99 + 9 = 9
இந்த சமன்பாடு தவறு என்பது நமக்குத் தெரியும். ஒரு ஐந்து எழுத்து ஆங்கில வார்த்தையைச் சேர்த்தால் இந்த சமன்பாடு சரியாகும். அது என்ன?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தங்களுடைய முதல் விடையான DOZEN என்பதே சரி. ஐந்து எழுத்துள்ள ஆங்கில வார்த்தையை ஒருமுறை சேர்க்கவேண்டும் என்பது விதி. சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
ஓர் அரசனுக்கு ஏழு மகள்கள் இருந்தனர். அவனிடம் ஒரு முத்துமாலை இருந்தது. அந்த முத்துமாலையில் 49 முத்துக்கள் இருந்தன. முதல் முத்தின் விலை ஒரு ரூபாய். இரண்டாம் முத்தின் விலை இரண்டு ரூபாய். மூன்றாம் முத்தின் விலை மூன்று ரூபாய். இப்படியே 49 ம் முத்தின் விலை 49 ரூபாய். கேள்வி என்னவென்றால் , அரசன் அந்த முத்துக்களைத் தன் ஏழு மகள்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும். முத்துக்களின் எண்ணிக்கையும், மதிப்பும் சமமாக இருக்கவேண்டும் .
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
மிகவும் சரியான விடை. ஒவ்வொரு மகளுக்கும் ஏழு முத்துக்கள்; அவற்றின் மதிப்பு ரூ. 175 . இக்கணக்கை 7 x 7 மாயச்சதுரம் அமைத்து விடை கண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
கொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள் “அண்ணே! என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்”
“அடேய்! நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க . அதனால உள்ளயே இருக்கேன். அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க”
“அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா கடன தள்ளுபடி பண்ரேன்னி வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.”
“ஏய்! என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே! சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்”.
“உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.”
“அட போடா நூறு பைசாகூட இல்ல.”
‘அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்?”
“ஏண்டா? வாத்தியார் ரொம்ப வயசானவரோ?
“எப்படிண்ணே கண்டிபிடிச்சீங்க! நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்!”
“இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க”
“நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. தரோம்.”
அப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.”
‘நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது கண்டு பிடிச்சிடுவோமில்ல.
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை அவர்களின் ஞாபக சக்தி மிகவும் அதிகம் என்று இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது.
10406 , 11864 ஆகிய இரண்டு ஐந்திலக்க எண்களின் பெருக்குத்தொகை = 123456784 ஆகும்.
123456789 என்ற எண் எந்த இரண்டு ஐந்திலக்க எண்களின் பெருக்குத்தொகை ஆகும் ?
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.
10821 X 11409 = 123456789
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks