ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
Last edited by M.Jagadeesan; 14-10-2010 at 06:10 PM.
இட்லிக்குக் கவிதை எழுதியிருக்கீங்க
வாழ்த்துக்கள்.
இது வெண்பா முறையில் எழுதப்பட்டதா? எனில் தளை தட்டுகிறதே!
கவனிக்கவும்!
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இட்லியும் சாம்பருக்கும் கூட கவிதை...
அருமை
வேகும் - தேமா - மா முன் நிரை வரவேண்டும்.. வந்தது “இட்“ - நேர்
இட்டலியுடன் - கூவிளங்கனி - கனிச்சீர் வெண்பாவில் வராது.
இட்டலிக்கு - கூவிளங்காய் - காய் முன் நேர் வரவேண்டும், வந்தது “இணை” - நிரை
இணையான - புளிமாங்காய் - காய் முன் நேர் வரவேண்டும் - வந்தது “உண” நிரை
முழக்கிடுவாய் - கருவிளங்காய் - காய்முன் நேர்(பு) வரவேண்டும் வந்தது “முரசு” நிரைபு.
இவற்றைக் களைந்தால் வெண்பா சரியாக இருக்கும்....
அன்புடன்
ஆதவா.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
ஆதவாவோட பின்னூட்டம் இட்லிக்கு சாம்பார் இல்லாதக் குறையைப் போக்கிடிச்சு. அவர் சொன்ன எல்லாக் காயையும் போட்டு கம கமன்னு சாம்பார் வெச்சுடலாம்...ஹி...ஹி...
கவிதை நல்லாருக்கு ஜகதீசன். வாழ்த்துக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
சுவைதரும் தட்டு.
பாராட்டுகள், ச’மையல்’காரர்களுக்கு
வெண்மாவால் வந்த இட்டலிக்கு
வெண்பாவால் ஒரு புகழாரம்!
வட்டிலே இட்டலி கண்டதும்
வடிவாய் வந்ததோ கவிதை?
பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks