Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 53

Thread: திருக்குறள் கதைகள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    திருக்குறள் கதைகள்.

    ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது.அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு,ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான்.வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

    படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது.படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக,படகு,மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது.ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது.நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான்.பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.இவ்வாறு கட்டில்,பீரோ,கிரைண்டர்,மிக்சி,குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான்.ஓரளவு பாரம் குறைந்தவுடன்,படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது.படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.

    கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,"கவலைப்படாதே,இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மைவிட்டுப் போகாதிருந்தால்,நம்முடைய உயிர்,நம்மைவிட்டுப் போயிருக்கும்.நம்முடைய அருமைக் குழந்தைகளையும்,நாம் இழந்திருப்போம்.நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே"-என்று ஆறுதல் கூறினான்.அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர்மல்க,அப்படியே தன கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.

    என்பது குறள்.ஒருவன்,எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ,அந்தந்தப் பொருட்களினால்,அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.
    Last edited by M.Jagadeesan; 05-11-2010 at 11:46 AM.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2010
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    14,651
    Downloads
    0
    Uploads
    0
    குறளும், கருத்துக் கதையும் அருமை.

    வானவர்கோன் பதிவகம்
    இணையத்தால் இணைவோம்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by vaanavarkhon View Post
    குறளும், கருத்துக் கதையும் அருமை.
    நன்றி வானவர்கோன்

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

    திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் அனைத்தையும் ஒரே திரியின்கீழ் தொகுத்தளிக்கலாம் என்பது என் கருத்து.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

    திருக்குறள் கதைகள் என்ற தலைப்பில் அனைத்தையும் ஒரே திரியின்கீழ் தொகுத்தளிக்கலாம் என்பது என் கருத்து.
    சரி அவ்வாறே செய்கிறேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    யானைப் போர்.

    என் மகளுடைய திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன.திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் வேகமாக நடந்துகொண்டிருந்தன.பக்கத்து ஊருக்குச் சென்று நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.வழியில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள அடர்ந்த வனப்பகுதியைக் கடக்கவேண்டும்.பஸ் வசதி கிடையாது.மாலை மணி மூன்று.இருட்டுவதற்குள் அந்த வனப்பகுதியைக் கடந்து விடவேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தேன்.இருட்டிவிட்டால் கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம். எனவே விரைவாக நடந்தேன்.

    காட்டின் நடுப் பகுதிக்கு வந்தபொழுது திடீரென்று இடி இடித்தது போல பெரிய ஓசைக் கேட்டது.எதிரே நான் பார்த்த காட்சி என்னைக் குலை நடுங்க வைத்தது.இரண்டு ஆண் யானைகள் பயங்கரமாகப் பிளிறிக்கொண்டு ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்தன.அவைகளின் பிளிறல் சத்தம் அந்த வனாந்திரம் முழுவதும் எதிரொலித்தது.முயல், நரி போன்ற சிறு விலங்குகள் அலறி அடித்துக் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் தஞ்சம் புகுந்தன.யானைகள் இரண்டும் மூர்க்கத் தனமாகப் போரிட்டுக் கொண்டிருந்தன.ஒன்றையொன்று ஆவேசமாகத் தாக்கிக் கொண்டன. இரண்டு மலைகள் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி.

    யானைகள் சுழன்று சுழன்று போரிட்டன.இருபதடி தூரத்தில் நான்.நம்மீது மோதிவிட்டால் என்ன ஆகுமோ என்ற பயத்தில், பக்கத்தில் இருந்த ஒரு உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டேன். பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன், பயம் விலகிவிட்டது.யானைகள் போரிடுகின்ற அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.யானைகளின் மத்தகங்களில் இருந்து ரத்தப் பெருக்கு ஏற்பட்டு, ரத்தம் தும்பிக்கைகளின் வழியாக வழிந்துகொண்டிருந்தது.மோதிக்கொண்ட வேகத்தில், ஒரு யானையின் தந்தம் முறிந்து கீழே விழுந்தது.வலிகாரணமாக அந்த யானையால், தொடர்ந்து போரிட முடியவில்லை.பயங்கரமாகப் பிளிறிக் கொண்டு,காட்டுக்குள் ஒடி விட்டது.மற்றொரு ஆண்யானை, அதை விரட்டிக் கொண்டே அதன் பின் சென்றது.

    யானைப்போர், ஒரு வழியாக முடிந்தது.இனி ஆபத்தில்லை என்று உறுதி செய்துகொண்டு,பாறையை விட்டு இறங்கிவந்தேன்.வேகமாக நடந்து ஊர் வந்து சேர்ந்தேன்.

    பத்து நாட்கள் கழித்து,என்மகளின் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர்.

    என்னுடைய நண்பர் ஒருவர் விடை பெற்றுச் செல்லும்போது,"மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டீர்கள்.சாப்பாடு பிரமாதம்; எவ்வளவு செலவாயிற்று?" என்று கேட்டார்.
    "சுமாராக ஐந்து லட்சம் வரைக்கும் செலவாயிருக்கும் என்று எண்ணுகிறேன்" என்று பதில் சொன்னேன்.
    "வங்கியில் கடன் ஏதும் வாங்கினீர்களா?" என்று நண்பர் கேட்டார்.
    "இல்லையில்லை; கடன் ஏதும் வாங்கவில்லை.சென்ற ஆண்டு நான் ஒய்வு பெற்றேன்.அதனால் வந்த பணப்பயன்கள் யாவையும் சேமித்து வைத்திருந்தேன்.நல்ல வரன் வந்தது.பத்து பைசா கடன் வாங்காமல் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
    மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்.கையில் பணத்தை வைத்துக்கொண்டு திருமணம், வீடுகட்டுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும்பொழுது எவ்வித மன இறுக்கமும் இருக்காது.அதில் ஏற்படும் இன்பமே அலாதிதான்" என்று சொல்லி முடித்தார்.

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை.

    என்பது குறள். தன கையிலே பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலைச் செய்தல் என்பது மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப் போரைக் காண்பதற்கு ஒப்பாகும் என்பது இக்குறளின் பொருள்.
    Last edited by M.Jagadeesan; 05-11-2010 at 11:50 AM.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பொய்யா விளக்கு.
    -----------------------------
    இராமகிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது சுமார் ஒன்பது வயதில், அவரது பிறந்த குலவழக்கப்படி, அவருக்குப் பிரம்மோபதேசம்,அதாவது பூணூல் போட்டு ஆன்மீக உபதேசம் செய்யும் உபநயனச் சடங்கு நடந்தது.அதில்,பூணூல் போட்ட சிறுவன்,மற்றவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும் என்று ஒரு கட்டம் உண்டு.பிச்சை ஏற்கும் கட்டம் வந்ததும்,இராமகிருஷ்ணருக்குத் தான் கொடுத்த வாக்கு ஒன்று நினைவிற்கு வந்தது.தனது அன்னைக்குப் பலவகையிலும் உதவி செய்து அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாக நடந்து வந்தாள் தானி என்னும் ஒரு கருமானின் மனைவி.அவள் தன்மேல் அன்பு காட்டியதன் விளைவாக,"உபநயனத்தன்று,என்னிடம் பிச்சை ஏற்பாயா?" என்று கேட்டதற்கு,"ஏற்பேன்" என்று வாக்களித்தார் இராமகிருஷ்ணர்.

    அந்த வாக்கு இப்போது நினைவிற்கு வந்தது. அண்ணாவிடம் அதைக்கூறி,அவளிடமிருந்துதான் முதலில் பிச்சை ஏற்கப் போவதாகக் கூறினார்.உடனே அண்ணா வெகுண்டார்,"தாழ்ந்த குலப் பெண்ணிடம் பிச்சை ஏற்பது மரபல்ல" என்றுகூறி "அவளிடம் பிச்சை ஏற்கக்கூடாது" என்றார்.

    ஆனால் இராமகிருஷ்ணர்,"அவளுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்றால் நான் உண்மை நெறியினின்று தவறியவன் ஆவேன்.உண்மை நெறியை நான் கடைப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பூணூல் அணிவதால் பயன் ஏதும் இல்லை" என்று கூறிப் பிடிவாதமாக தானியிடமிருந்து பிச்சை ஏற்றுத் தன வாக்கினைக் காப்பாற்றினார்.

    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.

    புற இருளை நீக்குகின்ற சூரியன்,சந்திரன்,தீபம் போன்ற விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல.அகத்தே ஏற்றப்படுகின்ற "உண்மை" என்னும் விளக்கே சான்றோர்களுக்கு அழகு தருவதாகும்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஜகதீசன், எளிமையான கதைகள் - குறள் விளக்கம் என்று கொண்டு செல்கிறீர்கள். எளிமையான கதைகளே குழந்தைகளுக்கு குறள் கற்றுக் கொடுக்க உகந்த வழியாகும். இதே மாதிரி அவர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைகளையே கொடுத்தீர்களென்றால் அது மிக உபயோகமாக இருக்கும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஜகதீசன், எளிமையான கதைகள் - குறள் விளக்கம் என்று கொண்டு செல்கிறீர்கள். எளிமையான கதைகளே குழந்தைகளுக்கு குறள் கற்றுக் கொடுக்க உகந்த வழியாகும். இதே மாதிரி அவர்களுக்கு ஏற்ற மாதிரியான கதைகளையே கொடுத்தீர்களென்றால் அது மிக உபயோகமாக இருக்கும்.
    தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கூற்றம் குதித்தலும் கைகூடும்
    -----------------------------------------------
    மார்க்கண்டேயர் என்பவர் மிருகண்டு முனிவர் என்பவருடைய புதல்வர்.மிருகண்டு முனிவர் மக்கட் பேற்றை விரும்பித் தவம் செய்தபோது இறைவன் தோன்றி, "நூறாண்டுகள் வரையில் வாழ்ந்திருக்கக் கூடிய அறிவற்ற புதல்வன் வேண்டுமா? அன்றி அறிவுடையவனாய் என்பால் அன்புடையவனாய் பதினாறே ஆண்டுகள் மட்டும் உலகில் வாழ்ந்திருக்கக் கூடிய புதல்வன் வேண்டுமா?"-என்று கேட்டார்.மிருகண்டு முனிவர் இறைவனை நோக்கிச்,"சில ஆண்டுகளே வாழ்ந்தாலும்,அறிவுடையவனாய்ச் சிவத் தொண்டனாக விளங்கக் கூடிய சிறுவனே எனக்கு வேண்டும்" என்று கேட்டார்."அவ்வாறே ஆகுக" என்று இறைவனும் அருள் புரிந்தார்.

    இறைவன் திருவருள் செய்தபடி மார்க்கண்டேயர் பிறந்தார். அறிவில் சிறந்து விளங்கினார்.பதினாறாம் ஆண்டின் இறுதியில் மகனை இழக்கவேண்டுமே என்று பெற்றோர் வருந்தினர்.செய்தியை உணர்ந்த மார்க்கண்டேயர் இறைவனை நோக்கித் தவம் புரிந்தார். தம் உயிர் கொண்டுபோக வந்த யமனையும் வென்று என்றும் பதினாறு ஆண்டுடையவர் என்னுஞ் சிறப்பையும் அடைந்தார்.விடா முயற்சியைப் பற்றுக் கோடாகக் கொண்டால் ஊழையும் வெல்லலாம் என்பதை இவர் உலகுக்கு உணர்த்தினார்.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

    தவத்தின் ஆற்றலால், எமனையும் வெல்லமுடியும் என்பது இக்குறளின் கருத்து.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    குறள் தேர்வும் அதற்கான விளக்கக் கதைகளும் வெகு சிறப்பு. குறளைப் பொருளுடன் எம் மனதில் இருத்தும் முயற்சியில் உங்களுக்கு வெற்றியே!

    பாராட்டுகள் ஐயா.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    குறள் தேர்வும் அதற்கான விளக்கக் கதைகளும் வெகு சிறப்பு. குறளைப் பொருளுடன் எம் மனதில் இருத்தும் முயற்சியில் உங்களுக்கு வெற்றியே!

    பாராட்டுகள் ஐயா.
    நன்றி கீதம்

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •