யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்
அத்தருணத்தில்
வீரிட்டலறியது
என் அலைபேசி..
அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போல
பிரக்ஞை அறுபட
என்னை அவன் பார்த்தான்..
சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....
Bookmarks