Page 15 of 16 FirstFirst ... 5 11 12 13 14 15 16 LastLast
Results 169 to 180 of 181

Thread: அவரோ? இவரோ? எவரோ? (45 - 48)

                  
   
   
  1. #169
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    41. மனோஜ்
    42. ???

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #170
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதன் View Post
    40) எங்கக்கா யவனியக்கா

    41) ஜெகதீசன் ஐயா

    42) ரசிகன்

    43) தாமரையண்ணா
    யவனிகா மட்டும் சரி. முயற்சிக்கு பாராட்டுகள் ஆதன்.

    Quote Originally Posted by அக்னி View Post
    40. யவனிகா+அக்கா

    ஆதன் முந்திட்டாரு... அவர அப்புறமா பாத்துக்கிறேன்...

    ஏற்கனவே எழுதப்பட்டவங்க திரும்பவுமா... அப்படி இருக்காது ஆதன்...
    சரிதான் அக்னி. முன்பே இடம்பெற்றவர்கள் இதுவரை மறுபடியும் இடம்பெறவில்லை.

    Quote Originally Posted by தாமரை View Post
    43. ஆரென்
    44. பென்ஸ்
    உங்களுக்குத் தெரியாதவர்களா? வாய்ப்பே இல்லை. பாராட்டுகள் தாமரை அவர்களே.

    Quote Originally Posted by அக்னி View Post
    41. மனோஜ்
    42. ???
    பாராட்டுகள் அக்னி. மனோஜ் மிகச்சரி. அந்த இன்னொருவரையும் கண்டுபிடித்துவிடுங்களேன். இவர் கவிஞர்தான். ஆனால் ரசிகன் இல்லை.

  3. #171
    இளம் புயல் பண்பட்டவர் p.suresh's Avatar
    Join Date
    28 Nov 2010
    Location
    புதுச்சேரி
    Posts
    105
    Post Thanks / Like
    iCash Credits
    19,230
    Downloads
    7
    Uploads
    0
    பிரேம்?
    ஒரு வெற்றியின் முகவரிக்காக
    நூறு தோல்விகளிடம் விசாரிக்க
    வேண்டியிருக்கும்

  4. #172
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by p.suresh View Post
    பிரேம்?
    மிகச்சரி, பாராட்டுகள் சுரேஷ்.

  5. #173
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    45

    காந்தவிழிகளால் கவரப்பட்டு
    காலச்சமுத்திரத் துளிகளில்
    கரைந்துவிட்ட சூழ்நிலைக்கைதி!
    காதல் தீயின் தகிப்பை
    கனவுக் கண்ணீரால் தணிக்கும்
    கடைசி இருக்கைக் களவாணி!
    புரியாமலும் புன்னகைக்காமலும்
    பாவையும் பார்வையும் புதிராட...
    நிழல்நண்பனெனத் தொடரும்
    நட்புள்ள நாய்க்குட்டி!


    46
    புளூட்டோவில் குடியேறிவிட்ட
    இந்தப் பெருந்துறைக்காரருக்கு
    பூமியில் வசிப்போரோடு
    பூர்வ ஜன்மப் பகையோ? நட்போ?
    புளகாங்கிதத்துடன் அவிழ்த்துவிடுவதெல்லாம்
    புளுகுமூட்டையோ? புனுகுமூட்டையோ?
    பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


    47
    தினமொரு கவிபுனையும்
    திறத்தால் கவிப்புயலாம்;
    இனிதாய்க் காதல் சொல்லும்
    இதத்தால் கவிக்குயிலாம்;
    மனங்குளிரப் பொழியும்
    மனத்தால் கவிமுகிலாம்;
    இனிக்கவியில்லை என்னும் சேதிமட்டும்
    இனிக்கவில்லை இன்றைய தேதிமட்டும்!

  6. #174
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    47.கவிதா

    http://www.tamilmantram.com/vb/member.php?u=222



    ( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #175
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by இளசு View Post
    47.கவிதா

    http://www.tamilmantram.com/vb/member.php?u=222



    ( இத்திரி மூலம் உங்கள் மனம், அறிவு, கவனம், அன்பு ஆகியவற்றின் பரிமாணங்கள் மீண்டும் நிரூபணம். பிரமிக்கிறேன் கீதம் அவர்களே..)
    நன்றி இளசு அவர்களே....

    கவி தரவில்லை என்பதால் கவிதா என்றீர்களா?

    இன்னும் முயன்றால் இனிதாய்க் கண்டுபிடிக்க இயலுமே...

    தினமொரு கவி என்பது இவருக்கான துப்பு.

  8. #176
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    48

    கமலம் நெற்றியில் திலகம்!
    கமழும் மலரும் சுடரும்!
    நீரேந்திய செம்மாமலரின்
    மாரேந்திய சோதி சொல்லும்
    மகத்தான சேதியென்ன?
    சோதனையோ? போதனையோ?
    வேதனையோ? சாதனையோ?

  9. #177
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    தாமரை அண்ணாவைத்தான் கேக்கனும்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #178
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    முதல் பக்கம் மட்டும் தற்சமயம் வாசித்தேன். வாயடைத்தேன்.. மலைத்தேன் மாந்தியதுபோல் மலைத்தேன். துளித்தேன் துய்ந்தபோதே இத்தனை துள்ளலா என துயிர்த்தேன். கவிதை கனம் கண்டு வியர்த்தேன். சொல்லின் வளம் கண்டு அயர்ந்தேன். என்ன சொல்லிப் பாராட்ட என களைத்தேன்.. படித்தேன் என்றுமுடித்தேனில்லை. இன்னும் பல படித்தேன் பக்கங்களில் காணப்படுகின்றன என உணர்ந்தேன். விரைவில் அதையும் வாசித்தே உணர்வுகளை அள்ளித்தெளிப்பேன்..

    பாராட்டுகள் கீதம்..!

  11. #179
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    முதல் பக்கம் மட்டும் தற்சமயம் வாசித்தேன். வாயடைத்தேன்.. மலைத்தேன் மாந்தியதுபோல் மலைத்தேன். துளித்தேன் துய்ந்தபோதே இத்தனை துள்ளலா என துயிர்த்தேன். கவிதை கனம் கண்டு வியர்த்தேன். சொல்லின் வளம் கண்டு அயர்ந்தேன். என்ன சொல்லிப் பாராட்ட என களைத்தேன்.. படித்தேன் என்றுமுடித்தேனில்லை. இன்னும் பல படித்தேன் பக்கங்களில் காணப்படுகின்றன என உணர்ந்தேன். விரைவில் அதையும் வாசித்தே உணர்வுகளை அள்ளித்தெளிப்பேன்..

    பாராட்டுகள் கீதம்..!
    நானே மறந்த இந்தத் திரியைக் கவனித்துப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி கலைவேந்தன். தங்கள் ஊக்கமிகு வார்த்தைகள் கண்டு இன்னும் எழுதும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. விரைவில் தொடர்வேன். மீண்டும் நன்றி தங்களுக்கு.

  12. #180
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    அனைத்துப் பக்கங்களையும் அலசிப்பார்த்துவிட்டேன்..

    விடுகதைகள் இடுவோரைக் கண்டிருக்கிறேன்.
    விடுவிடுவென கதைகள் அளப்’போரை’ விட்டு ஓடி இருக்கிறேன்..
    கதைகள் விடுவோரை வியந்திருக்கிறேன்..
    கவிதைகள் தருவோரைக் கவனித்திருக்கிறேன்..
    விரு விரு கவிதைகளைச் சுவைத்திருக்கிறேன்..
    விடு விடு கவிதை பிழைக்கட்டும்
    தமிழும் சேர்ந்தே தழைக்கட்டும் என்றே கண்டித்திருக்கிறேன்..
    கவிதைக் கொலைவாளால் கொல்பவரைச் சாடி இருக்கிறேன்..
    விடுகவிதைகள் இட்டு விடுபடாது அனைவரையும்
    நடுநிலையில் பாராட்டிய கீதமை இன்று கண்டேன்..

    மன்றத்தின் பேரிலும் பதிவுகளை ஆழ்ந்து வாசித்து உணர்ந்த அனுபவத்திலும்
    பதிவர்களின் மனம் கனிந்த நிலைகளை மனம் கணித்த நிலையினில்
    உதித்திட்ட இவ்வருங்கவித்துளிகளைக் கண்டு வியந்தே நிற்கிறேன்..!

    வாழ்க தமிழ்மன்றம்.. வாழிய கீதம்.. மனம் நிறைந்ததெனக்கின்று..!

Page 15 of 16 FirstFirst ... 5 11 12 13 14 15 16 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •