Results 1 to 7 of 7

Thread: நதி சொன்னது.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    நதி சொன்னது.

    நதி சொன்னது;
    நான்தான் கடலை நிரப்புகிறேன்

    கடல் சொன்னது;
    என் உப்பைத் தின்றுதான் எல்லோரும் வாழ்கிறார்கள்.

    உப்பு சொன்னது:
    உப்பில்லா பண்டம் குப்பையிலே.

    குப்பை சொன்னது:
    குப்பைத் தொட்டி என்வீடு-என்வீட்டில்
    குப்பையும் கொட்டுவார்கள்-சிலசமயம்
    குழந்தையையும் கொட்டுவார்கள்.

    குழந்தை கேட்டது:
    பெற்றெடுத்த தாயே -பெரும்பாவம் செய்தாயே
    குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே
    பெண்குழந்தை என்றதினால்
    பேதலித்துப் போனாயோ?
    கண்ணென்றும் மணி என்றும்
    கற்கண்டுக் கட்டி என்றும்
    பொன்னென்றும் பூவென்றும்
    போற்றி எனைக் கொஞ்சாமல்
    குப்பைத் தொட்டியிலே வீசும் அளவுக்கு
    குற்றமென்ன செய்தேன்? கூறிடுவாய் என்தாயே

    தாய் சொன்னது:
    என்னருமை மகளே என்னை நீ மன்னிப்பாய்
    பாவிநான் இப்போது உயிரோடு இல்லையடி
    ஆவியாய் இருந்துனக்கு ஆசி வழங்குகிறேன்
    குறையாகப் பிறந்தாலும் தப்பில்லை ஆனால் நீ
    முறையாகப் பிறக்கவில்லை ஆதலினால் இவ்வுலகம்
    ஏசுமே என்றஞ்சிக் குப்பைத் தொட்டியிலே
    வீசி எறிந்திட்டேன் வீண்பாவம் செய்திட்டேன்
    கதியேதும் இல்லாமல் கரையேதும் காணாமல்
    நதியிலே குதித்திட்டேன் என்னுயிரை மாய்த்திட்டேன்

    நதி சொன்னது:
    நான்தான் கடலை நிரப்புகிறேன்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுழன்றடித்தது வாழ்வாதாரம்.
    சுழற்றியடிக்கிறது கவிச்சாரம்.

    பாராட்டுகள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    சுழன்றடித்தது வாழ்வாதாரம்.
    சுழற்றியடிக்கிறது கவிச்சாரம்.

    பாராட்டுகள்.
    நன்றி.கீதம் அவர்களே.

    தங்களின் பின்னூட்டமே ஒரு கவிதைதான்.
    Last edited by M.Jagadeesan; 26-10-2010 at 06:11 AM.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    மிக அருமையாக கருத்துக்களைப் பின்னி எழுதியிருக்கிறீர்கள்.

    அழகான கவிதை.

    பாராட்டுக்கள்!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by கண்மணி View Post
    மிக அருமையாக கருத்துக்களைப் பின்னி எழுதியிருக்கிறீர்கள்.

    அழகான கவிதை.

    பாராட்டுக்கள்!!!
    நன்றி கண்மணி அவர்களே.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல பின்னல்!!!!

    பாராட்டுகள்.

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நதிதான் கடலை நிரப்புகிறது....பாவப்பட்ட உடல்களாலா....

    நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •