Results 1 to 4 of 4

Thread: மீட்டெடுத்து தொலைதல்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0

    மீட்டெடுத்து தொலைதல்

    அவன் கவிதைகள் கொண்டே
    அவன் விவரிக்கபட்டான்.
    அவனுடைய வார்த்தைகளுக்குள்
    அவன் வாழ்க்கையை பொருத்தினர்.

    காதல் குறித்து சிலாகித்தபோதும்
    அதன் வலி சொல்லி கதறிய போதும்
    அவை அவனுடையதெனவே கூறினர்.
    யாவும் கற்பனையே என்றவன் சொன்னதை
    யாரும் ஏற்பதாய் இல்லை.

    தனிமை குறித்த கவிதைகளில்
    உறங்காமல் கழித்த இரவுகள்
    அவனுடையதெனவே பிரகடனப்படுத்தப்பட்டது.
    தனித்த இரவுகளின் அழுகுரல்
    அவன் அறையிலிருந்தே கேட்பதாக
    அழுத்தமாய் நம்பினர்.
    யாவும் கற்பனையே என்றவன் சொன்னதை
    யாரும் ஏற்பதாய் இல்லை.

    கவிதைகளுக்குள் சிறைபட தொடங்கியவன்
    தன்னை மீட்டெடுக்கும் பொருட்டு
    ஒரு மரணக் கவிதையை எழுதிய நாளில்
    அவன் இறந்து போனதாய்
    உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.
    இம்முறை அவனிடம் இருந்து
    எந்த மறுப்பும் இல்லை.
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பலசமயங்களில் இப்படி நேர்வதுண்டு. கற்பனையென கதறினாலும்...கண்டுகொள்ள யாருமிருப்பதில்லை...அதன் தொடர்ச்சியாய்...கவிஞனே...அந்தக் கற்பனை உலகத்துக்குள் தன்னை ஆழ்த்திக்கொண்டுவிடுகிறான்.

    இன்னும் பல அர்த்தங்களை இந்தக் கவிதைக் கொண்டிருக்கும். எனக்கு விளங்கிய வரையில் இவ்வளவுதான் தெரிந்தது. வாழ்த்துக்கள் சசி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    மிக்க நன்றி அண்ணா...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    20 Aug 2010
    Posts
    175
    Post Thanks / Like
    iCash Credits
    14,651
    Downloads
    0
    Uploads
    0
    நடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்!

    வானவர்கோன் பதிவகம்
    இணையத்தால் இணைவோம்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •