ஒரு சமயம் நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் வேடிக்கைக் கணக்குகளைச் சொல்வதில் வல்லவர்.அவரிடம் வேடிக்கைக் கணக்கு ஒன்றைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.
"சரி பேப்பரும்,பென்சிலும் எடுத்துக்கொள்"-என்று சொன்னார்.ஒரு ஐந்திலக்க எண்ணை எழுதச் சொன்னார்.எண் பூச்சியத்தில் முடியக் கூடாது என்று சொன்னார்.நானும் அவருக்குத் தெரியாமல் 96452 -என்ற எண்ணை எழுதினேன்.ஐந்திலக்கங்களின் கூடுதலை எண்ணிலிருந்து கழிக்கச் சொன்னார்.நானும் 96452 -26 =96426 என்று கழித்து வைத்துக் கொண்டேன்.
கழித்து வந்த விடையிலிருந்து எதாவது ஒரு எண்ணை எடுத்து விட்டு மீதி எண்ணை சொல்லச் சொன்னார்.நானும் 96426 -என்ற எண்ணிலிருந்து கடைசியாக இருந்த 6 -ஐ எடுத்து விட்டு மீதி இருந்த 9642 -என்ற எண்ணைச் சொன்னேன்.
சிறிது நேரம் யோசித்து விட்டு " நீ எடுத்த எண் 6 தானே?"என்று கேட்டார்.
"ஆம்" என்று சொன்னேன்.மிகவும் விந்தையாக இருந்தது.
Bookmarks