Results 1 to 12 of 12

Thread: எழுதிக் கொண்டிருந்தான் அவன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    எழுதிக் கொண்டிருந்தான் அவன்

    யோசனையின்
    ஆழத்தில் இறங்கி
    எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

    அத்தருணத்தில்
    வீரிட்டலறியது
    என் அலைபேசி..

    அமைதியான உறக்கத்திலிருந்து
    எழுப்பப்பட்டவனை போல
    பிரக்ஞை அறுபட
    என்னை அவன் பார்த்தான்..

    சின்ன குறுகுறுப்புமின்றி
    அவ்வறையிலேயே நின்று
    பேசத்துவங்கினேன் நான்
    சத்தமாய்....
    Last edited by ஆதி; 24-09-2010 at 02:28 PM.
    அன்புடன் ஆதி



  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    தம்பி ஆதன்,

    சம்பவங்களை மட்டும் எழுதினா அது குறிப்பு
    கூடவே சங்கதிகளையும் குறித்தால் அது களிப்பு!!!


    அவன்
    மௌனத்தில் தொலைந்திருந்தான்
    நான்
    சப்தத்தில் தொலைந்திருந்தேன்

    இடைஞ்சல்
    ஒருவருக்கொருவர்..

    இப்படித்தானோ என்னவோ

    இரவும் பகலும்
    இடரும்பொழுதெல்லாம்
    சிவந்து போகின்றன
    கோபத்தில்..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    அவன் நீயாக
    நீ அவனாக...

    மாத்தி போட்டீங்கதானே?
    கவிதை நன்று!!

    Quote Originally Posted by அல்லிராணி View Post
    இரவும் பகலும்
    இடரும்பொழுதெல்லாம்
    சிவந்து போகின்றன
    கோபத்தில்..
    அக்கா..
    அது கோபமா ?
    நாணமா?
    செங்கனிவாய் கொடுத்த
    லிப்ஸ்டிக் கறையா ?

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    செங் "கனிவாய்"
    இடறிக் கொடுப்பதில்லை
    உரசிக் கொடுக்கும்..

    காலைச் சிவந்தது பயத்தில் வெளுக்கும்
    மாலைச் சிவந்தது வன்மத்தில் கருக்கும்

    நாணத்தில் கொடுத்தது
    வெளுக்குமோ? கருக்குமோ?

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    செங் "கனிவாய்"
    இடறிக் கொடுப்பதில்லை
    உரசிக் கொடுக்கும்..
    ?

    அதனால்தானே
    இடறலோ உரசலோ
    இல்லாமல் கொடுத்தேன்!!
    சொல்முத்தம்

    நாணம் என்ன நிறமோ
    நான் சொல்ல?

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by தீபா View Post
    அதனால்தானே
    இடறலோ உரசலோ
    இல்லாமல் கொடுத்தேன்!!
    சொல்முத்தம்

    நாணம் என்ன நிறமோ
    நான் சொல்ல?
    உதடும் உதடும்
    எழுத்தும் எழுத்தும்
    உரசாமலா
    சொல் முத்தம் ?
    அன்புடன் ஆதி



  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    உதடும் உதடும் உரசினால்
    காம யுத்தம்
    எழுத்தும் எழுத்தும் உரசினால்
    அறிவு பித்தம்
    உதடும் எழுத்தும்
    உரசினால்
    கலைமுத்தம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    Quote Originally Posted by aren View Post
    என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது
    இதை நான் வன்மையாக வழிமொழிகிறேன்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் அல்லிராணி's Avatar
    Join Date
    03 Jan 2006
    Posts
    361
    Post Thanks / Like
    iCash Credits
    10,875
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது
    எழுத்துக்கள் தெரிந்தவைதான்
    வார்த்தைகளும் தெரிந்தவைதான்
    வாக்கியக் கட்டும் தெரிந்ததுதான்

    உள்ளே சொருகி வைத்த பொருள்மட்டுமே தெரியாமல் தவிக்கிறீரோ?

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதன் View Post
    உதடும் உதடும்
    எழுத்தும் எழுத்தும்
    உரசாமலா
    சொல் முத்தம் ?
    உம்’மா’

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by அல்லிராணி View Post
    தம்பி ஆதன்,

    சம்பவங்களை மட்டும் எழுதினா அது குறிப்பு
    கூடவே சங்கதிகளையும் குறித்தால் அது களிப்பு!!!


    அவன்
    மௌனத்தில் தொலைந்திருந்தான்
    நான்
    சப்தத்தில் தொலைந்திருந்தேன்

    இடைஞ்சல்
    ஒருவருக்கொருவர்..

    இப்படித்தானோ என்னவோ

    இரவும் பகலும்
    இடரும்பொழுதெல்லாம்
    சிவந்து போகின்றன
    கோபத்தில்..
    நகுலனிடம் கற்று கொண்டேன் இந்த பாணியை ஒரு சம்பவத்தை மட்டும் விவரித்துவிட்டு.. கருத்தை படிப்பவர்களிடம் விட்டுவிவது..

    'ராமச்சந்திரனா என்றேன்

    ராமச்சந்திரன் என்றான்

    எந்த ராமச்சந்திரன் என்று

    நான் கேட்கவுமில்லை

    அவன் கூறவுமில்லை '


    - நகுலன்

    ராமச்சந்திரனை ஒரு ஆளாக மட்டும் எடுத்துக் கொள்ள கூடாது, ஒரு சம்பவமாக, ஒரு கவிதையாக, ஒரு பொருளாக, ஒரு எண்ணமாக, ஒரு தலைப்பாக இன்னும் பலவாக எடுத்துக் கொள்ளலாம்.. நமக்கு தெரியாத விஷயங்களை கூட நாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள எத்தனப்படுகிறோம் ஒரு அற்ப பெருமைக்காக. இதில் உள்ள தளங்கள் இன்னும் யோசிக்க யோசிக்க விரிவடையும்/மாறும்.....

    அதனால் தான் நானும் படிம கவிதையாக ஒரு சம்பவத்தை மட்டும் விவரித்துவிட்டுவிட்டேன், கருத்தை சொல்லாமல்...
    அன்புடன் ஆதி



Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •