ஜாதி மதம்
குலம் கோத்திரம் பார்த்து
உற்றார் உறவினர் கூடி நடத்தும்
எல்லா திருமணங்களும் ஜெயிப்பதுமில்லை...
ஜாதி மத பேதமின்றி
மன ஒற்றுமையையே
வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு செய்யும்
காதல் திருமணங்கள்
எல்லாம் தோற்பதுமில்லை...!
ஜாதி மதம்
குலம் கோத்திரம் பார்த்து
உற்றார் உறவினர் கூடி நடத்தும்
எல்லா திருமணங்களும் ஜெயிப்பதுமில்லை...
ஜாதி மத பேதமின்றி
மன ஒற்றுமையையே
வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு செய்யும்
காதல் திருமணங்கள்
எல்லாம் தோற்பதுமில்லை...!
உண்மைதான். ஆனா இப்பல்லாம் உருகி உருகிக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினவங்கதான் அதிகமா கோர்ட் வாசல்ல நிக்கறாங்க.
ஆக....
பத்துப்பொருத்தம் பார்த்து
செய்துவைத்த திருமணமும் ஜெயிப்பதில்லை
ஒத்தைப் பொருத்தமும் பார்க்காமல்
செய்துகொண்ட காதல் திருமணங்களும் ஜெயிப்பதில்லை
உள்ளப்பொருத்தத்தை ஒவ்வொரு நொடியும்
புதுப்பித்துக்கொண்டு தொடரும்
இல்வாழ்க்கையில் தோல்வியுமில்லை ஜெயமுமில்லை
நல்ல வாழ்க்கை மட்டுமே உண்டு....
வாழ்த்துக்கள் கோபி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இருந்தாலும்..லவ் மேரேஜில இருக்கிற..சந்தோஷம் வேற எதுலயும்..வராது..
முன்ன பின்ன அறியாத ஒரு பெண்ணை காட்டினா எப்டி சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்..??
பெண்ணை நிச்சயம் பண்ணிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணுகிறவரையுள்ள இடைப்பட்ட காலத்தில் காதலியுங்கள் (திருமண தேதிவரையுள்ள)......காதலித்த மாதிரியும் ஆயிடுச்சு....பெற்றவங்க பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணியது மாதிரியும் ஆயிற்று....திருமணத்திற்கு முன்பே அறிமுகம் ஆனது மாதிரியும் ஆயிற்று......பரஸ்பரம் பகிர்ந்து கொண்டது மாதிரியும் ஆச்சு...ஒரே கல்லுல....நிறைய...இப்ப இந்த மாதிரிதான்....(டிரன்ட்)
இந்த பெண்ணைத்தான் நீ காதலிக்கனும்னு காட்டுவீங்க...அவங்கள நாங்க காதலிக்கணுமா..?
அதெல்லாம் தானா வரணும் சார்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks