகள் உணர்த்தினீர்!
    பேனா முனை உழுது விதைத்த
    எழுத்துகளுக்கு
    உணர்வின் உரமூட்டி வளர்த்து
    அறுவடை செய்திட
    எங்களை ஏவிவிட்டீர்!

    அமோக மகசூலில் உம் பங்கு
    அன்பான பாராட்டுகள் மட்டுமே!.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by kkkkkk2006 View Post
    இறுதியாய் ஒரு கேள்வி,
    உயிரற்ற பொருள் நீ என்றால்,
    உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
    வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது
    தொடர்ந்து எழுதுங்கள்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கீதம் & ஆதவா..

    கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்...


  7. #7
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    காகிதத்திற்கு கவிதை...
    அருமை நண்பரே!
    நல்ல சிந்தனை! பாராட்டுக்கள் பல..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by PremM View Post
    உன்னை அடித்தும்,திருத்தியும்
    தன்னை வளர்த்த கவிஞர்கள் ஏராளம்..

    ......
    ........
    இறுதியாய் ஒரு கேள்வி,
    உயிரற்ற பொருள் நீ என்றால்,
    உணர்வுகளை எப்படிச் சுமக்கிறாய்?
    -பிரேம்
    நான் ரசித்த அழகு வரிகள்....

    பிரேம்... வடிக்கும் முன் நீங்கள் ரசித்து இருந்திருக்க வேண்டும்..
    இல்லையேல் இவ்வளவு அழகான வார்த்தைகள் அமைவது கடினம்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    இறுதி வரிகள் அருமை....

    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்....!
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #10
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Feb 2007
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    15,831
    Downloads
    29
    Uploads
    0
    தங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி பென்ஸ் & செல்வா..
    @பென்ஸ் - கண்டிப்பாக எல்லா வரிகளையும் ரசித்து எழுதுவதுண்டு..
    இதை எழுதுகையில் ஒரு காகிதம் நம்மை அறியாமல் ,நம் வாழ்வில் இத்தனை வடிவத்தில் ஒரு உறவு வைத்திருப்பதை எண்ணி வியந்தேன்...

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வெள்ளைக் காகிதம்-கவி
    வெகு அருமை.

    வாழ்த்துக்கள் பிரேம்.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பார்த்ததும் கிறுக்கத் தூண்டும் வெள்ளைக்காகிதம்...

    சில சிற்பமாவதும், சில சித்திரமாவதும்,
    சில சிறுகதையாவதும், சில கவிதையாவதும்
    வெள்ளைக்காகிதம் தன்மேல் அனுமதிக்கும் தழும்புகளே...

    இந்தத் தழும்புகளின் விளிம்பு தாண்டிப் பார்த்த கவிதை அற்புதம்...

    இந்த வெண்மைப் பக்கங்கள்
    தம்மீதான தழும்புகளை
    முதன்மைப்படுத்துவதனால்
    அத்தழும்புகள் அழகியலாவது
    அற்புதம்...
    அது வெள்ளைக் காகிதம் தரும்
    பெரும் கற்பிதம்...

    பாராட்டு...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •