ஒரு மாந்தோப்பில் மூன்று சிறுவர்கள் புகுந்து சில மாம்பழங்களைத் திருடிக்கொண்டு வந்தனர். இரவு நேரம். ஒரு பையில் மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டுத் தூங்கிவிட்டனர். நள்ளிரவில் ஒரு பையன் எழுந்து அவற்றில் ஒரு பழத்தைத் தின்றுவிட்டான்.மீதியுள்ள பழங்களின் எண்ணிக்கை மூன்றால் மீதியின்றி வகுபட்டது. தன் பங்கை எடுத்து மறைத்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான்.இரண்டாவது பையன் எழுந்தான். ஒரு பழத்தைத் தின்றான். மீதியுள்ள பழங்களின் எண்ணிக்கை மூன்றால் மீதியின்றி வகுபட்டது. தன் பங்கை எடுத்து மறைத்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான். மூன்றாவது பையன் எழுந்தான். ஒரு பழத்தைத் தின்றான். மீதியுள்ள பழங்களின் எண்ணிக்கை மூன்றால் மீதியின்றி வகுபட்டது.அவனும் தன் பங்கை எடுத்து மறைத்து வைத்துவிட்டுத் தூங்கிவிட்டான்.மீதியுள்ள பழங்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்துவிட்டால் மற்ற பழங்களின் எண்ணிக்கை மூன்றால் மீதியின்றி வகுபடும் என்றால் சிறுவர்கள் திருடிய பழங்கள் எத்தனை?
Bookmarks