Results 1 to 3 of 3

Thread: எங்கோ சென்ற கவிதைகள்...

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் rambal's Avatar
    Join Date
    30 Mar 2003
    Location
    அன்பால் ஆன உலகம்
    Posts
    1,112
    Post Thanks / Like
    iCash Credits
    14,506
    Downloads
    0
    Uploads
    0

    எங்கோ சென்ற கவிதைகள்...

    எங்கோ சென்ற கவிதைகள்...

    முகவரி தவறிய
    வழிப்போக்கனாய்
    வழிதவறி
    எங்காவது
    அலைந்து கொண்டிருக்கலாம்...

    குப்பைத்தொட்டி முதல்
    கூலாங்கல் வரை
    எழுதியதால்
    சோர்ந்து போயிருக்கலாம்..

    இப்பொழுதெல்லாம்
    வானம் எப்போதும் மேகமூட்டமாய்
    இருப்பதால்
    எங்காவது
    பதுங்கியிருக்கலாம்..

    அல்லது மழையில்
    நனைந்து
    ஜலதோசம் ஏற்பட்டு
    மருத்துவரைக் காண
    சென்றிருக்கலாம்...

    இப்படி ஏதேனும்
    ஒரு காரணம் இருக்கலாம்..
    கவிதைகள் வராமல் போனதற்கு?

    நான் என் செய்வது?
    என்னிடம் வந்து சேரா கவிதைகளுக்கு..
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:39 PM. Reason: யுனிக்கோடாக்கம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nanban's Avatar
    Join Date
    05 Apr 2003
    Location
    துபாய்
    Posts
    3,203
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    47
    Uploads
    0
    வெற்றி பெற
    வெற்றியாளர்களின்
    மத்தியில் இரு
    என சொல் உண்டு........

    கவிதைகளின்
    மத்தியிலே
    இருந்தால்
    கவிதைகள்
    வாராது
    எங்கே போய்விடும்......?

    படைக்க வரவில்லை என்று
    பிரம்மனா
    கவலைப் படுவது......?

    வழிதவறி
    எங்கெங்கோ
    சுற்றியதாலே
    புதுப்புது
    அனுபவங்கள்
    பெற்று வரலாம்....

    சோர்ந்து போனதாலே
    புதுவழிகளைக்
    கண்டு வரலாம்.......

    ஜலதோஷம் பிடித்ததினாலே
    குரல் மாறிப்போய்
    வரலாம்........

    மருத்துவனைக் காண
    காத்திருந்த வேளையில்
    கவலையுடன் சம்பாஷித்த
    மனிதர்களைக் கண்டு
    புதுக் கருத்துகளுடன்
    வரலாம்.......

    எங்கு சென்றாலும்
    அடைத்து வைக்க
    முடியாத குரல் அல்லவா
    கவிஞனுடையது.......

    வரும்,
    மீன் குஞ்சா
    நீரைக் கண்டு
    கவலைப் படுவது?

    வரும்,
    கவிதை வரும்........
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:39 PM. Reason: யுனிக்கோடாக்கம்
    அன்புடன்



    நண்பன்
    -----------------------------------------------
    காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
    புறப்பட்டால் புயல்
    ------------------------------------------
    http://www.nanbanshaji.blogspot.com
    nanbans@gmail.com

  3. #3
    இளம் புயல்
    Join Date
    01 Apr 2003
    Location
    ȡâ¡, ɼ
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    நண்பனின் பதில் கவிதை தான் எங்களது உணர்வும்.

    "வரும்,
    மீன் குஞ்சா
    நீரைக் கண்டு
    கவலைப் படுவது?"

    இது உண்மைதான் என்று தெரிந்தும்

    "வரும்,
    கவிதை வரும்..........."

    இனிமேல் கவிதைகள் வரும், பல்வேறுபட்ட அனுபவங்களுடன் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
    Last edited by விகடன்; 25-04-2008 at 08:39 PM. Reason: யுனிக்கோடாக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •