Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 181

Thread: அவரோ? இவரோ? எவரோ? (45 - 48)

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    அவரோ? இவரோ? எவரோ? (45 - 48)

    (1)

    தாவும் பொன்மானொன்று
    தானைத் தலைவனாய்
    மன்றப் புல்வெளியில்
    மேய்கிறது, பாய்கிறது,
    ஆய்கிறது, வேய்கிறது,
    ஓய்ந்தமரும் வேளையில்
    உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!

    *****

    (2)

    கடவுளையும், கன்னியையும்
    கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
    கவிதை தருவானவன்,
    கவிதைத்தரு ஆனவன்,
    கவிதை தரும் வானவன்!

    *****

    (3)

    அந்தத்துவம் இந்தத்துவம்
    என தத்துவங்கள் பல விதைப்பான்;
    எந்தத்துவமானாலும்
    பந்துக்குள் காற்றாய்
    பைந்தமிழில் அடைப்பான்;
    கவிதைகளை வாழவைத்து
    அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!

    *****

    (4)

    கடிவாளமிடப்படா
    கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
    விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
    கைவரப்பெற்றவன்,
    மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
    மூர்த்தி பெரிது, அவர்
    கீர்த்தி அதனினும் பெரிது!

    *****

    (5)

    மன்றத்தின் மணிமுடி
    வயசிலோ வணங்காமுடி!
    வலதுகால் வைத்து வருவோரை
    ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
    இந்த இனியவருக்கு
    மரியாதை வழங்காமையே
    மரியாதை வழங்கலாம்!

    *****

    (6)

    உள்ளுவதெல்லாம்
    உயர்வாய் உள்ள....
    துள்ளியதெல்லாம்
    தொய்ந்து துவள....
    உள்ளதையெல்லாம்
    சொல்வதா? கொல்வதா?
    குழப்பமேகத்துக்குள்
    குளிர்நிலவு!

    *****

    (7)

    சீறிவரும் புரவியொன்று
    சிறு ஓய்வு கொண்டதின்று!
    மாறிவரும் நாளில்
    மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
    சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
    சேணத்தில் சுமந்துசெல்லும்!

    *****

    (8)

    அழகிய கையெழுத்துக் கண்டால்
    பழகிய எவரும்
    பழிப்பரோ தமிழை?
    பண்பு, பரிவு, பாசமென்னும்
    முப்பரிமாணப் பெட்டகம்,
    பெயரும், அவரும்!

    *****

    (9)

    இரவில் இல்லாதவர்,
    இரவில் இருப்பவர்!
    படம்பார்த்து கதைசொல்வதுபோல்
    இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
    பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
    படைக்கிறாரே பல புதியமுகங்களை!

    *****
    Last edited by கீதம்; 10-06-2011 at 05:01 AM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    தாவும் பொன்மானொன்று
    தானைத் தலைவனாய்
    மன்றப் புல்வெளியில்
    மேய்கிறது, பாய்கிறது,
    ஆய்கிறது, வேய்கிறது,
    ஓய்ந்தமரும் வேளையில்
    உதிர்க்கிறது தங்கப்புள்ளிகள்!


    *****

    புழுக்கை போடும் பொன்மான் யாருக்கோ அம்மானாமே..

    தானைத் தலைவன் என்கிறீர் நீர்.. தானே தலைவன் என்றிருப்பதாக சிலர் சொல்லக் கேள்வி..

    ஆனாலும் இந்தமான் புல்லை மட்டுமல்ல, புலாலையும் மேயுமாம்.


    ஆய்ந்து பாய்ந்து வேய்ந்து மேய்ந்து ஓய்ந்து அப்படின்னு படிச்சி காய்ந்து போன கோய்(யி)ந்து தா - மரை யோ?

    (2)

    கடவுளையும், கன்னியையும்
    கசக்கிப் பிழிந்து சாறெடுத்து
    கவிதை தருவானவன்,
    கவிதைத்தரு ஆனவன்,
    கவிதை தரும் வானவன்!


    *****
    மிச்சத்தை எல்லாம் விட்டுட்டீங்க.. ஆதவா தானே..

    (3)

    அந்தத்துவம் இந்தத்துவம்
    என தத்துவங்கள் பல விதைப்பான்;
    எந்தத்துவமானாலும்
    பந்துக்குள் காற்றாய்
    பைந்தமிழில் அடைப்பான்;
    கவிதைகளை வாழவைத்து
    அவற்றின் தலைகளைக் காவு கொடுப்பான்!


    *****
    "த்துவ"த்தில் "இச்"சுவம் ஆதன் தான்

    (4)

    கடிவாளமிடப்படா
    கருங்(க்)குதிரைகளின் வேகத்துக்கு
    விரல்களால் ஈடுகொடுக்கும் வித்தை
    கைவரப்பெற்றவன்,
    மன்றத்தாயின் வரம் பெற்றவன்!
    மூர்த்தி பெரிது, அவர்
    கீர்த்தி அதனினும் பெரிது!


    *****
    மூர்த்தின்னு சொல்றீங்க.. தக்ஸோ?
    (5)

    மன்றத்தின் மணிமுடி
    வயசிலோ வணங்காமுடி!
    வலதுகால் வைத்து வருவோரை
    ஊக்குவித்து இசைபாடும் மகுடி!
    இந்த இனியவருக்கு
    மரியாதை வழங்காமையே
    மரியாதை வழங்கலாம்!


    *****

    அமரன்... ஹி ஹி அமரனைப் பத்தி உங்களுக்குச் சரியா தெரியலை...

    (6)

    உள்ளுவதெல்லாம்
    உயர்வாய் உள்ள....
    துள்ளியதெல்லாம்
    தொய்ந்து துவள....
    உள்ளதையெல்லாம்
    சொல்வதா? கொல்வதா?
    குழப்பமேகத்துக்குள்
    குளிர்நிலவு!


    *****

    ஹை!!! மதி அங்கிள்...

    (7)

    சீறிவரும் புரவியொன்று
    சிறு ஓய்வு கொண்டதின்று!
    மாறிவரும் நாளில்
    மன்றமெங்கும் துள்ளல் நடைபோடும்,
    சோர்ந்து நிற்கும் சொந்தங்களைத் தன்
    சேணத்தில் சுமந்துசெல்லும்!


    *****

    சிவா,ஜி அண்ணாதானே...

    (8)

    அழகிய கையெழுத்துக் கண்டால்
    பழகிய எவரும்
    பழிப்பரோ தமிழை?
    பண்பு, பரிவு, பாசமென்னும்
    முப்பரிமாணப் பெட்டகம்,
    பெயரும், அவரும்!


    *****
    அன்புரசிகன் அண்ணா!! அவர் கையெழுத்து தானே

    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
    (9)

    இரவில் இல்லாதவர்,
    இரவில் இருப்பவர்!
    படம்பார்த்து கதைசொல்வதுபோல்
    இவர் கதைசொல்லி, படங்காட்டுவார்.
    பிரம்மனுடன் ரகசியபோட்டியோ?
    படைக்கிறாரே பல புதியமுகங்களை!


    *****

    ஒரே ஃபோட்டோவில் பிரம்மா ஆன இரவி அண்ணா!!!


    எல்லாம் சரியா கணிச்சிருக்கனா?

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆஹா.. சொக்க வைக்கிறீர்களே கீதமக்கா..

    கலக்கல்ஸ்..

    பன்முகம் கொண்ட பலரின் சில முகத்தை மட்டுமே புரிந்திருக்கிறீர்களோ??

    ஆய்வு செய்தால் ஒவ்வொருவர் பற்றியும் பல சொல்லலாம்..

    கண்மணியக்கா சரியா சொல்லியிருக்காங்களா சொல்லுங்க.. அமரன் அண்ணா பற்றி இன்னும் ஆகழ்வாராய்ச்சி செய்யுங்க.. அவர் அவ்வளவு எளிதில் அரிதியிட முடியாதவர்...

    தமிழ்ல ஏதும் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கீங்களா அக்கா?? அசத்துங்க.. பேச்சு மூச்சு இல்லை.. பாராட்டுகள் அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    மன்ற பெரியவர்கள் பட்டியலில் நான் கடைசியில் முதலாய் ...
    தகுதி உண்டா தெரியவில்லை !!!
    நன்றி கீதம்
    உங்கள் மனதில் இந்த சகோதரனுக்கும் இடம் தந்ததற்கு ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தமிழ்மன்றத்தை நேசிப்போர் பலரிருக்கையில் தமிழ்மன்றத்தின் பதிவாளர்களையும் நேசிக்கும் ஒருவர்!

    புரிந்துகொள்ளலும் பகிர்தலும் நன்றாக இருக்கிறது. பெயரிற்கேற்ப பதிவுகள்

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    புதிர் போட்ட கீதத்துக்கு ஒரு "ஓ" போட்டால் ., விடை தேடிய கண்மணிக்கு ஒரு "ஓஹோ" போடலாம்....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    பிரமாதம்.............. பிரமாதம்..............
    பிரமாதம்................

    என்னே ஒரு கவித்துவம்
    என்ன ஒரு அடையாள மையம்
    என்ன ஒரு வரியமைப்பு
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கணிப்பை பாராட்டுவதா....கவிச்சுவையை பாராட்டுவதா....
    கலக்கியிருக்கீங்கம்மா கீதம்.
    கண்மணி அசத்தலோ அசத்தல்.

    பூ சொன்ன மாதிரி...அமரனை ஒரு கட்டுக்குளோ....கோணத்திலோ...அறுதியிட முடியாது.

    தாமரையும் அங்கனமே....

    வாழ்த்துக்கள் கீதம் & கண்மணி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அசத்திட்டீங்க.. அதிலும் குளிர்நிலவு பாவம்..

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அக்காவ் அசத்தி புட்டீங்க...

    கண்மணி அக்காவின் விளக்கம் எல்லாரையும் தெளிவாக கண்டுக்க உதவியது..

    //தலைகளைக் காவு கொடுப்பான்!//

    நெனச்சு நெனச்சு சிரிச்சிட்டு இருந்தேன் அக்கா
    அன்புடன் ஆதி



  11. #11
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    ஆதவா..ஆதவா... போட்டி ஆரம்பமாயிடுச்சி.

    கீதம்.. வார்த்தைகளை நயமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.கவிதையாகவும் இருக்கிறது. விடுகதை போலும் தொனிக்கிறது.கலக்குங்க..[எல்லாரையும் கண்மணி வந்துதான் கண்டு பிடிச்சி தரவேண்டியிருக்கு..]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by கண்மணி View Post
    (1)

    புழுக்கை போடும் பொன்மான் யாருக்கோ அம்மானாமே..

    தானைத் தலைவன் என்கிறீர் நீர்.. தானே தலைவன் என்றிருப்பதாக சிலர் சொல்லக் கேள்வி..

    ஆனாலும் இந்தமான் புல்லை மட்டுமல்ல, புலாலையும் மேயுமாம்.


    ஆய்ந்து பாய்ந்து வேய்ந்து மேய்ந்து ஓய்ந்து அப்படின்னு படிச்சி காய்ந்து போன கோய்(யி)ந்து தா - மரை யோ?

    (2)

    மிச்சத்தை எல்லாம் விட்டுட்டீங்க.. ஆதவா தானே..

    (3)

    "த்துவ"த்தில் "இச்"சுவம் ஆதன் தான்

    (4)


    மூர்த்தின்னு சொல்றீங்க.. தக்ஸோ?

    (5)

    அமரன்... ஹி ஹி அமரனைப் பத்தி உங்களுக்குச் சரியா தெரியலை...

    (6)

    ஹை!!! மதி அங்கிள்...

    (7)

    சிவா,ஜி அண்ணாதானே...

    (8)

    அன்புரசிகன் அண்ணா!! அவர் கையெழுத்து தானே

    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

    (9)

    ஒரே ஃபோட்டோவில் பிரம்மா ஆன இரவி அண்ணா!!!


    எல்லாம் சரியா கணிச்சிருக்கனா?
    கலக்கல் கண்மணியின்
    அலசல் வெகு அசத்தல்!
    புள்ளியைப் புழுக்கையாக்கியதில் மட்டும்
    மெல்லிய மனக்குடைச்சல்!


    Quote Originally Posted by பூமகள் View Post
    ஆஹா.. சொக்க வைக்கிறீர்களே கீதமக்கா..

    கலக்கல்ஸ்..

    பன்முகம் கொண்ட பலரின் சில முகத்தை மட்டுமே புரிந்திருக்கிறீர்களோ??

    ஆய்வு செய்தால் ஒவ்வொருவர் பற்றியும் பல சொல்லலாம்..

    கண்மணியக்கா சரியா சொல்லியிருக்காங்களா சொல்லுங்க.. அமரன் அண்ணா பற்றி இன்னும் ஆகழ்வாராய்ச்சி செய்யுங்க.. அவர் அவ்வளவு எளிதில் அரிதியிட முடியாதவர்...

    தமிழ்ல ஏதும் முதுகலைப் பட்டம் முடிச்சிருக்கீங்களா அக்கா?? அசத்துங்க.. பேச்சு மூச்சு இல்லை.. பாராட்டுகள் அக்கா.
    நன்றி, பூமகள். நான் தமிழில் இளங்கலை கூட இல்லை.
    உங்களுக்கான பதில் பின்னால் வருகிறது.

    Quote Originally Posted by Ravee View Post
    மன்ற பெரியவர்கள் பட்டியலில் நான் கடைசியில் முதலாய் ...
    தகுதி உண்டா தெரியவில்லை !!!
    நன்றி கீதம்
    உங்கள் மனதில் இந்த சகோதரனுக்கும் இடம் தந்ததற்கு ....
    Quote Originally Posted by Ravee View Post
    புதிர் போட்ட கீதத்துக்கு ஒரு "ஓ" போட்டால் ., விடை தேடிய கண்மணிக்கு ஒரு "ஓஹோ" போடலாம்....
    நன்றி, ரவி.

    Quote Originally Posted by விராடன் View Post
    தமிழ்மன்றத்தை நேசிப்போர் பலரிருக்கையில் தமிழ்மன்றத்தின் பதிவாளர்களையும் நேசிக்கும் ஒருவர்!

    புரிந்துகொள்ளலும் பகிர்தலும் நன்றாக இருக்கிறது. பெயரிற்கேற்ப பதிவுகள்
    தமிழ் மன்றம் என்பதே உறவுகளின் பந்தம்தானே? நன்றி, விராடன் அவர்களே.

    Quote Originally Posted by Nivas.T View Post
    பிரமாதம்.............. பிரமாதம்..............
    பிரமாதம்................

    என்னே ஒரு கவித்துவம்
    என்ன ஒரு அடையாள மையம்
    என்ன ஒரு வரியமைப்பு
    நன்றி, நிவாஸ்.

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    கணிப்பை பாராட்டுவதா....கவிச்சுவையை பாராட்டுவதா....
    கலக்கியிருக்கீங்கம்மா கீதம்.
    கண்மணி அசத்தலோ அசத்தல்.

    பூ சொன்ன மாதிரி...அமரனை ஒரு கட்டுக்குளோ....கோணத்திலோ...அறுதியிட முடியாது.

    தாமரையும் அங்கனமே....

    வாழ்த்துக்கள் கீதம் & கண்மணி.
    நன்றி, அண்ணா.

    Quote Originally Posted by மதி View Post
    அசத்திட்டீங்க.. அதிலும் குளிர்நிலவு பாவம்..
    நன்றி, மதி.

    Quote Originally Posted by ஆதன் View Post
    அக்காவ் அசத்தி புட்டீங்க...

    கண்மணி அக்காவின் விளக்கம் எல்லாரையும் தெளிவாக கண்டுக்க உதவியது..

    //தலைகளைக் காவு கொடுப்பான்!//

    நெனச்சு நெனச்சு சிரிச்சிட்டு இருந்தேன் அக்கா
    நன்றி, ஆதன்.

    Quote Originally Posted by த.ஜார்ஜ் View Post
    ஆதவா..ஆதவா... போட்டி ஆரம்பமாயிடுச்சி.

    கீதம்.. வார்த்தைகளை நயமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.கவிதையாகவும் இருக்கிறது. விடுகதை போலும் தொனிக்கிறது.கலக்குங்க..[எல்லாரையும் கண்மணி வந்துதான் கண்டு பிடிச்சி தரவேண்டியிருக்கு..]
    நன்றி, ஜார்ஜ் அவர்களே!

Page 1 of 16 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •