அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.(72 )
இது அன்புடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற ஒருகுறள்.என்னுடைய ஐயமெல்லாம் "என்பு" என்ற அக்ரிணைச் சொல் உயர்திணைக்கு உரிய "அர்" விகுதியை ஏற்குமா என்பதுதான்.
"என்பும் உரிய பிறர்க்கு"-என்று இருந்தால் பொருத்தமாக இருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது.பல் இடுக்கிலே சிக்கிக்கொண்ட பாக்குபோல இந்த ஐயம் நெடுநாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின்றது.ஐயம் தீருமானால் மனம் அமைதி பெறும். யாராவது உதவுங்களேன்.
".
Bookmarks