தாமரை அவர்களின் விடை சரியானது.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
முதலில் இருந்த பையன்கள் மற்றும் பெண்கள் முறையே X, Y என்று கொள்வோம்...
15 மாணவர்கள் வெளியேறியவுடன் 1 மாணவனுக்கு இரண்டு பெண்கள் வீதம் இருந்தனர்
==> (X - 15)/Y = 1/2 ==> Y = 2 X - 30
45 பெண்கள் வெளியேறியவுடன் 1 பெண்ணுக்கு 5 மாணவர்கள் வீதம் இருந்தனர்.
==> (X - 15)/(Y - 45) = 5/1 ==> 5Y = X +210
இரண்டையும் சேர்த்து விடை கண்டால் ,
X = 40; Y = 50
வானை அளப்போம்!! கடல் மீனை அளப்போம்!!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
0,1,2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்களை ஒரேஒரு முறைப் பயன்படுத்தி
கீழ்க்கண்ட கூட்டல் கணக்கில் எண்களை நிரப்பவும்.
..X X X
..X X X
...........
X X X X
..........
நான் கிராமத்தில் வயல்வெளி ஓரமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன்.
வழியில் ஒரு விவசாயி சில ஆடுகளையும்,சில வாத்துகளையும் மேய்
த்துக் கொண்டிருந்தான்.உன்னிடம் எத்தனை ஆடுகள்,எத்தனை வாத்து
கள் உள்ளன என்று கேட்டேன்.அதற்கு அவன் மொத்தம் 60 கண்களும்,
86 கால்களும் உள்ளன என்று சொன்னான்.எனில் அவனிடம் எத்தனை
ஆடுகள்,எத்தனை வாத்துகள் உள்ளன?
எந்த ஆட்டுக்கும் வாத்துக்கும் நொள்ளைக் கண்ணு / நொண்டிக்கால் இல்லை அப்படின்னு வச்சுக்குவோம்.
ஆட்டுக்கு 4 காலு.. வாத்துக்கு 2 காலு
ஆட்டுக்கும் வாத்துக்கும் தலா இரண்டே கண்கள்தான். எனவே கண்களை வைத்துப் பார்க்க
மொத்த ஆடு / வாத்துகள் எண்ணிக்கை 30.
கால்களுக்கும் கண்களுக்கும் உள்ள வித்தியாசம் 86-60 = 26
இதை இரண்டால் வகுத்தால் ஆடுகளின் எண்ணிக்கை கிடைக்கும்
ஆடுகளின் எண்ணிக்கை வாத்துகளை விட 13
இப்போ மொத்த எண்ணிக்கையில் 13 ஐ கழிக்க
30 -13 = 17.
வாத்துகளின் எண்ணிக்கை 17.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியான விடையளித்த தாமரை அவர்களுக்கு நன்றி!
13 ஆடுகள்,17 வாத்துகள்
மொத்தம் 60 கண்கள் - 30 + 30 = 15 ஜோடிகள் + 15 ஜோடிகள்
மொத்தம் 86 கால்கள் - 17 * 2 + 13 * 4
ஜஸ்ட் மிஸ்.
ஒரு சோலையில் ஒரு தேன்கூடு இருந்தது.அதிலிருந்த சில தேனீக்கள்
தேன் சேகரிப்பதற்காகப் பறந்து வந்தன.மொத்த தேனீக்களில் ஐந்தில்
ஒருபங்கு மல்லிகை மலர்களின் மீது அமர்ந்தன.மூன்றில் ஒரு பங்கு
ரோஜா மலர்களின் மீது அமர்ந்தன.இவ்விரு தேனீக்களின் வித்தியாசத்
தின் மூன்று மடங்குத் தேனீக்கள் தாமரை மலர்களின்மீது அமர்ந்தன.
ஒரு தேனீ மட்டும் எந்தப் பூவின்மீதும் அமராமல் சுற்றிக்கொண்டு இருந்
தது.மொத்தம் பறந்து வந்த தேனீக்கள் எத்தனை?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks